Saturday, May 9, 2015


ஊழலை ஓழிக்க ஓர் வழி
++++++++++++++++++++++
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. 
பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. (Transparency International) நடத்திய 
ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, 
அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக
வேலைகளை முடித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது

ஊழ் என்பதற்கு முறை, விதி, பழவினை என்று பலபொருளுண்டு.
ஊழ்+அல் = ஊழல். ஊழ்(முறை) அல்லாதவைகளே ஊழல் ஆகும்.
அதாவது, முறை தவறிய, விதி மீறிய செயல்களே ஊழல் எனக் கூறலாம்.

இலஞ்ச லாவண்யம்
இலஞ்சம் = ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக
முறைகேடாகப் பணம் அல்லது பொருள் அளிப்பதே இலஞ்சம்
லாவண்யம் என்றால் அழகு. லஞ்சத்தோடு லாவண்யத்தை ஏன் சேர்த்தார்கள் தமிழர்கள்

சாம தான பேத தண்டம் எதிரியைப் பணியவைக்க நான்கு வழிகள்
(சாணக்கியரால்) சொல்லப்பட்டுள்ளன.
மேல்கண்ட 3ல் நடக்காத காரியத்தை தானமாக (இலஞ்சம்தான்…சற்றே நாகரிகமாகத் தானம் என்கின்றனர்.)
அவர் விரும்பும் பொருளைக் கொடுத்து வசப்படுத்துவது.

ஊழல் தேனை எடுக்கும் பொழுது புறங்கையை நக்குவது ஊழல்; சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் கமிஷன் அடிப்பது.
வஞ்சகமின்றி பரவியிருப்பது லஞ்சம்மட்டுமே
எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
இலஞ்ச லாவண்யங்கள் அதிகமாக உள்ள துறைகள்
ஆன்மீகத்தின் வழியாக ஆழ்மனதில் பதிந்ததனால்
பத்திர பதிவு துறை, பொது பணித்துறை 3. வட்டார போக்குவரத்து துறை
வருவாய் துறை, அரசு பொது மருத்துவ மனைகள்

அரசு வருமானம் இலஞ்சமாய்
அதிகாரவர்கத்து பாக்கெட்டுகளில் அடைக்கமாகிறது
கோயில்களுக்கு அர்ச்சகர்கள் போல்
அரசுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள்
நீதிமன்றங்களில் நியாயாதிபதிக்கு தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ,
அவர்களிடமே அதிகம் மக்கள் செல்லுகின்றனர்.
கெட்டிக்காரர்களாகவும், யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களிடம் மக்கள் செல்லுவதில்லை.
தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர்
கடவுளுக்கே இலஞ்சம் கொடுத்தவிட்டதால்
இலஞ்சத்தை இழிவாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது.

லஞ்சம் வாங்காத அதிகாரிகள் முட்டாளாகவே கருதுகின்றனர்.
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் சாபத்திற்கு யாறும் பயப்பட்டதாக தெரியவில்லை

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளுக்கு 1954 ஐ அழையுங்கள்
இலஞ்சம் கேட்டல்,பெறுதல், கொடுத்தல் போன்ற குற்றத்திற்கான தண்டனைகளாக
07ஆண்டு சிறைத் தண்டனை, 5000 ரூபாய் வரை அபராதம் மற்றும் தண்டப்பணம் செலுத்த வேண்டும்.

சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய ஊழல்வாதிகளால்
மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன.

அதிக கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் அமைப்புகள்,
பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒளிபுகா அதிகாரத்துவம்
மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு
சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை,
வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை
இந்தியாவில் ஊழல் வளர காரணங்களில் அடங்கும்.

பக்தனா இருக்கிறதைவிட, யோக்யனா இருக்கணும்
என்கிறார் காமராசர்

பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால்
பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல்
விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்றார் பெரியார்

பல வருடம் பஞ்சமா பாதகம் செய்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விட்டால்,
எல்லாப் பாவங்களும் பஞ்சாய்ப் பறந்து விடும் என்றால் நாட்டில் ஒழுக்கம் எப்படி உயிர் வாழும்?

அறன் பொதுச்சிந்தனை ஊழல் சுயச்சிந்தனை
கடவுளையும் அதைத்தாங்கும் மதத்தையும் ஒழித்தால்
ஊழல் ஒழியும் என்னோடு படித்தவன் திடீர் தொடர்புகளால்
பன்னை வீடுகளும் பகட்டுகாருமாக வளம்வந்தான்
தான் திருப்பதி போனதாகவும் தன் வாழ்வில் திருப்பம் வந்ததாகவும்
என்னையும் கூட்டுக்கு அழைத்தான்
என்ன தொழில் செய்தாய் எப்படி திருப்பம் வந்தது என்றேன்
ரகசியம் என்றான் பரவாயில்லை சொல் பலருக்கு பயன்படட்டும் என்றேன்

முதலில் ஏழுமலையானை ஒரு பங்குதாரராக்கினேன்
இலாபத்தில் 50% அவருக்குத்தான்
அதைத்தான் உண்டியலில் போட்டுவிட்டு
மொட்டையடித்துவிட்டுவந்தேன் என்றான்

என்ன தொழில் செய்தாய் என்றேன்
ரகசியமாகச்சொன்னான் செம்மரக்கடத்தல் என்று?
செம்மரங்களை துண்டு துண்டாக வெட்டி
துறைமுக அதிகாரிகளின் துணையோடு
துணிகளை அனுப்புவதுபோல் அனுப்புகிறார்கள்
எத்தனை அவதாரம் எத்தனை அற்புதம் செய்த தெய்வம்
ஒரே ஒரு அற்புதம் செய்தால் ஊழல் ஒழியும்
தவறாய் சம்பாதித்த பணத்தை உண்டியலில் போடும்போதே
போடும் நிலையிலேயே ஒரே ஒருத்தனை சிலையாக்கினால் போதும்

ஏனோ ஏழுமலையானுக்கு இன்னும் விரும்பவில்லை போலும்
ஊழல் ஒழியவேண்டுமென்று
திருடர்களிடம் பங்குதாரராகவே தொடர்கிறார்
அவர் கடன் தீரும்வரை ஊழல் ஒழியாது
குபேரனை தீர்த்துகட்டிவிட்டால் ?||
ஏழுமலையான் இலஞ்சம் வாங்குவதை நிறுத்திவிடுவார்

"இளைதாக முள்மரம் கொல்க"

No comments:

Post a Comment