Saturday, August 1, 2015



கலாம் பற்றிய விமர்சனம்
+++++++++++++++++++++++
தகுதியின் மையில் கல்லானாய்
வாழும் தலைவர்களின்
தகுதிகளை மறுபரிசீலனை
செய்யவைத்துவிட்டாய்

தலைவர்களுக்கெள்ளாம்
தர்மசங்கடம்
தன்னை மாற்றிக்கொள்ள
ஓர் அறிய வாய்ப்பு

எந்த தலைவனுக்கும்
இத்தனை விழிகள்
கண்ணீர் சிந்தியதில்லை
சிந்தப்போவதுமில்லை

மக்கள் நல்ல தலைமையை
தேடும் அடையாளத்தின் எழுச்சி இது
தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம்
மக்களின் மனங்களை வென்றிட
சுய நலமறந்த பொது நலத்துடன்
காந்தி, காமராஜ், பெரியார்
இப்போது கலாமை பின்தொடருங்கள்

கலாம் பற்றிய விமர்சனம்

1. கலாம் அறிவியலாளர் அல்ல. பொறியியலாளர். அவர் பெரிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு உலக அறிவியலாளர்கள் நடுவே பெரிய இடம் இல்லை.
2 கலாம் அரசியல்- சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லவில்லை. அரசு சார்பாளராகவே இருந்தார்.
3 கலாம் கல்வியை தனியார்மயமாக்குவது போன்றவற்றில் எதிர்க்கருத்து கொண்டிருக்கவில்லை. கல்விவணிகர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்
4 கலாம் இலக்கிய அறிவோ நுண்ணுணர்வோ கொண்டவராக இருக்கவில்லை. இலக்கியம், கலைகள், தத்துவசிந்தனை ஆகியவை பற்றி தட்டையான பார்வை கொண்டிருந்தார்.
5 கலாம் இந்தியாவை ராணுவமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ராக்கெட் தொழில்நுட்பம் பயனற்ற போர்வெறியை உண்டுபண்ணுவது. அவரது அறிவு அமைதிப்பணிகளில் பயன்படவில்லை. ராக்கெட் தொழில்நுட்பத்துக்குச் செலவிட்ட தொகைக்கு ரோடு போட்டிருக்கலாம்
6 கலாம் இஸ்லாமியராக இஸ்லாமிய அடையாளத்துடன் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்யவில்லை. இந்துச்சடங்குகளில் கலந்துகொண்டார். இந்துத் துறவிகளை மதித்தார். ஆகவே அவர் இஸ்லாமியப்பெயர்தாங்கி மட்டுமே.

இந்த விமர்சனம் எளிய மக்களுக்கு புரியாது
சுய நலம் கொண்ட அரசியல்வாதிகளை பார்த்து பார்த்து
சுய நலமில்லாத ஓர் நல்லவனை உயரத்தில் பார்த்ததன் பரவசம்
மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு நல்லவராய் இருப்பது அது அருகி விட்டது
தான் எதை நம்பினாரோ அதையே அவர் முன்வைத்தவர்.
அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.
இதை முழுமூச்சுடன் ஊடகவாதிகள் வெளிச்சம்போட்டதின் விளைவே.



அப்துல் கலாம்
+++++++++++++
காலம் கால்களை மாற்றி போட்டதால்
கலாம் காலமானார்
ஓர் படகோட்டியின் மகன்
பாராண்ட அதிசயம்
கடல் மீன்களோடு விளையாடிவனின்
கனவு விண் மீன்களுக்கு
விண்களம் ஏவிக்கொண்டிருந்தது

செயற்கை கோள்களில் ஏவிய அறிவை
செயற்கை கால்களில் ஏவியவன்
அறிவு வானமளந்தாலும்
மனம் மண்ணைச்சுற்றியே வந்தது
மதம் பிடிகாத மத யானை நீ
மாளிகையில் உடலிருந்தாலும்
மனம் எளிய மக்களை சிந்தித்திருக்கும்
அரச மாளிகையில்
ஆண்டியாய் வாழ்ந்தவன்

தலைமுறையை கனவு காணச்சொன்னவன்
அடுத்த த்லைமுறைக்காய்
கனவு கண்டவன்
தரையில் தவழ்ந்த
இந்திய வினவெளியை
அக்னி சிறகுகளில் ஏற்றி
அகிலத்தை வளம் வந்து ஆயுதம் செய்து
அற்புதம் படைத்தவன்

மனித நேயத்தில் மகுடம் தொட்டவன்
நடிகர்ளோடு கண்ட கனவுகளை தூக்கத்தில் களைத்து
இளைஞகளுக்கு தூங்கமுடியாத கனவு தந்தவன்
நேருவைவிட குழந்தைகளை
அதிகம் நேசித்தவன் நீயே

நீ மணமுடித்திருந்தால் சுய நலத்தோடு
ஓன்றிரண்டு வாரிசு இருந்திருக்கும்
இன்றோ இந்தியாவே உன் வாரிசானது

பதவிகளுக்காக, நாற்காலிகளுக்காக நாய்களாய் அலையும் உலகில்
முதல் குடிமகன் ஆகும் வாய்ப்பு இரண்டாம் முறை கிடைத்தும்
ஏற்க மறுத்த ஏந்தலிவன்

மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்லூரியில் மாணவர்களோடு
உரையாற்றிய போதே தன் இலட்சியத்துடன்
மண்விட்டு மறைந்த மகா உத்தமன்
ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில்
மாரடைப்பால் நீ மறையவில்லை
விதையாய் இளைஞரின் இதயத்தில்
விதைக்கபட்டிருக்கிறாய்



மதுக்கடை மற்றும் மதக்கடை
+++++++++++++++++++++++++
தமிழகம்
மத சகிப்புத்தன்மையின் இமயம்
இது பெரியார் விதைத்த விதை அந்த
ஆலமரத்தின் விழுதுகள்
அரசியல் ஆதாயம் தேடிகளாகிவிட்டனர்
வளரும்போது சமூக சிந்தனையும்
வளர்ந்தபின் சுய சிந்தனையிலும்
சிக்கிவிட்டார்கள்

சாலையின் நடுவே மேடையிட்டு
ஒரு வாரமாக ஆடிக்கூத்து அரங்கேருகிறது
பக்கத்தில் பயன்படுத்த இடம் இருந்தும்
காவல் துறை எப்படி அனுமதி
அளித்தார்கள் என்று தெரியவில்லை
இது ஓரிடத்தில் மட்டுமல்ல
தமிழ் நாடே இப்படித்தான் இருக்கிறது

கூத்தையும் கும்மாளத்தையும்
ஆட்டமும் ஆடுவோர் இடுப்பையும்
காட்ட சாலையின் நடுவில்தான்
நடக்கவேண்டுமா
பேரூந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்ற
அனைத்து போக்குவரத்தும் தேங்கி
கிடக்கிறது

மாற்று மதத்தவர்களைப்பற்றிய
கவலையே கிடையாது
ஆடி மாதத்தில் விடியற்காலை முதல்
இரவு வரை இடைவிடாத கச்சேரிதான்
இதில் கொடுமை எதுவென்றால்
பாடல்கள் யாவும் குத்துப்பாடல்கள்
தொடக்கத்தில் வினாயகர் பாடலோடு
துவங்குவதோடு சரி

ஏற்கனவே வழிபாட்டுத்தளங்கள்
பெரும்பாலும் சாலைகளின் நடுவில்தான் உள்ளன
இவைகளை தடுக்க
ஒன்று கூத்து நடத்துபவர்கள்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத
இடங்களில் நடத்த வேண்டும்

அல்லது மதுக்கடைகளை போல்
வழிபாட்டுத்தளங்களையும்
இடையூறு இல்லாத இடங்களில்
மாற்றி அமைக்க வேண்டும்
பழமையான வழிபாட்டுத்தளங்களை பாதுகாத்து
புதுப்புது வழிபாட்டுத்தளங்களுக்கு
தடை விதிக்கவேண்டும்

குரு, சாமியார்களுக்கு கட்டுப்பாடும்
குறைந்தபச்ச தகுதியும் ஏற்படுத்த வேண்டும்
பாலியல் குற்றங்களை குறைக்க
அவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு
செய்திடவேண்டும்
ஒரு வேளை உணவு
உண்டியல் முதல் அனைத்து வருமானமும்
அரசு கண்கானிக்கவேண்டும்
தின்று கொழுத்த மடங்களின்
கோடி கணக்கான சொத்துக்களை
கையகப்படுத்தி சமூக சேவையில்
ஈடுபடுத்தவேண்டும்

ஆண்மையுள்ள ஓர் அரசு அமையவேண்டும்
சாலைகளில் உள்ள மதுக்கடை மற்றும்
இந்த மதக்கடைகளையும் உடனடியாக இடித்துத்தள்ளவேண்டும்
நடக்குமா ?



பாகுபலி
+++++++|
சமண தீர்த்தங்கரான ரிசபதேவருக்கு நூறு புதல்வர்கள்
முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி
பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க,
இளைய மகனான பாகுபலி சகோதரனுடன்
அரியாசனத்திற்காக யுத்தத்தில் ஈடுபட
பாகுபலியே வெற்றி பெற்றாலும்
தமையனின் வாடிய முகம் கண்டு
மனமாறிவிடுகிறது அவனுக்கு
ராஜ்ஜியம் அனைத்தையும் விட்டுவிட்டு
முற்றும் துறந்த ஜைன மத துறவியாக வாழ்ந்திருக்கிறார்.

கர்நாடகத்தில் இவரது சிலை உள்ள இடத்திற்கு மைசூர்-ஹாசன் கிழக்காக 50 மீட்டர் பயணிக்கவேண்டும். பெங்களூரிலிருந்து சுமார் 160 கிமீ தொலைவில் இவ்விடம் உள்ளது. ஷ்ராவனபெலகோள நகரில் உள்ள வித்தியகிரி மலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல்லினால் வடிக்கப்பட்ட சிலையான கோம்மடேஸ்வரா பாகுபலி சிலை அமைந்திருக்கிறது. கி.மு 983 ஆண்டு கங்கரு வம்ச மன்னர்களால் இது கட்டப்பட்டிருக்கிறது.

பாகுபலி கோயில் மஹாராஷ்ராவில் கொல்ஹாபூரிலும் உள்ளது 28 அடி பாகுபலி சிலை 1935 நிறுவப்பட்டது



வாழ்வின் நெறிகளையும்
தூய ஒழுக்கத்தாயும்
போதித்த அற்புத மதம் இஸ்லாம்
அந்த மதத்தவர் பெருமை கொள்ளலாம்
அந்த மக்கத்து மாமலர்
குரானை தந்த குணமகன்
நபிகளை வணங்குவோம்
நான் சந்தித்த இஸ்லாமிய நண்பர்களை
நினைவுகொள்கையில்
கொஞ்சம் வருத்தமாக உள்ளது
தனி மனித ஒழுக்கம் தவறி
நேர்மையற்று வாழ்கிறார்கள்

ஒருவேளை தற்கால சூழ் நிலைக்கு
குரானை பின்பற்றி நடக்கமுடியவில்லையோ ?
அல்லது
நடைமுறையில் அவர்களுக்கு பின்பற்ற சிக்கலிருக்கலாம்
அல்லது
மாற்றுமதத்தவர் தவறு செய்வதால்
இவர்களும் சமரசம் செய்து கொள்கிறார்களோ
இருந்தாலும் இத்தனை அருமையான
மத போதனை கிடைத்தும்
5 வேளை தொழுகை செயுதும் தவறு செய்வது
வேதனையாகத்தான் இருக்கிறது
நல்ல ஆசிரியனும் குருவும்
கிடைக்காதவன் வாழ்வு
நல்ல மேய்ப்பன் இல்லாத மந்தையை போன்றது
எல்லாம் இருந்தும் தவறு செய்பவர்களை
என்ன சொல்வது
அவர்கள் தொழுகையை கடமையாக செய்யாமல்
ஓர் கடமைக்காக செய்பவராகவே தோன்றுகிறது



இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
+++++++++++++++++++++++++++++
இஸ்லாம் ஓர் பார்வை
கி.பி 571ல் சவுதியில் அப்துல்லா - ஆமினா தம்பதிகளுக்கு
ஒரே மகனாக நபிகள் பிறந்தார்
பிறக்கும் முன்பே தந்தையையும் 6 ஆண்டுகளில் தாயையும்
அடுத்த 2 ஆண்டுகளில் வளர்த்த பாட்டனாரையும் இழந்தார்
மிக மோசமான சமூக சூழ் நிலையிலும்
ஓழுக்கம், உயர்ந்த பண்பு, நேர்மை நாணயத்தோடு
வணிகம் செய்துவந்ததால்
செல்வ சீமாட்டி கஜீதா அம்மையார் தன் வாணிபத்தை
இவர் பொருப்பில் கொடுத்தார் கூடவே தன் இதயத்தையும் கொடுத்தார்
தன் 25 வயதில் 15 வயது மூத்த
கஜீதா அம்மையாரையே திருமணம் செய்து கொண்டார்
அவரைத்தவிர ஆயிஷா, ஹஃப்ஷா, உம்முலைமா
மனைவிகளும் உண்டு

தன் 40 வயதில் ரமலான் மாதத்தில் ஹிராஜ் குகையில்
தியானத்தில் இருக்கையில் ஞானம் பெற்றார்
இறைவன் அவரை ஓத உத்தரவிட்டார்
அதுமுதல் தன் 63 வயதில் இறக்கும் வரை அவர்
சொன்னதையெல்லாம் நபியின் மறைவுக்கு பின் ஹழ்ரத் அபுபக்கர் தொகுத்து
6666 வசனங்கள் கொண்ட குரானை வெளியிட்டார்

ஆக்கவும், காக்கவும், அழிக்கவும்
தனித்தனி கடவுள் இல்லை
இந்த உலகம் தானாகவும் தோன்றவில்லை
இறைவனின் விருப்பத்தில் தோன்றியது
அவன் விரும்பும் வரை உலகம் இயங்கும்

மனிதன் தானாகவோ தற்செயலாகவோ
பரிணாம வளர்ச்சியிலோ படைக்கவில்லை
மனிதருள் நல்லவர்கள் கெட்டவர்கள்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்ற தாழ்வு
இல்லாமல் இறைவன் படைத்தான்

இறைவன் ஒருவனே தனித்தவன் அவன்
இணை, துணை, உதவி இல்லாத பாலின பாகுபாடு இல்லாதவன்
மனித பலவீனமற்ற புற கண்ணுக்கு புலப்படாத
எல்லையற்ற அன்பு, நீதி, நேர்மை கொண்டவன்
நேர்வழி காட்டவோ பரிகாரம் செய்யவோ
மனித, விலங்கு உருவில் அவதாரமெடுப்பதில்லை

இறைத்தூதர்கள் பிரபஞ்ச உண்மையையும்
ஓரிறைத்தத்துவத்தையும் மறுமை இறைச்சட்டம் பற்றிய
அறிவை வழங்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இறைதூதர்

இறைவனை ஏற்பது, நினைவு கூருவது, துதிப்பது, பணிவது
வணங்குவது பிராத்திப்பது இதுவே மனிதனின் கடமை
தொழுகை: ஒரு நாளுக்கு 5 வேளை இறைவனின் அடிமை என்பதை ஞாபகப்படுத்த
இறைவனை வணங்க நிற, இன, குல, தேச பாகுபாடுகள் கடந்து
உடல், உள்ளம், இடம், உடை தூய்மையோடு தொழவேண்டும்

ஜகாத்: செல்வத்தின் மேல் உள்ள பற்றை போக்கவும்
ஏழைகளின் வறுமை தீர்க்கவும் தன் வருமானத்தில்
2.5% பிறருக்கு தானமாககொடுக்கவேண்டும்

ரமலான் நோன்பு: சூரிய உத்யத்திலிருந்து மறைவு வரை
உணவு உட்கொள்ளக்கூடாது இந்த கால கட்டத்தில் தாம்பத்தியம்
தவிர்க்க வேண்டும்

ஹஜ்: புனித பயணம் வசதி, வாய்ப்பு உடல் நலம் கொண்டோர்
வாழ் நாளில் ஒரு முறை தரிசிக்கும் இடம்

திருமணம் : பெரியோரின் சம்மதத்துடன் நடக்கவேண்டும்
மனமொத்து போகாதபோது பிரிந்து மறுமணம் செய்து கொள்ளலாம்

மறுமை வாழ்வு : நன்மை தீமைகளின் கூலி மறுமையில்தான் கிட்டும்



பாபாநசம் படத்துக்கு தமிழக அரசால்
ஏன் வரிவிலக்குத் தரப்படவில்லை என்பதை விளக்கியுள்ளனர். அதன் விவரம்... 
1. தவரை நியாயப்படுத்துவது போன்ற காட்சிகள். 
2. காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டுக்கு இழுக்காக அமைந்த காட்சிகள் 
3. தவறு செய்யும் ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்ற பிற்போக்குச் சிந்தனை 
4. பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக் காண்பிப்பது

இப்போதுதான் தந்தை பெரியாரின் நினைவு வந்திருக்கிறது தமிழக அரசுக்கு
ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்பது பிற்போக்குச் சிந்தனை
என்றால் தன் தலைவி சிறை சென்ற போது
பெரியாரை மறந்து கோயில் கோயிலாக சுற்றித்திரிந்தார்களே
மந்திரிமார்களெல்லாம் மாவிளக்கு போட்டார்கள்
அதிகரிகளே அர்ச்சகரானார்கள்
அரசு எந்திரம் கோயில்களில் சுழன்றது
மண் சோறு மொட்டை அடித்தல் அலகு குத்துதல்
பால் குடம் காவடி என்று வித விதமாக நடித்தார்களே
அப்போதும் அது தவறு
பிற்போக்குச் சிந்தனை என்று இந்த அரசும்
தலைமையும் அறிவுருத்தவில்லை



எம்.எஸ்.விஸ்வநாதன்
+++++++++++++++++++++
மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்
1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம் எலப்புள்ளி கிராமத்தில்
பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி
பாடிப்பு கசப்பானதால் நடிப்பும் நாடகமும் பாட்டுமாக
திசைமாறிய சிறிய வயதில்
தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு
இஷ்டபட்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து
நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி சங்கீதம் கற்று
தனது 13வது வயதில் மேடையில் முதல் கச்சேரி செய்தார்.

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம், எஸ்.வி.வெங்கட்ராமனிடம் அறிமுகப்படுத்தப்பட்டு
எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.
வயலின் இசை கலைஞரான டி.கே.ராமமூர்த்தியின் நட்பு கிடைத்தது.
எதிர்பாராதவிதமாக 1952-ல் 'சி.ஆர்.சுப்பாராமன் இறக்க நேரிட, அவர் பணியாற்றி வந்த
தேவதாஸ், சண்டிராணி, மருமகள் போன்ற படங்களுக்கு பின்னணி
இசையமைப்பாளர்களாக இந்த இரட்டையர்கள் தொடர்ந்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன், தனது சொந்த படமான ''பணம்'' படத்திற்கு இவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
இந்த இரட்டையர்களின் வெற்றி கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர்.
விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 படங்களுக்கும், இவர் தனியாக, 500 படங்கள் என,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
1951 முதல் 1981 வரை, 30 ஆண்டுகள், தமிழகத்தில், அவரது இசை ராஜ்யம் தான் நடந்தது.
கலைஞர் முதலமைச்சரானபின் ‘நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்க
வாய்ப்பழித்தார்.

மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார்.
ராமமூர்த்தி ஏப்ரல் 17, 2013 ம் ஆண்டு மறைந்தார்.
எம்எஸ்வி - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள்.
87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் 14-07-2015 அதிகாலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
இறவா வரம் பெற்றது மெல்லிசை
மட்டுமல்ல உன் உடலும் காற்றில் கரைந்துவிட்டது
காற்றிருக்கும்வரை
காதுகள் கேட்கும்வரை
உனக்கு இறப்பில்லை மெல்லிசையே.



அம்மாவுக்கு ...

யாருக்கு கிடைக்கும்
இந்த சிம்மாசனம்
கன்னடத்தில் நீ பிறந்தாலும்
தமிழகமே உன்னை
தலையில் வைத்து ஆடுகிறது

ஊழலில் சேர்த்த சொத்தை
யாருக்கு அனுபவிக்க கொடுக்கப்போகிறீர்கள் ?
உயிர் தர துடிக்கும்
உன் தொண்டனுக்கு நீங்கள் செய்யப்போவதென்ன ?
டாஸ்மார்க் போதுமென்று
நினைத்துவிட்டீர்களா !

நாடே உனக்கான பின்பு
மக்களின் மனதில் நன்மைகள் செய்து இடம் பிடி
நிலமாய் இடம் வாங்கி போடுவதில்
என்றும் நிம்மதி இல்லை
எத்தனை மன்னர்கள்
ஆண்ட பூமியிது
அள்ளியா சென்றார்கள்
கொள்ளிவைப்பதற்குள்
கொள்ளை போய்விடும்

தகுதியானவர்களை
உடன் வைத்துக்கொள்ளுங்கள்
நல்லது செய்தால் உன்
நாற்காலி நகர்த்த ஆள் இல்லை

ஆனவம் தூக்கியெறி
ஞாயப்படுத்திடாமல்
நடந்த தவறுகளுக்கு மனம் வறுந்துங்கள்
மக்கள் மன்னிக்கவும்
மறக்கவும் தயாராகவே உள்ளனர்
தெரிந்தோ தெரியாமலோ
உங்களை அம்மாவாக்கிவிட்டார்கள்
அன்பை ஆயுதமாக்கி
ஆக்கபூர்வமாய் மக்களுக்காய் உழைத்தால்

நீயே நிரந்தர முதல்வர்



திரு நாவுக்கரசர் - பெரியார் - ரமண மகரிஷி - ராம் சுரத்குமார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகோதரியே உங்களின் முந்தைய கேள்விக்கான பதிலாக ...
என் நன்மைக்கோ அல்லது
கிண்டலாகவோ எச்சிரித்தீர்கள்
பெண்களின் உரிமைக்காக பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து
தள்ளாத 93 வயதிலும் மூத்திரச்சட்டியோடு போராடிய முதியவரை
பின் தொடர்ந்து சமூகபணி செய்ய பெரும் தலைவர்கள் இல்லாமல் போனதே
அவரை பெண்களே விமர்சிக்க காரணமாகி போனது
உடல் நலம் என்பது அவரவர் பேனுவது
கடவுளை திட்டினாலும் 93 வயதுவரை ஓய்வெடுக்கவில்லை
உடல் நலிவு வந்தபோதும் யாரையும் குறைசொல்லவில்லை
எவ்வளவு எதிர்ப்புக்கு பிறகும் 93 வயதுவரை போராளியாக வாழ்வது கடிது
கொழுத்து தின்று கொழுப்பேரி திரியும் ஆன்மீக நவீன சாமியார்கள்
பழமையின் பல்லக்கில் பவனிவரும்
கோடிகளில் சொத்துக்களை வைத்து
சுகம் காணும் மடாதிபதிகளும்
சமூக பணி செய்யாமல்
சுய நலமாய் சுகம்தேடுகிறார்கள்

கடவுளை திட்டியவருக்கு மூத்திர கோளாறு என்றால்
சதா தெய்வ சிந்தனையுடன் நினைந்து
தொழுது தொண்டாற்றிய தூய தொண்டர்கள்
நோயால் அவதிப்பட்டனர்
ஆன்மீக அன்பர்கள் அதை சோதனை என்பார்கள்

தேவாரம் தே + ஆரம் = தேவாரம் = இறைவனுக்கு பாமாலை தந்த
திரு நாவுக்கரசருக்கு சூழை நோய் வந்த போது
என்னை ஏன் நோய் கொடுத்து வஞ்சித்தாய் என குறைபட்டுக்கொண்டார்

நெஞ்சில் உனக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்த்றியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்

சலம் பூவோடு
தூபம்மறந்த்றியேன்
தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்
நலம் நீங்கிலும் உன்னை மறந்து அறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்
உலர்ந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாழப் மறந்து அறியேன்
உடல் உள் உறு சூழை தவிர்த்து அருள்வாய்

என குறைபட்டுக்கொண்டார்

ரமண மகரிஷி கேன்சர் வந்து துன்புரும்போது
விசிரி சாமியார் என அழைக்கப்படும் ராம் சுரத்குமார் சுவாமிகள்
குருவின் வேதனை கண்டு பொறுக்கமுடியாமல்
அண்ணாமலையாரை திட்டித்தீர்த்தார்
பின் ராம் சுரத்குமார் அந்திம காலத்தில் அவரும்
புற்று நோயால் அவதிப்பட்டு
சென்னையில் தீவிர சிகிச்சைக்குபின்
மருத்துவர் கண்காணிப்பில்
இறந்து போனார்



காது குத்துதல் பெண்ணின் வயதுக்கு வந்த 
சடங்கு போன்றவற்றிக்கு இனி
போகக்கூடாது என்று தீர்மானித்து இருந்தேன்
மாமாவின் அழைப்பிற்கு மறுக்காமல்
பிரயத்தப்பட்டும் போகமுடியவில்லை

அந்த காலத்தில் உறவுகளை ஓன்றினைக்க
கலந்து பேச
பொழுது போக்க வீட்டு விழாக்களும்
திருவிழாக்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்

இப்போது பொழுது போக்க வீட்டுக்கு வீடு
ஏராளமான ஏற்பாடுகள் உள்ளன
விரல் நுனியில் காலத்தைப்போக்கும்
கருவிகள் உண்டு

இருந்தும் காது குத்துதல் பெண்ணின் வயதுக்கு வந்த
சடங்கு என்று கலர் கலராய் விளம்பரப்படுத்தி
பத்திரிக்கை வைத்து
ஒலிப்பெருக்கி வைத்து
மந்திரியை அழைத்து
விழா எடுக்கிறார்கள்
காரணம் ஒன்று செய்த பணத்தை வசூல் செய்வது
இரண்டு மாமனிடம் சீர் வாங்குவது
அல்லது தன் பணத்திமிரை கொளரவம் என்றபெயரில் ஊருக்கு காட்டுவது

இப்போது எவனோ ஒரு நடிகன் தன் பொரிக்கித்தனத்தை வெளிகாட்ட ஒரு படத்தில் போட்டதால்
எல்லா இளைஞர்களும் கம்மல் போட்டு சுத்துகிறார்கள்

காது குத்துதல் (கர்ணபூஷணம்)
காதுமடல்களில் ஓட்டை போட்டு அதில் நகைகளை மாட்டித் தொங்கவிடும் பழக்கம் இந்துமத ஆண், பெண்களிடம் இருக்கிறது. குழந்தைகளாக இருக்கும் போதே இதைச் செய்துவிடுகிறார்கள். காது குத்தல் என்று கூறுகிறார்கள். காது குத்தல் எனும் கெடல் குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. பொய் பேசுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல், போன்றவற்றைக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்றவற்றைக் குறிக்க நாமம் போடுவது எனக் கூறுகிறார்களே? அதைப் போல சாராயம் குடிப்பதை பட்டை அடிப்பது எனக் கூறுகிறார்களே, அதைப்போல இந்துமதச் சடங்குப் பெயர்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் குறிப்பிடப்படுகின்றன. அதைப் பற்றி யெல்லாம் இந்து மதக் காரர்களுக்குக் கவலை இல்லை.

இதை ஒத்துக் கொள்வதற்கான நேர்மை அற்றவர்கள் புதிய விளக்கம் தர முயல்கிறார்கள் உடம்பின் எல்லா நரம்புகளும் காது மடலில் இணைகின்றன; எனவே அங்கே ஓட்டைபோட்டு கடுக்கண் அணிந்தால், தொங்கட்டானைத் தொங்க விட்டால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்; ஆகவே காது குத்த வேண்டும். என்கிறார்கள். இது உண்மையா? மூடப்பழக்கவழங்களுக்கான காரணங்களை அறிவியலோடு இணைப்பது மாதிரியான சப்பைக்கட்டு கட்டுவதற்கு அவர்கள் முனைகிறார்கள் என்பதுதானே தவிர உண்மைகிஞ்சித்தும் கிடையாது. இம்மாதிரிச் சொன்போது பெரியார் கேட்டார் - காதில் ஓட்டை போட்டால் நரம்பு மண்டலம் சரியாக இயங்கும் என்பது உன்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் ஓட்டை போட்டே உன்னை உருவாக்கியிருப்பானே அப்படிச் செய்யாததிலிருந்தே அது தேவையற்றது, மடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ளலாமே! என்று கேட்டார் அறிவுஆசான் தந்தை பெரியார்.

ஒன்பது துளைகள் என்று பாட்டே எழுதினார் கண்ணதாசன் காதில்ஓட்டை அவசியம் என்றால் ஒன்பதோடு ஒன்று சேர்த்துப் பத்தாகப் படைத்திருப்பானே, பகவான்! காது குத்தல் பிறருக்குச் செய்தாலும் சரி, தம் குழந்தைகளுக்குச் செய்தாலும் சரி - குற்றம்தான்,தேவை அற்றதுதான், தவிர்க்கப்படவேண்டியது தான். தவிர்ப்பார்களா?

குழந்தையாக இருக்கும்போது காது குத்துதல், பெயர் சூட்டும் வைபவம், வயதுக்கு வந்ததும் பூப்பெய்தும் சடங்கு, நிச்சயதார்த்தம், தாலிக்கு பொன்னுருக்கல், வளைகாப்பு , கணவன் இறந்தால் அலங்காரங்களைத் துறக்கும் விதவைச் சடங்கு, என கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண்ணின் அடிமைத் தனத்தை அறிவிக்கும் விசேசங்கள் எல்லாவற்றிலும் அழகு நிழல் போல பின்தொடர்ந்து மிரட்டுகிறது.



வா மகனே
கோடாரியோடு
+++++++++++++-
அன்புள்ள மகனே..
நகரத்து சூழலில்
நலமாய் வாழ்வாய் என
நம்புகின்றேன்

நானலாய் வளைந்து வளைந்து
வாழ்ந்தவள் நான்
என் முதுமை என்னால்
இனிமேலும் வளைய
முடியவில்லை மகனே ...

அடுத்தவர் மூலமாய்
அம்பெறிவதை
நிறுத்திவிடு
உன் கரமும்
என் மனமும்
ரணமாகிவிட்டது

கோடாரியோடு வா மகனே
கணவனை இழந்த இந்த
காட்டுமரம்
காத்திருக்கிறது உனக்காய் மனம்வீச

உன் தாகமும், பசியும்
தீர்க்க விறகாக
காத்திருக்கிறேன்
வா மகனே
கோடாரியோடு.



அவமானக்குப்பைகள்
++++++++++++++++++
தாழ்த்திக்கொள்ளாதே
தரம் தாழாதே
கால்களில் வீழாதே
கையேந்தி நிக்காதே
பல்லிளிக்காதே
காரியம் சாதிக்க
வரிசையில் நின்று
கல்லை வணங்கி
கவிழ்ந்து கிடக்காதே

தகுதி மிக்காரை
தக்ககுணத்தோரை
மனிதருள் மாணிக்கமாய்
மானத்தோடு வாழ்வோரை
தாழ்தொட்டு வணங்குதல்
தவறோன்றும் ஆகா
ஆனவமிக்காரை
அகந்தை கொண்ட அரை
குறைகளையெல்லாம்
அண்டிப்பிழைக்காதே
குப்பிர விழுந்து குவிக்கும் செல்வம்
குடும்ப சொத்தாய் நினைக்காதே அது
உன் தலைமுறைக்கு சேர்த்துவைக்கும்
அவமானக்குப்பைகள்



காக்கா முட்டை
++++++++++++++

கருப்பு துயரத்தின் வண்ணம்
அடிமையின் சின்னம்
ஆதரவற்றவர்களின் அபலைக்கொடி

காக்கையை நாம் அமாவாசைகளில்
மட்டுமே தேடுவோம்
காக்கை சகுணங்களின் அளவீடு

காக்கையை தன் ஜாதியில் சேர்த்தவன்
பாரதிமட்டுமே
தாழ் நிலை மக்களின்
வாழ்வியலை படம்பிடித்த
இயக்குனர் மணிகண்டனை வாழ்த்துவோம்
அவர்களின் ஏக்கங்களையும்
ஏமாற்றங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும்
நம் கண் முன்னே காட்டும்
படமல்ல இது ஓர் பாடம்
இதில் யாறும் நடித்ததாகத்தெரியவில்லை
வாழ்ந்திருக்கிறார்கள்

விழிம்பு நிலை மக்களை
திருடர்கள்போல் சித்தரித்தாலும்
சமூக ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில்
பழரச பாத்திரம் சொல்வதுபோல்
வசதியுள்ளவர்கள் கொடுக்காதபோது
தெரியாமல் எடுப்பது திருட்டல்ல
அது எடுப்பது

தமிழ் நாட்டின் திரைப்படத்திற்கு தேவையான கவர்ச்சி, பெரிய நட்சத்திரங்கள், குத்தாட்டம், பஞ்ச் வசனம் போன்ற எந்த தகுதிகளையும் பின் தொடராமல் வெற்றி பெற்றிருப்பது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்

உலகமயமாக்கலின் உணவு அரசியல் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எப்படி பாதிக்கிறது என்பதை
தெளிவாக காட்டுகிறது படம்
நடிகர்களே நீங்கள் காசுக்காக நடிக்கும் விளம்பர படங்களால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணிப்பாருங்கள்
சமூகப்பொருப்போடு நடந்து கொல்லுங்கள்

கோடிகளில் புரளும் கோடீஸ்வரன்களாலும்
பெறமுடியாத சந்தோஷத்தை
கூவத்தில் பார்க்கமுடிகிறது
அந்த குழந்தைகள் முகத்தில்

இது காக்கா முட்டையல்ல
தனுசுக்கு இது தங்கமுட்டை
நல்ல திரைப்படத்தை தந்ததற்காக
பாராட்டுக்கள்

அந்த காக்கை முட்டைகளில்
எத்தனையோ அடைகாக்கப்படாமல்
தெருவொரம் திண்டாடிக்கொண்டுள்ளன
அவர்களின் திசைமாற்ற
உங்களின் இலாபத்தின் ஒரு பகுதியை
அந்த பகுதி மக்களுக்காக ஏதாவது
நல்லது செய்தால்
நிறைய காக்கை முட்டைகள்
குஞ்சுகளாக குரல் தரும்



மாஸ் 
+++++

மாசிலாமணியின் சுருக்கமே மாஸ். மரணம் வரை சென்று தப்பித்த சூர்யாவின் கண்களுக்கு மட்டும் ப்ரேம்ஜி பேயும் 10 பேர் கொண்ட பேய் கூட்டமும் தெரிகிறது.
மாஸான பேய் கூட்டம் தமிழ் பெயர் வைப்பதற்காக தமிழோடு விளையாடி மாஸ், மாசி என்று பெயர் மாற்றி வெளியாகியுள்ளது நல்ல வேலை தலைப்புகளில் மட்டுமே தமிழை காப்பாற்றி கொண்டுள்ளோம் காசுக்காக.,
பேய்களை வைத்து பயமுறுத்தாமல் பேய்களின் நிறைவேறாத ஆசையை சூர்யா மூலம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். வித்தியாசமான முயற்சி ரொம்ப நல்ல பேய்கள்
பெரிய கதா நாயகர்கள் நடிக்கத்தயங்கும் பேய் படத்தில் அமர்களப்படுத்தியிருக்கிறார் சூர்யா. ‘தெறிக்குது தெறிக்குது மாஸ்…’ பாடல் ஒரு மாஸ் ஹீரோவுக்கான பாடலாக அமைந்து விட்டது.
ஈழத்தமிழனாக வரும் சூர்யா கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது. சூர்யா அப்படியே அந்த அழகு தமிழை பேசி நடித்துள்ளார்.

குணச்சித்திர கேரக்டரில் பார்த்த சமுத்திரக்கனியை வில்லன் வேடத்தில் பயத்தோடு பார்க்க முடியவில்லை. போலீஸாக பார்த்திபன் நக்கலுடன் நடிக்கவும் செய்திருக்கிறார். ரியாஸ்கான்,ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, சண்முக சுந்தரம், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களை வைத்து பெரியளவில் செய்ய வேண்டிய காமெடி ட்ராக் மிஸ்ஸிங். கௌரவ தோற்றத்தில் ஜெய் வந்து கைத்தட்டல் பெறுகிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கும். பாடல், பேய் படம் என்றால் ட்ரெர் பின்னணி இசை கொடுத்து காதை கிழிக்காமல் நல்ல இசையை கொடுத்துள்ளார் யுவன். படமாக்கப்பட்ட காட்சிகளும் அருமை. ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகளும் கவிதை சொல்லும். வெங்கட் பிரபு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

குடும்பத்துடன் ரசிக்கும்படியாக படத்தை தந்திருக்கிறார். ஆனால் இறந்தவர்களுக்கு மனசு இருக்கிறது. ஆசை இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறார்கள்.



கருனாநீதி என்ற 5 எழுத்தை
தமிழகம் கலைஞர் என்ற 4 எழுத்தாக்கி கொண்டாடியது உன்னை
கலைத்துறையில் உன் இடம் தொட
ஒருவரும் இல்லை அந்த பராசக்க்தி ஒன்று போதும்
கலைத்துறையை தூக்கியெறி
அது ஓர் காக்கை கூட்டம்
அதிகார அரிசி இருப்போரை அண்டியிருக்கும்

போராட்டாம் என்ற 5 எழுத்தை
பெரியார் வெண்தாடி வேந்தர் என்ற 4 எழுத்து தந்த
தத்துவ சொத்துக்களோடு புத்தன் எதிர்த்த
வேதிய வழக்கங்களை அண்ணாவோடு
சாடித்திரிந்தாயே
சமகால புரட்சியை
சனாதன இருட்டை
சமதர்ம கொடியை தூக்கிப்பிடித்தாயே

தன்மானம் என்ற 5 எழுத்தை
புரட்சியால் புராணம், கடவுள், அறியாமை
தீண்டாமையையெல்லாம் சூரியனாய் உழைத்து
சமூகம், தமிழர் வாழ்வு வெற்றி பெற கற்பனை காவியம் தீட்டி
எழுத்தால் எண்ணத்தால் விடியலுக்காய் உழைத்த உன் 4 எழுத்து தியாகங்கள்
ஊழல் என்ற ஒற்றை மழைத்துழியில்
கறைய விடுவாயா

அரசு பறிபோகும்
எனத்தெரிந்தும் அவரால் வந்த அரசு
அவரால் போகட்டும் என்று நெஞ்சுரத்தோடு
அரசு பதவி வகிக்காத பெரியாரை
அரசு மரியாதையுடன்
அடக்கம் செய்தவனே

அத்தோடு முடிந்ததா உன் வேலை
அரசியல் என்ற 5 எழுத்து மந்திரி
என்ற 4 எழுத்தால் 5 முறை முதல்வர் பதவியில்
அமர்த்திபார்த்தது போதும்
உன் பிள்ளைகளோடும்
உன் பேரன்களோடும் அரசியல் செய்தது போதும்
அரசியலை தூக்கியெறி

அரசியல் சாரா சமூகப்பணி
பெரியாருக்குப்பின்
உன் ஊழியத்திற்காய்
உறங்கிக்கிடக்கிறது
சாக்கடைக்குள் சதிராட
பல பன்றிகள் படுத்துக்கிடக்கின்றன
எழுந்துவா சூரியனே
சந்தனமரங்கள் சாமரம் வீசும்
உன் தலைவனின் ஆயுலை
தாண்டி வாழ வாழ்த்துகிறேன்



இளையராஜா
இவன் ஒன்றும் உப்பளம் இல்லை
மழைக்காய் குடைபிடிக்க
உப்புக்கடல்
இசை வள்ளல் 
தன்னைத்தானே தகவமைக்கும் தவப்புதல்வன்
வியர்வையால் விதியை மாற்றியவன்
கனவுகளுக்கு கண்ணீர் பாய்ச்சாது
வெற்றியால் விடியல் தந்தவன்
சுற்றி சுற்றியே உலகம்
தன்னை புதுப்பித்துக்கொள்வது போல்
கற்றலாலே தன்னை புதுப்பித்துக்கொண்டவன்

வாழ்வின் தொகுப்புகள்
வரலாறாகும்
இளையராஜாவே வரலாறானார்
பல பூனைகள் புலி வேசம் போடுகையில்
இந்த புலி சத்தமே இல்லாமல்
இசையை அசைக்கத்தொடங்கியது

ஓடிக்கொண்டிருப்பவன் தானே
உயரத்தைத் தொடமுடியும்
வாய்ப்புகள் வாசல் வந்தன
அஸ்திவாரத்தை அகலப்படுத்தினான்
அவமானங்களை உரமாக்கினான்
இசையை தன் உலகமாக்கினான்

சர்வதிகாரியாய் இருந்த
சினிமாகோட்டையை தன்
இசையால் சரித்தவன்
இசை நோக்கியே முன்னகர்ந்ததால்
கருகொண்டவள் போல்
காலத்தில் முற்றிய கதிரானான்

பயிற்சியும் முயற்சியும்
அவன் மூச்சு
ஏலனப்படுத்திய இதழ்கள் எல்லாம்
அவனோடு புன்னகைக்கப் புறப்பட்டன
ஏவலாளாய்கூட ஏற்காத உலகம்
எஜமானனாய் ஏற்கக் காத்துக்கிடந்தது

தச்சன் மகன் தான்
உலகுக்கே கிருஸ்தவம் தந்தான்
அவமான சின்னத்தை ஆராதிக்கவைத்தான்
ஆடுமேய்த்த நபிகல்தான்
இஸ்லாமை தந்தார்
அவமானங்களின் அரங்கேற்றம்

தன் பயணம் தெரிந்தவர்கள்தான்
புது பாதை சமைப்பார்கள்
கேட்கப்படாத குயிலோசையாய்
அறியப்படாத மயிலாட்டமாய்
மறைந்து போகவில்லை
வாய்ப்புகளையேல்லாம் வசமாக்கினான்

பால் கிடைக்காத ஊரில் எந்த பூனையும்
சைவமாய் இருப்பதில்லை
வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால் - நீயும்
சைவபூனைகளாய் சாகவேண்டியதுதான்
எலிகள் உன்மேல் ஏறி விளையாடும்

பசித்தவனுக்கு உணவு கவலை
புசித்தவனுக்கு செரிமான கவலை
மழை கண்டு அழுவதற்கு
இவன் ஒன்றும் உப்பளம் இல்லை
உப்புக்கடல்
இந்த உப்புக்கடலில்
குளித்தெழும்பு
உனக்கும் ஞானம் வரும்

தந்தை வைத்த பெயர் ஞான தேசிகன்
அவருக்குத்தெரிந்திருக்கிறத
பள்ளியில் படித்தால்
ஞானம் கிடைக்காது என்று
அதனால் பள்ளியில் சேர்க்கும் போது
ராஜையா என பெயர் மாற்றிவிட்டார்
இசை பயில சென்றபோது
தன்ராஜ் மாஸ்டர்
ராஜா என்றே அழைத்தார்
அன்னக்கிளி இசையமைக்க சென்றபோது
பஞ்சு அருணாசலம் ஏற்கனவே
இசைத்துறையில் மூத்தவர் ஏ.எம். ராஜா இருப்பதால்
இவரை இளைய ராஜா என பெயர் மாற்றினார்
பள்ளியில் கிடைக்காத ஞானம்
பயிற்சியும் முயற்சியும் தந்ததால்
கலைஞர் இவரை இசை ஞானி என்றழைத்தார்

தந்தை ராமசாமியின் மனம்
கிருஸ்தவம் கவர்ந்ததால் தன் பெயரை டேனியல் என் மாற்றிக்கொண்டார்
விவசாய குடும்பம் சின்னத்தாயின் வயிற்றில்
4 மகங்களும் 2 பெண்களும் பிறந்தனர்
தாயின் தாலாட்டும்
நடவு பெண்களின் கிராமத்துப்பாட்டும்தான்
இளையராஜாவின் இதயத்தில்
இசையை விதைத்தவர்கள்

தன் அக்கா கமலம்பாவின் மகள்
ஜீவாவை தன் ஜீவனில் இனணத்துக்கொண்டதின்
பயனாய் 3 வாரிசுகளை இசைக்குத்தந்தார்
தன் அண்ணன் பாவலர் வரதராஜனுடன்
கடவுள் மறுப்பு கொள்கைக்காய் கம்யூனிஸ்ட் மேடையில்
தன் அண்ணனுக்கு உடல் நிலை சரியில்லாத காரனத்தால்
அன்னையின் உத்தரவின் பேரில்
திருச்சி பொன்மலை, திருவரம்பூரில்
முதல்முறையாக மேடை ஏறினார்
அதுவே தன் பள்ளி படிப்பிற்கு கடைசியாக முடிந்ததது
அவர்தான் இன்று ஆன்மீக இசைமுனி

நடிகர் விஜய்யின் தாத்தா நீலகண்டன் அவர்களால்
இளையராஜா குழுவினர்க்கு முதலில் சென்னையில்
அரங்கேற்றம் நடந்ததது
1990 தீபாவளி சமயத்தில் தன் தாய்
இறந்ததால் பன்னைபுரத்தில் தாயின் நினைவாய்
ஆலயம் கட்டி எல்லா தீபாவளியன்றும்
அங்கு செல்வது வாடிக்கையாக வைத்துள்ளார்
காந்த குரலுக்கு சொந்தக்காரன்
தன் அண்ணனின் குழுவில்
பாடியது எல்லாம் பெண் குரலில்தான்

நாடே மலேரியாவால் செத்துக்கொண்டிருந்தபோது
தமிழ் சினிமா பிழைக்க
மலேரியா இன்ஸ்பெக்டராக
பன்னைபுரம் சென்ற பாரதிராஜாவுக்கு
இளையராஜாவின் நட்பு தொடங்கியது
பாரதிராஜாவின் சென்னை அறையில்தான்
அன்று இளையராஜா சகோதரர்களுக்கு வாசம்
இளையராஜாவின் குழுவில் மூத்த கோரஸ் பாடகி
கமலம்மா இவரின் மூலமாகத்தான்
தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயில சென்றார்
அங்கே ஜி.கே. வெங்கடேஷ் தனக்கு நல்ல
உதவியாளர் தேவை என்ற போது
ராஜாவை அறிமுகம் செய்துவைத்தார்

இசைக் குறிப்புகளை எழுதிகொடுத்து
வாசிக்கச்சொல்லும் ஒரே இந்திய
இசையமைப்பாளர் இவர்தான்



பொதுவுடைமை என்றவுடன் ஏதோ கம்யூனிஷ்டுகளுக்கு சொந்தமான சொல்லாகவே எண்ணியவர்கள் புறம்போக்கு என்றவுடன் தமக்கு நெருக்கமாகவே
நினைத்துவிட்டனர் திரையரங்கில் கூட்டம் கார் நுழையமுடியவில்லை திரையரங்கத்தொழிலாளி கேட்டார் எந்தப்படம் என்று அங்கு 4 திரையரங்குகள் உள்ளதால்., தம்பி புறம்போக்கு என்றான் என்ன தலைப்புவைக்கிறார்கள் என்னை திட்டுவதுபோல் உள்ளது என சிரித்தார்

பொதுவுடைமைத் தத்துவம், சர்வதேச அரசியல், போராளிகள் பக்க நியாயங்கள், தமிழ் தேசிய உணர்வையும் ஆங்காங்க குறியீடுகளாகக் காட்டியிருக்கிறார் எஸ்பி ஜனநாதன்
ஒரு அப்பாவி இளைஞனை 18 ஆண்டுகள் சிறையில் அடைத்து அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதில் அந்த நிரபராதி கேட்கும் கேள்விகள் இந்த நாட்டு சட்ட நடைமுறை மீது விழும் சவுக்கடிகள்.

படம் தொடங்கும் போது அயல் நாட்டுக்கழிவுகளை பற்றிய பேசி அதர்க்கான பின்னணிக் காரணங்களை அழுத்தமாக தெரிவிக்கப்படாததால் பாதிப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன. போராளிக் குழுவுக்குரிய வழுவான பாத்திரங்களாக வெளிப்படவில்லை.
விஜய் சேதுபதியின் நடிப்பு விசேஷமான பாராட்டுக்கு உரியது. பாலு பாத்திரத்தில் ஒரு போராளியா கவே மாறியிருக்கிறார் ஆர்யா, கடமை தவறாத காவல் அதிகாரியாக ஷாம் கம்பீரமாக நடித்துள்ளார்.

கலை இயக்குநர் செல்வ குமார் நிஜமான சிறைச் சாலையைக் கண் முன் கொண்டுவந்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இந்தப்படத்திற்கு பாடல்கள் தேவை இல்லை நெருடலாகவே உள்ளது

‘புறம்போக்கு என்கிற பொது உடைமை’ துனிச்சலான எஸ்பி ஜனநாதனின் புரட்சிகரமான படம்



நுங்கு
+++++
ஊர் கோயிலுக்கு அருகில் ஓர் ஈச்சைமரம்
எங்கள் கோயிலுக்கு அருகில் இரட்டை பனைமரங்கள்
ஒவ்வொறு கோடையிலும் பனைமர பஞ்சாயத்து நடக்கும்
யாராவது ஒருவர் நுங்கையெல்லாம் வெட்டி தின்றுவிட
பங்காளிகள் பஞ்சாயத்தை கூட்டிவிடுவார்கள்
என் அப்பா தீர்ப்பெழுதினார்
வெட்டியவனை விட்டு விட்டு விளைந்த இரட்டை மரங்களுக்கு மரன தண்டனை,. காலையில் சாய்ந்த இரட்டை கோபுரங்களாய் சரிந்து கிடந்தன, வெட்டிய மரங்களுக்கு கீழ் முளைத்திருந்த பனைகன்றுகளை வேறு இடத்தில் பத்தியப்படுத்தினேன் நீர் ஊற்றி வளர்த்தேன் இரண்டு மட்டுமே மரமானது ஒன்று ஆண் மரம்
ஆந்த ஒற்றை பெண் மரத்தில் நுங்கை வெட்ட ஆட்களோடு
இந்த விடுமுறையில் சென்றேன் யாரோ நாங்கள் சென்னையிலிருந்து வருவது தெரிந்து வெட்டிவிட்டார்கள் பனைமரத்தை சுற்றி நான் நீர் ஊற்றாத அரசும் வேப்பமரமும் வளர்ந்து இருந்தது
அதை வெட்டச்சொன்னேன் ஏதாவது ஒன்று நல்லா வளரும் என்று வெட்டவந்தவரோ அது சாமி என்று வெட்ட மறுத்தார்
அவரது நம்பிக்கைக்காக கடவுள் காப்பாற்றப்பட்டார்.

நுங்கு சீதபேதி போக்கும், தேகம் குளிர்ச்சியடையும், விக்கல் நிற்கும்...
இளம் நுங்கின் சாற்றை எடுத்து, முகத்திலும், உடம்பிலும் தேய்த்து வந்தால், வேர்க்குரு, அம்மை நோய்கள் வராது. நுங்கு, பசியை துாண்டும், மலச்சிக்கலை தடுக்கும்,
முற்றிய நுங்கு வாயு செய்வதுடன் பசி மந்தமும், வயிற்று வலியுமுண்டாக்கும்...ஆகவே உண்ணாதிருப்பது நலம்
நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

லிபர்ட்டி பேரூந்து நிறுத்தத்தில் கடும் கத்திரி வெயிலில்
ஒருவர் நுங்கு விற்றுக்கொண்டிருந்தார் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது
நுங்கை நோண்டி தின்பதில்தான் சுகம் சென்னையில்
சோம்பேறிகள் என்று சுளையாக விற்கிறார்கள்போலும்
50 ரூபாய் கொடுத்து 30ரூபாய்க்கு நுங்கு கேட்டேன்
அதற்குள் காரில் வந்திரங்கியவர் 100 ரூபாய் கொடுத்து
100 ரூபாய்க்கும் நுங்கு கேட்டார் நுங்கு விற்பவர் கார்காரனுக்கு முதல்மரியாதைக்கொடுத்தார்

உலகம் ஆடம்பரத்திற்குத்தான் அங்கிகாரம் கொடுக்கிறது
பொய்களுக்குத்தான் பூஜைகள் நடக்கிறது
நுங்கை வாங்கிக்கொண்டு கொசுருவாக ஒரு நுங்குக்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தார் அவர் கொடுக்காமல் இரு நுங்கு அதிகமாகவே போட்டுள்ளேன் என எனக்கு 30 ரூபாய்க்கு நுங்கு கொடுத்துவிட்டு மீதி 70 ரூபாய் தந்தார் கஷ்டப்பட்டு சம்பாதித்து கவணக்குறைவாயிருந்தால் இலாபம் எப்படி வரும் என்றேன்
கார்காரன் என்னிடம் வந்து இந்த நாயிகிட்ட எதுக்கு சார் காசை திருப்பிக்கொடுத்திங்க கொடுத்திருக்கக்கூடாது சார் என்றார் ஒரு நுங்கு கூட தரமறுக்குறான் என்றான்

அடப்பாவி வெயில்ல வந்தவாசியில இருந்து இங்கு பிழைக்கும்
ஏழை விவசாயியை ஏமாத்த நினைக்கும் இந்த நாய்கள்
வெளி நாட்டு குளிர்பான நிறுவனங்களிடமும் மதுபானக்கடைகளிலும்
சூப்பர் ஹைப்பர் மால்களிலும் சொல்லும் விலைகொடுத்து வாங்குபவர்கள்
ஏழைகளைமட்டுமே ஏமாற்ற நினைக்கிறார்கள்



ஷாகிர்
++++++
எங்கள் நிறுவனத்தில் கடை நிலை விற்பனை பிரிதி நிதியாக சேர்ந்து
DGM ஆக உயர்ந்தார் என்பது சாதாரணம் அல்ல
ஒரு சாணி உருண்டையைக்கூட மடித்துக்கொடுத்தால் 
தங்கமென விற்கக்கூடிய வியாபாரத்திறன்
பேச்சாற்றல் மிக்கவர்., வாடிக்கையாளர்கள் நமக்கு வாய்ப்பளிக்கவந்த வரம் என்றார் காந்தியடிகள் பொதுவில் விற்பனை நிலையங்களில் அப்படி நினைப்பதில்லை வாடிக்கையாளர்களை ஆடுகளாகவே பார்க்கிறார்கள் வந்த வாடிக்கையாளர்களிடம் விற்பனை முடித்துவிட்டால் ஆட்டை அறுத்ததாகவே குறியீட்டு மொழியில் சொல்வார்கள் அப்படி அறுக்கமுடியாத ஆடுகளையும்
நரிகளையும் சில சமயம் வேடிக்கைப்பார்க்க வந்தவர்களையும் கூட
வியாபாரம் முடிக்கும் திறமை நண்பர் ஷாகிருக்கு உண்டு

சில சமயங்களில் குறிப்பிட்ட நாட்களில்
வேலையை முடிக்காததால் கொலைவெறியோடுவரும்
வாடிக்கையாளர்களையும் "அண்ணே" என்ற ஒற்றை வார்த்தையில்
சமாதான புறா பறக்கவிட்டுவிடுவார் அவரது தூத்துக்குடி வட்டார மொழி வழக்குக்கு அத்தனை ஈர்ப்பு வயதில் இளையவரையும் "அண்ணே" என்றுதான் அழைப்பார்
இவர் ஒருவர் செய்த வேலையில் 4 MBA முடித்தவர்களை
பணியமர்த்தியும்கூட அவரின் இடம் நிறப்பப்படாமலே உள்ளது
இவரது அனுபவ படிப்புக்கு எதுவும் ஈடாகாது

எல்லாவற்றிலும் ஓர் நேர்த்தி
ரானுவத்தில் பனிபுரிய தகுந்த குணம்
திடீரென அம்பி அன்னியனாகிவிடுவார்
ஷாகிர் என்றதும் பழகிவர்களுக்கு
நன்றாகத்தெரியும் புண்ணாக்கு என்ற வார்த்தை

நான் வீடு வாங்கும் கடைசி நிலையில்
பத்திரப்பதிவுத்துறை கட்டணத்தை ஏற்றியதால்
1 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டது
உடனே கொடுத்து உதவிய பேருள்ளம் ஷாகிருக்கு

நீண்ட நாட்களுக்குப்பின் அவரை சந்திக்க நேர்ந்தது
பார்த்தவுடன் சொன்னது அண்ணே முன்னைவிட நன்றாக
சம்பாதிக்கின்றேன் வருடத்திற்கு மூன்று நல்ல காரியம்
செய்யப்போகிறேன் ஒன்று மருத்தவம், கல்வி மற்றும் திருமணம் என்றார்
அந்த உதவும் உள்ளத்திற்கு நம் நல்வாழ்த்துக்கள்



எடிசன்
++++++
கண்டுபிடிப்புகளின் கடவுள்
இரவுக்குத்தீயிட்டவன்
நிலவின் நிம்மதிக்கலைத்தவன்
இரவை பகலாக்கிய இரண்டாம் சூரியன்
அழுதுகொண்டிருந்த மெழுகுத்திரியையும்
அலைபாய்ந்த அகல்விளக்கையும்
அப்புறப்படுத்தியவன்
அமாவாசையையும் பேய் பிசாசுகளையும்
அறிவு வேப்பிலைகொண்டு அடித்து விரட்டியவன்
இருண்ட இரவுக்குமட்டுமல்ல
கர்ப்ப பையிலிருந்து கற்பகிரகம் வரை
ஒளி கொடுத்தவன்

ஆய்ந்துபார்க்காமல் எதையும்
ஏற்பது எடிசனுக்கு ஏற்புடையதல்ல
அவனது ஆய்வுச்சாலைக்கு வரப்பயந்த ஆண்டவனைப்பற்றி
அவன் கவலைப்பட்டதே இல்லை
தோல்வியுறும்போதுதான் மனிதன்
நம்பிக்கையிழக்கிறான்
நம்பிக்கையிழந்த நேரங்களில் மட்டுமே
மனிதன் கடவுளை தேடுகிறான்
எடிசன் 1000 முறை தோற்றாலும்
ஆண்டவனைத்தேடியதில்லை
முடிவுகளை தேடி முனேறியவன்
நம்பிக்கையோடு முயன்ற
வெற்றியின் நாயகன்

மதவாதிகளின் மடத்தனங்களோடு
சண்டையிட்டு என் நேரத்தை வீனடிக்க
விரும்பவில்லை என்றவன்
மனிதகுலத்திற்கு உபயோகமானதை
மட்டுமே கண்டுபிடிக்க உறுதிபூண்டவன்
அவனது பதிவுபெற்ற கண்டுபிடிப்புகள் 1093
பதிவுபெறாதவைகள் கணக்கிலடங்கா

11.02.1847 ல் அமெரிக்காவின் மிலான் நகரில் இந்த சூரியன் பிறந்ததது பெரிய தலையுடன் பிறந்ததால் பள்ளியில் மந்தபுத்தியுள்ள மண்டு என்று
நிராகரித்தார்கள் தாயின் அன்பிலும் அரவனைப்பிலும் பள்ளி நிராகரித்த எடிசன் ஓர் பல்கலைகழகமாக உறுவானார். பள்ளிகள் அறிவாளிகளை உறுவாக்குவதில்லை மனப்பாட எந்திரங்களைத்தான் தயார்செய்கிறார்கள்

14 வயதில் வீக்லி ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிபாளர் மற்றும் விற்பனை அனைத்தையும் அவரே செய்தார்
எடிசனின் பதிவுபெற்ற முதல் கண்டுபிடிப்பு வாக்குபதிவு எந்திரம் 11 நாட்களுக்கொரு சிறு கண்டுபிடிப்பு
6 மாதத்திற்கு ஓர் பெரிய கண்டுபிடிப்பு இது அவரின் இலக்கு ஆனால் 1882 ல் 141 ஆய்வு செய்து 75 கண்டுபிடிப்புகளை பதிவு செய்தவர்

சொன்ன சொல்லையும் செலவுசெய்த நேரத்தையும்
திரும்பபெறமுடியாது என்றார்கள்
எடிசன் ஒலியை சிறைபிடித்தார் அவரின் சொந்த குரலில்
"Mary had a little lamb" என்ற பாடல்தான் உலகின் முதல் பதிவு செய்த பாடல்
20-08-1879 ல் ஒளியையும் சிறைபிடித்தார்
தையல் நூலில் கரியைத்தேய்த்து 40 மணி நேரம் எரியும்
மின்சார விளக்கை கண்டுபிடித்தார்

தாயாரின் மறைவிற்கு பின் தனிமையில் வாடிய எடிசன் தன்னோடு பணிபுரிந்த மேரி ஸ்டில்வெல்லை நண்பர்களின்
கட்டாயத்தால் மணம்புரிந்தார் ஜீனியர் எடிசன் மற்றும் மரியன் என்ற ஓர் மகள்
முதல் மனைவி இறந்தபின் 1886ல் மினா மில்லரை காதல் மணம்புரிந்தார்
சிறுவயதில் பத்திரிக்கை சுமையுடன் ரயிலில் ஏற சிறமப்பட்ட சிறுவனை ஒரு பெரியவர்
எடிசனின் காதைப்பிடித்து தூக்கிவிட்டார் அன்றுமுதல் காது சரியாக கேட்கவில்லை
பின் வந்த காய்ச்சலில் ஒரு காது சுத்தமாக கேட்காமல் போனது ரயிலில் ஆராட்சி செய்தபோது
தீ விபத்து ஏற்பட்டது அப்போது மேலதிகாரி கன்னத்தில் விட்ட அறையில் அடுத்தகாதும் கேட்கும் திரண் குறைந்தது

நம் காதுகளை இசைகளாய் நிறைத்தவனின் காதுகள் கேளாது இருந்தான்
ஒலியையும் ஒளியையும் ஒன்றாய் பதிவு செய்து
முதல் திரைப்படம் தயாரித்தவன்

1831ல் அக்டோபர் 18ல் இந்த ஓய்வரியா உழைப்புச்சூரியன்
காலமானார் ஆனால் எங்கே ஓர் மின்விளக்கு
எரிகிறதோ அங்கே எடிசன் உயிர்க்கின்றார்
எங்கே ஓர் பாடல் ஒலிக்கிறதோ அங்கே எடிசன் சிரிக்கின்றார்
எங்கே ஓர் திரைப்படம் ஓடுகிறதோ அங்கே எடிசன் மகிழ்கின்றார்
எங்கே சிமெண்டை பயன்படுத்தி ஓர் வீடு கட்டப்படுகிறதோ அங்கே எடிசன் வாழ்கின்றார்.
இந்த நூற்றாண்டல்ல எந்த நூற்றாண்டு வந்தாலும்
உழைப்பிற்கு எடிசனை மிஞ்ச எவனுமில்லை
மே உழைப்பாளர் மாதம் இது எடிசனின் மாதம்



இந்தியா நாடல்ல சகித்துக்கிடக்கும் சாபக்காடு
+++++++++++++++++++++++++++++++++++++++++
குற்றம்சாட்டப்பட்டவர்கள்
விடுதலையாகிவிட்டனர்
நீதிபதிகள் இங்கே
குற்றவாளி கூண்டில்

சட்டம் ஓர் விபச்சாரி
பணம்படைத்தவனுக்கு பாய்விரிக்கிறது
ஏழைகளை எட்டி உதைக்கிறது
எளியோர்க்கு கிட்டாத நீதி
காகிதத்தில் இருந்தென்ன இலாபம்
சட்டத்திற்கு வைப்போம் தீயை
சமாதிகட்டுவோம் பொய்சொல்லும் வாயை

இந்திய அதிகாரம்
ஓர் தொழு நோய்வந்த பிச்சைக்காரன்
எல்லோரிடமும் கையேந்தி நிற்கிறது
தானும் சொறிந்து அடுத்தவனையும்
சொறிந்துவிட்டுக்கொண்டு

இந்தியா ஏழைகள் வாழத்தகுந்த நாடல்ல
சகித்துக்கிடக்கும் சாபக்காடு
வாழ்க பணம்படைத்தவர்கள்



ஈ.எம். ஹனீஃபா
++++++++++++++
இசையின் எட்டாத அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா

இறந்தாலும் இசையில் வாழும் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா இசையை நான் கவணிக்க தூண்டியதில் முதன்மையானவர் நாகூர் ஹனீஃபா. மன்னார்குடியில் பள்ளி பருவத்தில் முதல்முதலாக அந்த காந்தக்குரலை கேட்க நேர்ந்தது கேட்டவுடனே மறக்கமுடியாத அளவில் நெஞ்சத்தில் நிறைந்த பாடல்கள். என் தந்தையின் நண்பர்கள் நிறைய இஸ்லாமியர்கள் அவர்களில் ஒருவர் மதுக்கூர் மஜீத் இவரும் நல்ல பாடகர் அவர் மூலமாக நேஷனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் எங்கள் வீட்டிற்குள் வந்தது அவர்தான் ஹனீஃபாவின் நிறை கேசட்டுகளை அறிமுகப்படுத்தியவர் என்னிடம் வேறு கேசட்டுகள் கிடையாது எப்போதும் ஹனீஃபா எனக்காக பாடிக்கொண்டிருப்பார் நான் நிறுத்த சொன்னால் நிறுத்தி பாடசொல்லும் போது பாடிக்கொண்டிருந்தார் அந்த டேப் ரிக்கார்டரின் பட்டன்கள் வாயிருந்தால் அழுதிருக்கும் எங்கள் அப்பா வீட்டில் இருந்தால் நாங்கள் படிக்கவேண்டும் இது சட்டம் நாங்க எங்கே படித்தோம் படிக்கிறமாதிரி நடிப்போம் அவர் தலை தெருவில் மறைந்தவுடன் ஹனீஃபா பாடத்தொடங்கிவிடுவார், பிறகு இந்துப்பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பாடலும் எனை ஈர்த்தவை பள்ளியில் மேல் வகுப்பு நாகையில் சென்றபோது பாதி தூக்கத்தில் கிளப்பி பூஜைக்கு போகவேண்டும் ஏசு எதிரே தொங்கிகொண்டிருப்பார் நாங்க தூங்கிக்கொண்டே ஆமென் சொல்லிக்கொண்டிருப்போம் பூஜையில் தூங்கியவர்கள் எங்களில் ஓர் உளவுப்படை உண்டு தயாரித்து தந்த பட்டியலை வைத்து தண்டனை தருவார்கள், இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி பாட்டுப்பாடும் குரூப்பில் சேர்வதுதான் ஏனென்றால் ஒரு மணி நேர பூஜையிலும் ஒரு மூலையில் மறைவான இடத்தில் முட்டி போடாமல் எழும்பாமல் அமர்ந்தே இருப்பவர்க்ள் அவர்கள்மட்டும்தான் குரல் தேர்வில் ஹனீஃபாவின் பாடலைத்தான் பாடினேன் என்னை சேர்த்துக்கொண்டார்கள் இனிமேல் இந்தபாடல்களை இங்கு பாடக்கூடாது இதைத்தான் பாடவேண்டும் என 105 பாடல்கள் கொண்ட தொகுப்பை கொடுத்தார்கள் முதல் பாடலாக " எந்தன் நாவில் உந்தன் பாடல் எந்தன் ஏசு தருகிறார்" பாடிக்காட்டினேன் அன்றிலிருந்து காலையில் ஒரு மணி நேரம் அந்த மந்தையில் இந்த ஆடு தூங்கிக்கொண்டேய இருந்தது.

ஏனோ எல்.ஆர்.ஈஸ்வரி, ஹனீஃபா பாடல்கள் போல் ஓர் ஈர்ப்பு இல்லை எல்லம் பாடல்களும் ஒப்பாரி பாடல்கள் போலவே தெரிந்தது தேவாலயத்தைதாண்டி வேகுஜனங்களை கிருஸ்த்துவ பாடல்கள் எட்டவே இல்லை. பின்னாலில் இளையராஜாவின் சொந்தக்குரலில் வந்தபாடல்கள் ஈர்த்தன என் நண்பர்கள் சொல்வார்கள் கழுத கத்துரமாதிரி இருக்கு அதபோயி ரசிக்கிரியடான்னு ஹனீஃபா குரலில் இசை தொடங்கியாதாலோ என்னவோ இந்தமாதிரி குரல்கள் எங்க்குப்பிடித்துப்போயின ஹனீஃபா குரலின் உயரம் வேறு யாராலும் தொட முடியாத தனித்துவம் கொண்டது. விஞ்ஞாத்தின் விஸ்வரூபம் ஒலிபெருக்கியே தேவை இல்லைமல் கேட்கும் அளவுக்கு கனத்த குரல் ஹனீஃபாவினுடையது. “கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்; கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்”, “ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” மற்றும் ”மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யார சூலல்லாஹ்” எத்தனைமுறை கேட்டாலும் செவிகள் இனிக்கும்

ஹனீஃபா சினிமாவில் குலேபகாவலி, பாவ மன்னிப்பு, இளையராஜாவிடம் இரண்டு மூன்று படங்களில் தான் பாடினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார பீரங்கி கழகத்தின் தொடக்கத்திலிருந்து கொள்கைமாறாது அந்தக் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றதில் ஹனீஃபாவின் பங்கு மகத்தானது. ”கல்லக்குடி கொண்ட கருணாநிதியே” என்ற பாடலால் கருணாநிதி அவர்களின் புகளை செவியுள்ளவனையெல்லாம் கேட்க வைத்தவர்.

ஹனீஃபா தன்னுடைய பெரும்பான்மையான பாடல்களுக்குத் தானே இசை அமைத்தார். அவரை இசை உலகமும் தமிழகமும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை அவரை ஓர் சார்புள்ளவராகவே பார்த்தார்கள் திறமைகளை மதிப்பதைவிட சாயம் பூசுவதிலேயே பலரது திறமைகள் மறைக்கப்படுகின்றன.