Saturday, May 9, 2015


கடவுளும் கலிலியோவும்
+++++++++++++++++++++++
எல்லாவற்றையும் நம்பிக்கை சார்ந்து வாழ்வது
ஒரு சாரார் முட்டாளாக இருப்பினும்
ஆனந்தமாக இருப்பார்கள்

எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிவு சார்ந்து வாழ்வது
ஒரு சாரார் வெற்றிகள் அதிகமிருந்தாலும் தனி மனித வாழ்வில்
வெறுமையில் வாழ்வார்கள்

நம்பிகையையும் அறிவையும்
தேவைக்கேற்ப பயன்படுத்தி வாழ்பவர்கள்தான்
வாழ்வை முழுமையாக தூய்க்கிறார்கள்

காய்ச்சல் வந்தவன் கடவுளைத்தேடிய காலமுண்டு
இப்போது மருத்துவர் தீர்க்க இயலும் நோய்களுக்கு கடவுளை தேடுவதில்லை
தீர்வு கிடைக்காத திசைகளில் தேவனை தேடுகிறார்கள்

சொற்கம் தட்டையான பூமிக்கு மேலே உள்ளது என்ற பழைய ஏற்பாட்டு
மதவாதிகளிடையே பூமி தட்டையல்ல உருண்டை என்ற
கலிலியோவை மதம் கல்லால் அடித்தது
சிறையிலடைத்தது அறிவாளிகளை இல்லுமினேட்டர்ஸ்
என்ற முத்திரையில் மதம் அறிவாளிகளை கொலை செய்தது
இல்லுமினேட்டர்ஸின் புத்தகங்களை தீயிட்டு கொலுத்தினர்

காலம் உண்மைகளை தாமதமாகவே கண்டுபிடிக்கிறது
எனில் நமது நம்பிக்கைகள் அவ்வளவு ஆழமானது
பூமி உருண்டை என்பதை புதிய ஏற்பாட்டில்
மெளனமாய் மாற்றிக்கொண்டார்கள் மதவாதிகள்
ஆனால் சொற்கத்தைத்தான் இன்னும்
உரக்கத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

ஆன்மீகம்தான் அறிவாளிகளை அழிக்கத்துடிக்கிறது
ஏனென்றால் அவர்களின் அடித்தளம் பயம்
ஒரு கடவுள் மற்றொரு கடவுளையும்
ஒரு மதம் மற்றொரு மதங்களோடும்
சண்டையிட்டுக்கொண்டுள்ளது

அறிவு முயற்சியின் மூலதனம்
தலைமுறையாய் இருந்த தவத்தின் பலன்
நம்பிக்கை ஓர் வரம்
முடமாகிப்போனால் அதுவே மூடநம்பிக்கை

கலீலியோ கலிலி ஜனவரி 8, 1642 இத்தாலியின் பைசா நகரில் இசைஞானி வின்சென்சோ கலிலி மற்றும் குயுலியா அம்மன்னடி ஆகியோருக்கு முதல் மகனாக பிறந்தார். இவர் ஒரு மருத்துவ மானவர் அதை துறந்து வானியல் ஆய்வுகளில் ஈடுபட்டார் தொலைநோக்கி மூலம் வெள்ளி, வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டறிந்தார் அதற்கு கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர். மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்தல் ஆகியவை வானியலுக்கு இவரளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும் "நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை" "நவீன இயற்பியலின் தந்தை", "அறிவியலின் தந்தை", மற்றும் "நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படுகிறார்.

விண்ணோடு விளையாடிக்கொண்டிருந்தவனுக்கு மரினா என்ற பெண்ணோடு காதல் மலர்ந்தது 2 பெண் 1 ஆண்குழந்தைகள் பிறந்த பின்னும் இறுதிவரைதிருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த காட்டாறுக்கு கல்யாண கறைகள் தேவைப்படவில்லை காரணம் கலிலியோ அதிகம் காதலித்தது அறிவியலைத்தான் நல்ல கணவராகவோ தந்தையாகவோ கொள்வதுகடினமான ஒன்று.

பூமி எந்தவகையிலும் சுழல்வதோ அசைவதோ இல்லை. பூமி நிலையாக இருக்கின்றது. அத்துடன் பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி நாம் அறியும் சகல கிரகங்களுமே பூமியைபச்சுற்றித்தான் சுழல்கின்றன என பைபிளில் ஏற்றுக்கொண்டது

பைபிளுக்கு எதிராக கருத்துச்சொன்ன கலிலியோ மீது மதம் கல்லெறிந்தது. ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை அவரின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது. இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டு தொலை நோக்கியை கண்டுபிடித்தவனுக்கு
பக்கத்தில் இருப்பதுகூட பார்க்கமுடியாமல் பார்வை போனது அப்போது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து அறிவியலைவிட்டு குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் மனித குலம் ஆயிரம் வருடங்கள் பின்னே இருந்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை கலிலியோவின் மன உறுதி வென்றது அவர் இறந்தபின் அந்தமதம் மனம்மாறி அவரிடம் மன்னிப்பும் கேட்டது. மத நூலில் தவறுகளை மாற்றியும் கொண்டது.

இந்து மதமோ மாறமறுக்கும் இரும்பு இதயம் 2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும்., 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. சாக்கிய சமணர்கள் 8,000 பேரை நிர்வாணமாக ஆக்கி - ஆசனத்திலே இட்டு, முனை தலைக்கு வருகிறார்போலக் கழுவேற்றினார்கள். மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.
நாமும் வரலாறு மறந்து வணங்கி மகிழ்கிறோம்

No comments:

Post a Comment