
காது குத்துதல் பெண்ணின் வயதுக்கு வந்த
சடங்கு போன்றவற்றிக்கு இனி
போகக்கூடாது என்று தீர்மானித்து இருந்தேன்
மாமாவின் அழைப்பிற்கு மறுக்காமல்
பிரயத்தப்பட்டும் போகமுடியவில்லை
அந்த காலத்தில் உறவுகளை ஓன்றினைக்க
கலந்து பேச
பொழுது போக்க வீட்டு விழாக்களும்
திருவிழாக்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்
இப்போது பொழுது போக்க வீட்டுக்கு வீடு
ஏராளமான ஏற்பாடுகள் உள்ளன
விரல் நுனியில் காலத்தைப்போக்கும்
கருவிகள் உண்டு
இருந்தும் காது குத்துதல் பெண்ணின் வயதுக்கு வந்த
சடங்கு என்று கலர் கலராய் விளம்பரப்படுத்தி
பத்திரிக்கை வைத்து
ஒலிப்பெருக்கி வைத்து
மந்திரியை அழைத்து
விழா எடுக்கிறார்கள்
காரணம் ஒன்று செய்த பணத்தை வசூல் செய்வது
இரண்டு மாமனிடம் சீர் வாங்குவது
அல்லது தன் பணத்திமிரை கொளரவம் என்றபெயரில் ஊருக்கு காட்டுவது
இப்போது எவனோ ஒரு நடிகன் தன் பொரிக்கித்தனத்தை வெளிகாட்ட ஒரு படத்தில் போட்டதால்
எல்லா இளைஞர்களும் கம்மல் போட்டு சுத்துகிறார்கள்
காது குத்துதல் (கர்ணபூஷணம்)
காதுமடல்களில் ஓட்டை போட்டு அதில் நகைகளை மாட்டித் தொங்கவிடும் பழக்கம் இந்துமத ஆண், பெண்களிடம் இருக்கிறது. குழந்தைகளாக இருக்கும் போதே இதைச் செய்துவிடுகிறார்கள். காது குத்தல் என்று கூறுகிறார்கள். காது குத்தல் எனும் கெடல் குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. பொய் பேசுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல், போன்றவற்றைக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்றவற்றைக் குறிக்க நாமம் போடுவது எனக் கூறுகிறார்களே? அதைப் போல சாராயம் குடிப்பதை பட்டை அடிப்பது எனக் கூறுகிறார்களே, அதைப்போல இந்துமதச் சடங்குப் பெயர்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் குறிப்பிடப்படுகின்றன. அதைப் பற்றி யெல்லாம் இந்து மதக் காரர்களுக்குக் கவலை இல்லை.
இதை ஒத்துக் கொள்வதற்கான நேர்மை அற்றவர்கள் புதிய விளக்கம் தர முயல்கிறார்கள் உடம்பின் எல்லா நரம்புகளும் காது மடலில் இணைகின்றன; எனவே அங்கே ஓட்டைபோட்டு கடுக்கண் அணிந்தால், தொங்கட்டானைத் தொங்க விட்டால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்; ஆகவே காது குத்த வேண்டும். என்கிறார்கள். இது உண்மையா? மூடப்பழக்கவழங்களுக்கான காரணங்களை அறிவியலோடு இணைப்பது மாதிரியான சப்பைக்கட்டு கட்டுவதற்கு அவர்கள் முனைகிறார்கள் என்பதுதானே தவிர உண்மைகிஞ்சித்தும் கிடையாது. இம்மாதிரிச் சொன்போது பெரியார் கேட்டார் - காதில் ஓட்டை போட்டால் நரம்பு மண்டலம் சரியாக இயங்கும் என்பது உன்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் ஓட்டை போட்டே உன்னை உருவாக்கியிருப்பானே அப்படிச் செய்யாததிலிருந்தே அது தேவையற்றது, மடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ளலாமே! என்று கேட்டார் அறிவுஆசான் தந்தை பெரியார்.
ஒன்பது துளைகள் என்று பாட்டே எழுதினார் கண்ணதாசன் காதில்ஓட்டை அவசியம் என்றால் ஒன்பதோடு ஒன்று சேர்த்துப் பத்தாகப் படைத்திருப்பானே, பகவான்! காது குத்தல் பிறருக்குச் செய்தாலும் சரி, தம் குழந்தைகளுக்குச் செய்தாலும் சரி - குற்றம்தான்,தேவை அற்றதுதான், தவிர்க்கப்படவேண்டியது தான். தவிர்ப்பார்களா?
குழந்தையாக இருக்கும்போது காது குத்துதல், பெயர் சூட்டும் வைபவம், வயதுக்கு வந்ததும் பூப்பெய்தும் சடங்கு, நிச்சயதார்த்தம், தாலிக்கு பொன்னுருக்கல், வளைகாப்பு , கணவன் இறந்தால் அலங்காரங்களைத் துறக்கும் விதவைச் சடங்கு, என கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண்ணின் அடிமைத் தனத்தை அறிவிக்கும் விசேசங்கள் எல்லாவற்றிலும் அழகு நிழல் போல பின்தொடர்ந்து மிரட்டுகிறது.
No comments:
Post a Comment