Saturday, May 9, 2015


கயல் விமர்சனம்
உலகின் விலைமதிப்பில்லா பொருளாக
தண்ணீர் மாறப்போகிறது
2025 ல் ஒரு லிட்டர் தண்ணீரின்
விலை தெரியுமா 
1000 ரூபாயென ஐனா அறிவித்திருகிறது

கயல் என்பது மீன்
நீரின் அழுக்கை தான் உண்டு நீரை சுத்தமாக்குவது மீன்கள்தான்
திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்).
தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து தன்னை மாற்றிக்கொள்ளும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ் வெப்ப நிலை விலங்கு என்று சொல்வர்
சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன.

சினிமாகாரர்கள் பிச்சை வாங்கவேண்டும் கதைகளை மதங்களிலிருந்து
பைபில் அதிகாரம் 01 ல்
முதல் நாள் பூமியையும் 2 ஆம் நாள் நீரையும் 4 ஆம் நாள் மீனையும் கடவுள் படைத்ததாக கூறப்படுகிறது

இந்துக்களில் எதையும் விட்டுவைக்கவில்லை மீனும் கடவுள்தான் ஆனால் வறுத்து சாப்பிடுவோம்.

படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.
மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும்.
அவர் ஒரு சமயம் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன.

அதை ஹயக்கிரீவன் என்ற அசுரன் வேதங்களைக் கடலுக்குள் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, மச்சாவதாரம் ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.

பிரம்மன் தூங்குவாரா ஒரு அசுரன் தன்னோட மனித உருவில் நீருக்குள் உயிவாழும்போது கடவுளால் அவதாரம்தான் எடுக்க முடிகிறது

பிரபு சாலமனின் கயலுக்கு வருவோம்
தத்துவ சிந்தனை கொண்ட இரண்டு இளைஞர்களின்அந்தந்தத் தருணங்களை ரசித்து வாழும் அனுபவமாகத் தொடங்குகிறது'
சொத்துச் சேர்ப்பதை விட்டுவிட்டு நல்லநினைவுகளைச் சேமிக்கவேண்டும் என்பது.

பலருக்கு இது பாடம் சாகும் வரை பணத்திற்காக வாழ்ந்துவிட்டு வாழ்வை அனுபவிக்காமலேயே இறந்துவிடுவார்கள்
இந்த அனுபவங்களினூடே ஊடுருவும் காதலும் அதன் தாக்கங்களும்தான் கயல். காதலும் அலைதலும் தொடங்கிய பிறகு படம் ஒரே வட்டத்தில் சுழல ஆரம்பிக்கிறது சுனாமியாக,

சாதிக் கட்டுமானத்தையும் அதன் தீவிரத்தையும் நுட்பமாகச் சொல்லும் இயக்குநர் பொருளாதாரம் சாதிக் கட்டுமானத்தை ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்துவிடும் என்பதே கயலில் மையக்கதை

இயற்கையின் அற்புதங்களை சாலமன் காட்சிப்படுத்தும் விதம் பாராட்ட வேண்டிய அம்சம். படம் கண்களுக்கு விருந்து. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு அற்புதம். குறிப்பாக ‘பறவையா பறக்குறோம்’ பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகு.

இமான் இசை ‘மைனா’, ‘கும்கி’ போல மனதில் தொடர்ந்து ரீங்கரிக்கும் பாடல் எதுவும் இல்லை. பின்னணி இசை படத்துக்கு வலுவூட்டுகிறது.

புதுமுகங்கள் நுட்பமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

நாயகியின் முதலாளிகளாக நடித்திருக்கும் பெரைரா, தேவராஜ்,
சின்னஜமீன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெரியவர்
(இவர் அடிக்கும் கூத்து திரையரங்கு முழுக்க சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது)

முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும். என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .

‘கயல்’- தொடர்ந்து வெற்றிகளை பெற்றுவரும் இயக்குனர் பிரபு சாலமனுக்கு ஹாட்ரிக்!

No comments:

Post a Comment