Saturday, May 9, 2015


தம்பி தீனா திடீரென மொட்டையுடன் வந்து நின்றது
ஆச்சரியாமாய் இருந்தது
தைப்பூசத்திற்கு மூன்று நாட்கள் கோயிலிலேயே தங்கி
விருதமிருந்து மொட்டைபோட்டு வந்துள்ளான்
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் 
ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
முருகப் பெருமானுக்கு கொண்டாடப் படும் விழாவாகும்.

அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில்
சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு
கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை
பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள். சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.
பழனியில், ஈழத்தில்,மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில்
மலேசியாவின் பினாங்கு, சிங்கப்பூரில் தைப்பூசம்
சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து
பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்
மொரீஷியசில், ஆஸ்திரேலியாவில்
தமிழர்கள் உலகில் எங்கெல்லாம்
வாழ்கிறார்களோ அங்கெல்லாம்
இந்த கூத்து அரங்கேருகிறது

இந்திய ஜ்னாதிபதி, பிரதம மந்திரி,
தேர்தல் ஆணையர், அரசியல்வாதிகள்
அப்துல் கலாம் இந்திய வின்வெளித்துறை தலைவர்
மற்றும் உச்சத்தில் உள்ளவர்க்ள்
அனைவரும் அவரின் காலில்விழுந்து கழுவிக்குடித்தார்கள்

அந்த ஆன்மீகப்பெரியவனோ
மூன்று தலைமுறை நடிகைகளையும்
பல்வேறு வயதுடைய பெண்களுடனும்
காமவிளையாட்டு விளையாடி கழுவிக்குடித்தவன்
என்பதை ஆதரத்துடன் வெளியே சொன்ன
உதவியாளனை அடியாள்வைத்து கொலைசெய்த
ஆன்மீக உச்சம்
வசதி, அதிகாரமில்லாதவர்களுக்கும் மட்டும்தான்
இந்திய சட்டம் தண்டனை தரும்
இங்கு நடப்பது ஜன நாயக ஆட்ச்சியல்ல
அதிகாரமும் பண பலமும் கொண்டோரின் சர்வாதிகார ஆட்சி
அந்த பெரியமனிதன் இப்போது நிரபராதி
சரி அந்த கோயிலில் ஓர் தெய்வமுண்டே
அந்த தெய்வத்தையும் கொன்று புதைத்துவிட்டார்களா?
சக்தியில்லாத தெய்வங்கள் இருந்தென்ன இலாபம்
சங்கராச்சாரிகளின் கைகளில் ஓர் குச்சி உண்டு
அதன் பெயர் தண்டம் அதன் உச்சியில் துணி ஒன்று ஆடும்
அதன் பெயர் கெளபீனம் (கோவணம்)
அந்த மாற்றுத்துணிமட்டுமே அவர்களின் சொத்து
அப்படித்தான் வாழ்கிறார்களா
நம் சன்னியாசிகள் ????????????

என் ஆச்சரியத்திற்கு காரணம் தம்பி தீனா
ஓர் இளம் விஞ்ஞானி
எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்று
மனம்சார்ந்து வாழ்வது ஆன்மீகம்
அப்படியே நம்பாமல் கேள்விகளின் துணைகொண்டு அறிவால்
விடைதேடுவது அறிவியல்
ஆன்மீகம் போன தலைமுறையில் புதைத்த பொய் - (பிணம்)
அறிவு போன தலைமுறையின் அனுபவ நீட்சி - (கண்டுபிடிப்புகள்)
கிரகாம் பெல் தொலை பேசியை கண்டுபிடித்தவன்
Hello! என்பது அவரது மனைவி பெயரென்று
தவறாக சொல்கிறார்கள் அவரது மனைவி பெயர் Mabel Hubbard
காதலியின் பெயர்தான் Margaret Hello
அன்று உலகில் அதிகம் உச்சரிக்கப்படுக் சொல்
கடவுளாக இருந்தது இன்று Hello தான்
உலகில் அதிகம் உச்சரிக்கப்படுக் சொல்
ஆன்மீகத்தை அறிவியல் மிஞ்சமுடியாத
இடம் இறப்பும் பிறப்பும்தான் இப்போது
குழாய்களில் குழந்தை பிறக்கிறது
செயற்கை உறுப்புகள் செய்துகொண்டுள்ளனர்
சொர்க்கத்துக்கு செல்ல மனமில்லாத மனிதர்கள்
இறப்பைத்தள்ளிப்போட மருத்துவமனைகளில்
மனுகொடுத்துக்கொண்டிருகிறார்கள்

No comments:

Post a Comment