இந்து நாடு நேபாளத்தில் இருப்பது கல்லா அல்லது கடவுளா?
++++++++++++++++++++++++++
இந்து மதத்தில் மொத்தம் 33 கோடி கடவுள்
உள்ளதாக 1. வேதம், 2. உபநிஷத்துக்கள், 3. ஸ்ருதி,
4. ஸ்மிருதி, 5. புராணங்கள், 6. இதிகாசங்கள்
கூறுகின்றன உலகத்தின் ஒரே இந்து நாடு நேபாளம் மட்டுமே
எல்லா கடவுளுக்கும் தனித்தனி தொகுதி
தனித்தனி வேலைகள் ஒதுக்கப்பட்டும்
நேபாளத்தை காக்க இத்தனை இந்து கடவுள்கள் இருந்தும்
ஒரு கடவுளுக்கு கூட காப்பாற்ற மனமில்லாமல் போனதே !!!
இமய மலையையே சிவனாக வணங்கும் சமூகத்தில்
சிவனே இந்த உயிர்பலிக்கெல்லாம் பொறுப்பு
(இதுவரை 5000 பேர்கள் இறந்ததாக தகவல்)
கணக்கில்லாமல் 25,000 என்கிறார்கள்
ஒன்று கடவுள் தப்பானவராக இருக்கவேண்டும்
அல்லது இறந்தவர்கள் தப்பானவராக இருக்கவேண்டும்
இந்த 25,000 பேர்களில் ஒருத்தன் கூட நல்லவன் இல்லையா ?
கடவுளின் அவதாரம் சாகசங்கள் சாதனை பராகிரமங்கள் பலம் எல்லாம்
பழங்கதைகளா ? பொய்யா?
ஏதாவது ஒரு சாமி பூமியில் இரு அடுக்குகள் நகராமல்
மக்கள் இல்லாத எத்தனையோ இடங்கள் உள்ளனவே
அங்கே நகர்த்தி நேபாளத்தை உலகின் ஒரே இந்து நாட்டை காத்திருக்கலாமே
இந்தியாவையும் இந்து நாடாக்க தலை கீழாக தொங்கிக்கொண்டிருகும்
இந்த மத வவ்வால்கள் என்ன சொல்லப்போகிறார்கள்
கல்லைக்காட்டி இது கல்லா அல்லது
கடவுளா என கேட்கிறீர்கள்
எனக்குப்புரியவில்லை
கல்லை ஏன் கடவுளாய் பார்க்கிறீர்கள்
கல்லை கல்லாகவும்
கலையை கலையாகவும்
கடவுளை கடவுளாகவும் பார்ப்பதில்
என்ன பிரச்சனை உங்களுக்கு
எல்லாவற்றிலும் கடவுலைத்தேடுவது அல்லது
எல்லாவற்றையும் கடவுலாக்க முயல்வது
தனது சிந்தனையை ஆசையை
அடுத்தவர்மீது திணிப்பது
உருவத்திலிருந்து அரூபத்தை காட்டுவதாக
கல் மூலமாக கடவுலை காட்டுகிறேன் என
கலைஞர்களின் சுய நலம்
சாமானியர்கள் இன்னும் கல்லோடுதான்
கட்டிபுரண்டுக்கிடக்கிறார்க
அரூபத்தில் பேயைத்தான் தேடுகிறார்கள்
பலரது பயமும் பலவீனமும்
முட்டால்தனமும் சிலருக்கு பிழைப்பாகிப்போனது
சுய நலமுள்ள சிந்தனையாளர்களால்
சிந்திக்க மறந்தவர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டதுதான்
கடவுளெனும் கண்டுபிடிப்பு
பொது நலமுள்ள சிந்தனையாளர்களால்
சிந்திக்க முடியாதவர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டதுதான்
அறிவியல் கண்டுபிடிப்புகள்

No comments:
Post a Comment