Sunday, November 26, 2017

தலைவனுக்காக தலைமுறை தவம் கிடக்கிறது

அடிமை ஆடுகளுக்காய்
நரிகள் நாட்டாமை
செய்கின்றன

நாட்டு மருந்து கடை வைத்திருந்தவரின் வாரிசுகள்
இன்று நாட்டின் பணக்காரர்களின் வரிசையில்
பட்டியலிடுகிறார்கள்

உழைத்து வளர்ந்திருந்தால் ஊர் காரனென்று
பெருமை பட்டிருக்கலாம்
ஊரை வளைத்து உலையில் போட்டுள்ளனர்

தவறு செய்து தண்டனை பெற்று
சிறை சென்றதெல்லாம்
தலைவனாகுவதற்கு தகுதியாகிவிட்டன

பூசாரிகளெல்லாம் கடவுளாய்
அவதாரமெடுத்துவிட்டனர்
சாமியார்களெல்லாம் சல்லாப வகுப்பெடுக்கிறார்கள்

தெய்வமே திருடனாகியப்பின்னே
கோயிலுக்கும் கற்பகிரகத்திற்கும்
மதிப்பிங்கேது

தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள்
தலைமைப்பதவியில் இருந்தால்
தகரங்கள் தங்கமாகின்றன

குப்பைகளே கோபுரங்களாகியதால்
முடை நாற்றம் இங்கு
மூக்கைத்தொலைக்கிறது

தலைமையின் தனிமனித பலவீனம்
பல தலமுறைகளை தடுமாறவைத்துவிட்டது
எம்ஜிஆர் மிச்சம் வைத்ததை ஜெயலலிதா உச்சம் தொட்டார்

தலைவனும் கடவுளும் இல்லாமல் தமிழனின்
தனிமனித வாழ்வே முடிவதில்லை
எவன் காலையாவது கழுவி குடிக்கவேண்டும்

அது கல்லாகவும் இருக்கலாம் பிணமாகவும் இருக்கலாம்
தலைவனுக்காக தலைமுறை
தவம் கிடக்கிறது

தேசம் நாசமாகிவிட்டது


தேசம் நாசமாகிவிட்டது
பாசிசம் என்பது பிற்போக்குத் தனமானது மட்டுமல்ல. 
ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட. மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல், வலுவான தலைமையை
வலியுறுத்தும் டார்வினிய தத்துவத்தின் அடிப்படையில் அணுகும் ஓர் சர்வாதிகாரமாகும்.
வலிமையான ஜனநாயகமே ஓர் சர்வாதிகாரம்தான் மோடியும் லேடியுமே இதற்கு உதாரணம்

கோடிக்கணக்கான இந்தியர்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசு துடிக்கிறது. ‘லாபம் தனியாருடையது, நஷ்டம் மட்டும் மக்களுக்கு.
‘ஷ்ரமேவ ஜயதே’ திட்டம் துவக்கப்பட்டது. மோ\டி சொல்கிறார் உழைப்பாளிகள் ‘யோகிகளாம்’!! ஆமாம் யோகிகளுக்கு பொருள் தேவை இல்லை திருடர்கள் முதலாளியானதால் 

பதவியேற்ற 6 மாதங்களில் ஏகப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்
அவருடைய ஆறு வெளி நாட்டு பயணத்தில் ஐந்து தடவை பெருமுதலாளி அதானியை உடன் அழைத்துச் சென்றார். 
பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அதானிக்கு 6500 கோடி ரூபாய் கடன் வழங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. 
அதானிக்கு ஏற்கனவே 60ஆயிரம் கோடிரூ கடன் பாக்கி உள்ளது. 
சாமானியரின் பயிர் கடனை திரும்பத் தராவிடில், டிராக்டரை பறிமுதல் செய்கிறது. அதானிக்கு 6500 கோடி ரூபாய் கடன் உதவி

விவசாயிகளின் தற்கொலை 26٪ அதிகமாகயுள்ளது, கடந்த 5 வருடங்களில் கண்டிராத அளவிற்கு, ஏற்றுமதி 11٪ இறங்கு முகத்தில் இருக்கிறது. 
மோடி அரசுக்கு, ஒரே சாதகமான விஷயம், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை 40٪ குறைக்கப் பட்டிருக்கிறது. 
ஆனால், பெட்ரோல் விலையோ தினந்தோறும் ஏறிக்கொண்டேயிருக்கிறது. 
பெட்ரோல், டீஸல் மீது வரி விதிப்பின் மூலம் சென்ற ஆண்டை விட ரூ 75,000/- கோடி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கிறது. 

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைத்திருக்கப்படும் கறுப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் செலுத்தும் என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் உறுதியளித்தார்.
‘ஜன்தன்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் இத்திட்டதின் கீழ், அரசு துவங்கியிருக்கும், 
14 கோடி வங்கிக் கணக்கில் 75٪ கணக்குகள் இது வரை 0 Balanceல் தான் இருக்கிறது. மோடி பணம் போடுவார் என காத்திருக்கிறார்கள்
பணமதிப்பு நீக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
ஜிஎஸ்டி உற்பத்தித் துறையை மேலும் முடக்கி போட்டது. முதலீடுகள் குறைந்ததால் தொழில்துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் பலரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது. 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 
26% அதிகரித்துள்ளது. ஒருபுறம் கிராமப்புறப் பொருளாதாரம் அழிவு நிலையில் 
மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 
இந்த அரசு யாருக்குச் சாதகமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மூதேவி ஒருவரை நாம் திட்டவேண்டுமென்றால் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல். 
செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக மூதேவி பயன்படுத்துகின்றனர்
மூதேவி சனீஸ்வரனின் மனைவியாக இந்துக்களால் போற்றப்படுகிறார். 
திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.
இவரின் மற்றபெயர்கள் தவ்வை, ஜேஸ்டா, மூத்ததேவி, மோடி என அழைக்கப்படுகிறாள். 
திருமகளின் அக்கா நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். 
ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக கருதப்படுகிறது. 
மோடியை திட்டுவதற்கு தமிழ் தடுக்கிறது

தீபாவளி

மாற்றமே முன்னேற்றம்
பூமி தட்டையாக உள்ளது என்ற கிருஸ்தவர்கள்
உருண்டை என்று அறிந்த பின்பு
தங்களின் புனித நூலையே மாற்றிவிட்டார்கள்
அறியாமை விலங்கின் குணம்
அறிந்து திருந்துவது மனித இயல்பு
மாறவே மறுக்கும் இந்துமதங்கள்
பூமி இன்றும் தட்டையாக உள்ளது என்று பிடிவாதமாக
தீபாவளிகளை கொண்டாடிக்கொண்டுள்ளார்கள்

நதிகளையும் மலைகளையும் மரங்களையும்
தெய்வமாக வழிபடும் இந்துக்கள்
அந்த பூமாதேவியையே வேசியைபோல்
ஒரு பன்னி உறவு கொண்டு அசுரன் பிறந்த கதைதான் தீபாவளி
அந்த பன்னி வேறு யாறுமல்ல
மகா விஷ்ணு ஒரு கடவுளுக்கு பிறந்த பிள்ளை
எப்படி அசுரனனாக பிறக்ககமுடியும்
அந்த அசுரனனை கொன்றுதான்
தீபாவளியை கொண்டாடிக்கொண்டுள்ளோம்

வியாபாரிகளும் அவர்களுக்கு உதவும் ஓட்டுத்திருடர்களும்
வார்த்தை விளையாட்டு நடத்தி
தீபத் திருவிழாவாக திருத்திக்கொண்டுள்ளார்கள்
என்னவென்றே தெரியாது திரிகளுக்கு
தீ வைத்துக்கொண்டுள்ளது ஒரு தலைமுறை

தன்னிலிருந்து ஏற்படும் மாற்றமே சரியான மாற்றம்
அடுத்தவனிலிருந்து ஏற்படும் மாற்றம் ஏமாற்றம்
16 வயதிலிருந்து தொடர்ந்து
16 ஆண்டுகள் போர் புரிந்து
இறந்துபோனான் அலெக்சாண்டர்
வலியும் துன்பமும்தான் அவன் வாழ்க்கை

அவனுக்கு தெரிந்ததெல்லாம் போர் ஒன்றே
போரே உலகை வெல்லுமென்ற
தனியாத தாகம் கொண்ட
ஒரு மன நோயாளியை
மகத்தானவன் என்று உலகம்
கொண்டாடுகிறது

பெண், பொன் பொருள்
தேவைக்கு மேல் சேரும்போது
அதிகாரபோதையும் மனச்சிதைவும்
மனிதனை மன நோயாளியாய் மாற்றிவிடுகின்றது

உலக மாற்றமெல்லாம்
அடுத்தவனை மாற்றவே முயன்று தோற்றுப்போயுள்ளது
ஒரு சர்வாதிகாரியை அழித்து
மற்றொறு சர்வாதிகாரியை அமர்த்தும் வேலையை
ஒரு சர்வாதிகாரியே செய்து கொண்டுள்ளான்

தன்னைத்தானே மாற்றி
அலெக்சாண்டரைவிட அதிகமாக
தேசத்தையும் நேசத்தையும் வென்றவன்
நாட்டையும் வீட்டையும் துறந்த புத்தனே

மாமன்னன் அசோகர் புத்தமதத்திற்கு மாறிய நாளை
புத்த மதத்தினர் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்
மகாவீர் நிர்வானம் அடைந்த நாளை ஜெயினர்கள்
தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்

கொண்டாட்ங்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கம்
வேண்டாமா பூமியின் புதல்வர்களே

இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்
++++++++++++++++
ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் 
அரசி ஜோகாஸ்டா 
மூட நம்பிக்கையால் தீய சகுனங்களுக்கு அஞ்சி
சோபாகிளிஸ் (sophocles) என்ற தன் மகனை
சாமியார்களின் பேச்சைக்கேட்டு
காட்டுக்குள் விட்டு விடுகிறார்கள்

சோபாகிளிஸ் வளர்ந்து வாளிபனாக
நாட்டுக்குள் வருகின்றான்
சூழல் தாயுக்கும் மகனுக்கும் காதல் உருவாகிறது
காதல் உறவாய் தொடர்கிறது
இந்த சிக்கலான உறவை
சிக்மண்ட் பிராய்டு (oedipus complex) இடியாபஸ் சிக்கல் என்கிறார்
உண்மை தெரிந்து தங்களை தாங்களே
தண்டித்துக்கொள்கிறார்கள்

தமிழகம் இப்போது இடியாப்ப சிக்கலிலோ
சிக்மண்ட் பிராய்டு சொன்ன இடியாபஸ் சிக்கலிலோ
சிக்கித்தவிக்கிறது
தவரான தலைமையை தேர்ந்தெடுத்ததற்கான
தண்டனையை மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர்
அசுரனையும், ஆங்கிலயனை எதிர்த்த நம்மாள்
அரசியல்வாதிகளையும்
கொசுக்களையும் வதைக்கமுடியவில்லை
வதைபட்டுக்கிடக்கிறோம்

தமிழ்நாட்டில் நாகப்பட்டிணத்திற்கு அருகில் உள்ளது சிக்கல்
சிக்கல் தீர்வை நோக்கிய நகர்வுக்கான இடம்
வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணெயினால் செய்த சிவலிங்கம்
அமைத்து வழிபட்ட பின்னர், அதனை எடுக்கமுடியாது
சிக்கிக்கொண்டமையால் அந்த இடத்தை சிக்கல் எனப்பெயர்பெற்றது.

முருகப் பெருமான், சூரனை வதைக்க
அம்பிகையிடம் வேல் பெற்ற இடமாகவும் சொல்லப்படுகிறது
தமிழகமே சூரர்களால் சிக்கி சிக்கலில் இருக்கும்போது
பாட்டன் முருகப் பெருமான் வேல்கொண்டு ஏன் வரவில்லை

உண்மையிலேயே என் பாட்டனின் பெயரும் முருகன்
உழைப்பாளி சேவலுக்குமுன் கூவிவிடுவார்
தாத்தாவின் வீட்டுக்கு செல்வதென்றால் அவ்வளவு சந்தோசம்
அவரின் பாசம் வார்த்தைகளில் தெரியாது
அவர் ஓர் காட்டுமரம் இலைகளின் பசுமைக்காக
வேராய் இருந்து வேர்வை சிந்தியவர்
நாங்கள் விடைபெறும்போது
அவரின் பச்சை பெல்ட்டில் பைசாவையும் பணத்தையும்
மட்டுமல்ல பாசத்தையும் ஒழித்துவைத்து
தேடிக்கொடுப்பார்

இந்த காலப்பிள்ளைகள் உறவுகள் தெரியாது
வளர்கிறார்கள் செல்போனில்
முகம் தெரியாதவர்களோடு
மணிக்கணக்கில் பேசிக்கிடக்கிறார்கள்
என் தாத்தா வளர்த்த பசுமை இலைகள்
பகை வளர்த்து வெளிரிக்கிடக்கிறது

முருகா சூழ்ந்திருக்கும் அரசியல் சிக்கலையும்
சிதைந்து போயிருக்கும் உறவுகளில் சிக்கலையும்
தீர்த்துவைக்க எந்த அம்பிகையாவிடமிருந்து
வேலை கடன் வாங்கியாவது வா முருகா

சில்லரைப் பசங்க

சில்லரைப் பசங்க
++++++++++++++++++
நண்பன் குரு நிறைந்த கோபத்திலிருந்தார்
விவரம் கேட்டபோது தெரிந்தது
நடத்துனரிடம் பயணச்சீட்டு போக
மீதி ஒரு ரூபாய்க்காய் கையேந்தியபோது
கை நீட்டிக்கொண்டே இருக்காதிங்க
சில்லரை இல்லை என ஏதோ சண்டை

நான் குருகிட்ட சொன்னேன்
ஒரு ரூபாதானே விட்டுவிடவேண்டியதுதானே என
அந்த சில்லரப்பய சில்லரை இல்லன்னு சொல்லாம
கையேந்தாதன்னு சொன்னா நான் என்ன அவங்கிட்ட பிச்சையா கேக்கிறேன்
இதுதான் குருவுக்குவந்த கோபம்

ஒரு நாள் நான்கு ரூபாய் பயணச்சீட்டுக்கு
100 ரூபாய் கொடுத்தேன் நடத்துனர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்
எல்லோரும் 100 ரூபாய் கொடுத்தால் நான் என்ன செய்வேன் என்றார் எரிச்சலாக
நான் அவர் காதோரம் ரகசியம் சொன்னேன் நண்பரே
கோபப்ப்டாதீர்கள் மீதியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்
சில்லரை கொடுக்கமுடியாதவங்க வயதானவர்களுக்கு பயண்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்
அமைதியாக இருந்த அன்பர்
நான் இறங்கும் நிறுத்தத்தில் வந்து மீதி சில்லரையை கொடுத்துவிட்டு
ஏற்கனவே நான் உதவிக்கொண்டுதான் உள்ளேன்
என சில்லரையை சிரிப்போடு தந்துவிட்டு சென்றார்

தகுதி இல்லாத வண்டிகளை ஓட்டச்சொல்லி
நிற்வாகம் கட்டாயப்படுத்துகிறது
பல்வேறு குறைகளோடுதான் அவர்கள் பணிசெய்கிறார்கள்
அரசியல் தொடர்புள்ளவர்கள் வேலையே செய்வதில்லை
அவர்கள் யூனியன் பெயரைச்சொல்லி தப்பிவிடுகிறார்கள்
நேர்மையானவர்களுக்குத்தான் எப்போதும் சோதனை

பொதுமக்களோடு தொடர்புகொண்டு
மக்கள் பணிசெய்பவர்களுக்கு நிறைந்த பொறுமை அவசியம்
அதே போல் அவர்களுக்கு நிறைய சங்கடங்களும் உண்டு
குறைந்த ஊதியத்தில் நல்ல குடும்பத்திலிருந்து வந்து
ஓழுக்கமாய் மக்கள் பணி செய்பவர்கள் ஏராளம்
ஒரு சிலர் தவறு செய்யலாம்

அதனால் ஒட்டுமொத்த நடத்துனர்களின் நடத்தையையும்
சந்தேகிக்க கூடாது
சில்லரை சில்லரையாக இந்த தேசத்திற்கு உழைப்பவர்கள்

புத்த பூமி யுத்த பூமியாகி

புத்த பூமி யுத்த பூமியாகி
இரத்தம் குடிக்கிறது
இலங்கையில் இறந்த புத்தம்
மியான்மரில் மெல்ல சாகத்தொடங்கி இருக்கிறது
ரோஹிங்கியா முஸ்லிம்கள் 
வழிபாடு, உயர் பதவி
கல்வி, சுகாதாரம் உரிமை மறுக்கப்பட்டது
பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சி
8 லட்சம் மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்
இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, 
மியான்மர் ராணுவத்தினர் தீ வைத்து வருகின்றனர்

வங்கதேசத்தின் எல்லையான நாஃப் நதிக்கரையில்
நாதியற்று முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மியான்மரில்
அதிக இஸ்லாமியர்கள் இறந்தது இப்போதுதான்
இராணுவ ஆட்சியில் நடக்காத கொடுமை
அமைதிக்கான பரிசு பெற்ற ஆங் சான் சூகியின்
ஜன நாயக அரசில் தலைவிரித்தாடுகிறது

மதங்களை மறுத்த மகான் புத்தர்
அவர் பெயரில் மனிதன் மதம்பிடித்தாடுகிறான்
அமைதியை வன்முறைமூலம் அடைந்துவிடாலாம்
என்று எண்ணியதன் விளைவு
சரியான இலக்கை தவரான வழிகளில்
தேடிக்கொண்டுள்ளோம்
குறைகளை விதைத்துவிட்டு
நிறைகளை அறுவடை செய்ய காத்திருக்கின்றோம்

வன்முறைகளை வாழ்க்கைமுறையாக்கி
குழந்தைகளை திறமைமிக்க திருடர்களாகவும்
கொலையாளிகளாகவும் தயார் செய்துகொண்டுள்ளோம்
அன்பை தவிர்த்து அறிவாளிகளை
வார்த்தெடுக்கின்றோம்
வலிமையை வழிபாட்டுக்குள்ளதாய்
வணங்கி மகிழ்கின்றோம்

மதம் ஜாதி இனம் தேசம் எனும்
பிரிவினை வளர்க்கிறான் வலிமைக்காக
மதம் ஓர் அடிமை சிந்தனை
பயத்தின் அடிப்படியில் எழும்பிய கோபுரம்
அச்சத்திலிருப்பவனுக்கு ஆறுதல் தரலாம்
துயரத்தை மறப்பதற்கு போதையை தரலாம்
விடிவை தருமா ?

கெட்ட வார்த்தைகள் கேட்ட வார்த்தைகள்

கெட்ட வார்த்தைகள்
கேட்ட வார்த்தைகள்
+++++++++++++++++++++
ஒருவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, 
உறவையோ, உடலின் சில உறுப்புளையோ வைத்து கெட்ட வார்த்தைகளை கட்டமைப்பது
பழக்கமாகி விட்டது. பெரிதும் பெண்களைத்தான் கேவலப்படுத்துவார்கள் 

ஒருவனை திட்ட அவனது தாயைத்தான் முதலில் அவமானப்படுத்துவார்கள்
நம் குடும்ப அமைப்பில் பெண்களைத்தான் செல்வமாகவும் வீட்டின் கெளரமாகவும் பாதுகாத்தார்கள்
பண்டைய அரசர்கள் போரில் நாட்டின் செல்வத்தையும் பெண்களையும்தான் கவர்ந்து சென்றுள்ளார்கள்

15ம் நூற்றாண்டில் காளமேகப் புலவன் பல இரட்டுற மொழிதல் கவிதைகளை இயற்றியுள்ளார் 
எந்தவொரு வார்த்தையும் வெறுப்பின் குறியீடாக ஆகும்போது மட்டுமே கெட்ட வார்த்தையாகிறது.

அரியலூர் அனிதாவிற்காக ஒரு மாதத்திற்குப்பிறகு உணர்ச்சிவசப்பட்டார் நண்பர் குரு
அவர் ஒரு கெட்டவார்த்தை களஞ்சியம் கோபத்தில்
கெட்டவார்த்தைகள் அவர் வாயில் தவமிருக்கும்

கோபம் அறிவை மறைத்துவிடுகிறது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது
சாதாரண நிலையில் எவறும் நம்பமறுப்பார்கள் அந்த மனிதன் அப்படியெல்லாம் பேசுவாறென்று
நிதானத்தில் நல்லவனாக இருப்பதைவிட அசாதாரன நிலையில் நிதானமாக இருப்பது மேன்மை குணம்

நான் முரசொலியில் பணி செய்துகொண்டிருந்தபோது சம்மந்தமே இல்லாமல் சின்ன குத்தூசி ஐய்யா எனக்கு நண்பர் 
பக்கத்து இருக்கை என்பதால்
நான் இருபதையும் அவர் அறுவதையும் தொடும் வயது
அவரை பார்க்க பல பெரியமனிதர்கள் வருவார்கள்
அவர்களெல்லாம் எனக்கும் நண்பர்கள்
ஆனால் அங்கிருந்து வந்தபின்பு அந்த தொடர்புகளை நான் தொடரவில்லை

ஒரு நாள் சின்ன குத்தூசி ஐய்யாவை பார்க்க
தஞ்சையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார் அவரிடம் தஞ்சைவூர் பகுதி கெட்டவார்த்தைகளை
பேசச்சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார்
எனக்கோ ஆச்சரியம் ஒரு பெரியமனிதன் கெட்டவார்த்தைகளை பேசச்சொல்லி கேட்டு ரசிக்கிறாரே என
அவரிடமே கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில்
ஊரவிட்டு வந்து நிறைய வருடங்களாச்சிடா 
எங்க ஊரு கெட்டவார்த்தைகளை கேட்க ஆசையா இருக்குடா என்றார்

ஒரு நாள் தாமதமாக முரசொலியில் நுழையும் போதே
சின்ன குத்தூசி ஐய்யா தரைதளத்திற்கு வந்துகொண்டிருந்தார்
என்னைக் கண்டதும் வா நான் தலைவரை பார்க்க போகிறேன்
வந்து சும்மா என் கூட நில்லு என்றார்
எனக்கு புரிந்தது எதற்கு அழைக்கிறார் என்று
முரசொலியில் முதல் நாள் ஏதாவது தவறு நடந்தால் மறு நாள் காலை
கலைஞரிடம் அர்ச்சனை நடக்கும்
தலைவரின் அறைக்குள் நுழைந்தோம்
10 மணிக்கெல்லாம் சூரியன் சூடாகத்தான் இருந்தது

முரசொலி வளாகத்தில் சின்ன குத்தூசி ஐய்யாவிற்கு
ஒரு மரியாதை உண்டு
தம்பிக்கு மடல் எழுதிக்கொண்டே தலை நிமிர்ந்த சூரியன்
ஒரு தலைவனுக்குறிய தகுதி தவறு செய்தது யாரென்று தெரிந்துகொண்டார்
நீங்க ஏன் வந்தீர்கள் அந்த ............................. கெட்டவார்த்தை சொல்லி
அவனை வரச்சொல்லுங்கள் என்றார்
இருவரும் தப்பி பிழைத்து ஓடிவந்தோம்
நான் கேட்டேன் இப்போது மகிழ்ச்சியா என்று
என்னை முறைத்தார் சின்ன குத்தூசி
சரி எதற்கு இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்றேன்

அப்போதெல்லாம் வைக்கோவின் கட்டுரைகளை
போடாது வில்வம் என்பவரின் கட்டுரைகளைதான் முரசொலியில் போடுவார்கள்
அந்த கட்டுரையில் Pen is Mightier than Sword என்ற மேற்கோளில் PENக்கும் ISக்கும் இருந்த 
இடைவெளியை தவிர்த்துவிட்டு போட்டுவிட்டார்கள்
தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தன்னை சுற்றி நடக்கும்
தவறுகளுக்கு தீர்வு காண்பது அந்த தலைவனின் குணம்
இப்போது நடக்கும் இவ்வளவு தவறுகளை
எப்படி சகித்துக்கொண்டுள்ளார் என்பது
ஆச்சரியமே

வாழ்த்துகள் தாயே பல்லாண்டு வாழனும் நீயே

வாழ்த்துகள் தாயே
பல்லாண்டு வாழனும் நீயே
25 ஆண்டுகளுக்குமுன் முரசொலி பொன்விழா ஆண்டில்
நான் அப்போது கலைஞருக்கு அருகில் அவர்
என் பெயர்சொல்லி அழைக்கும் அருகாமையில் இருந்தேன்
அந்த சூரிய நதியில் எதிர் நீச்சல் போடமுடியாது
கரையேறி இன்று நான் கலைஞருக்கு
வெகு தொலைவில்
அதே சூரிய நதியில் புடம்போட்ட தங்கமாய்
உங்களின் ஓயாத உழைப்புக்கு 75 ஆம் ஆண்டு வைரவிழாவில்
கலைஞர் விருதை காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது
வாழ்த்துகள் தாயே
பல்லாண்டு வாழனும் நீயே
========================================
பதராய் எண்ணியோர் எதிரே
கதிராய் விளைந்த கதிரே
குட்டினால் குனியும் வென்மணியல்ல என
முற்றியும் தலை நிமிர்ந்தும் சோளக்கதிரே
கடைமடை பெற்றெடெடுத்த காவியமே
கலைஞர் கண்டெடுத்த ஓவியமே
அடிமை பெண்மையின் விளங்கொடிக்க
சேற்றில் முளைத்த செந்தழலே
கழகத்தின் சங்கொலியே
கலைஞரின் முரசொலியே
காவெரியின் முத்தே வான் மழைத்துளியே
ஞான பெருவொளி நங்கை நீயம்மா
பார்பேசும் உன் கீர்த்தி
திராவிடநேசமுள்ளவரைக்கும்
வீசுமே வாசம் உன் விசுவாசமே
பேசுமே காற்றும் கழகமும் உள்ளவரை
குழிபறிக்கு அரசியலில் நீ
கலைஞரால் மகுடம் கொண்டது அதிசயமே
நதியும் நனையாமல் கரையும் உடையாமல்
நீ பயிர் சேர்ந்தது சாகசமே
தலைவனின் கனவுகளைச்
சிறகடிக்கச் செய்தவளே
மேய்ச்சலின் பசுவெளியில்
மந்தைகளின் தேவதை நீ
விதையழிந்த விருட்சங்களின்
திராவிட விழுதே நீ
பயணம்மறந்த பாதைகளில்
தலைமுறைக்கு வழிகாட்டி நீ
இடர்களைத் தாண்டியும் வெற்றி
இமைகள் துளிர்த்திருக்கும்
நீர்த்துவிட்ட கனவுகளை
நிறைவேற்றியது உனது உரம்
கொடிமல்லி பூப்பறிக்கும் பருவத்தில்
நீயெப்படி கொள்கை கொடிபிடித்தாய்
யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களைப் போல்
உன் வாசகம் கேட்கும் எதிர்கட்சிகள்
செவிகள் தவம் கிடக்கும்
உன் போர்குரலை கேட்பதற்கே
காதுக்கும் நோகாத உன் அக்னிச்சொற்கள்
எப்போதும் கண்ணியம் காத்திருக்கும்
அடர்காட்டுக்கிடையே
வெளிச்சப்புள்ளியென வழிகாட்டும் தேவதையே
வானத்தின் எல்லையளக்க வருங்கால சந்ததிக்கு உன்
சிறகுகளை பாதுகாப்போம்
உன் பெயர் உச்சரிக்க கலைஞர்
ஓடிவருவார் காத்திருப்போம்

நேற்று பீட்டா... இன்று நீட்டா ?

நேற்று பீட்டா... இன்று நீட்டா ?
++++++++++++++++++++++++++++++++
தாயில்லா பிள்ளை
தானே சமைத்து தானே உழைத்து
தானே படித்து சாதித்தவள்
தானே சாகவில்லை
சமூகம்தானே சாகடித்தது
எவ்வளவோ வசதியிருந்தும்
குரல் கொடுக்காதவர்கள் மத்தியில்
குக்கிராமத்திலிருந்து டெல்லிக்கு சென்று
குரல் கொடுத்த குலவிளக்கு
தூக்குக்கயிற்றில் தொங்கிவிட்டாள்
நீயும் மருத்துவர்தான்
சமூகத்தின் தீமையை
கத்தியின்றி இரத்தமின்றி
அறுவை சிகிச்சை நடத்தியதால்
காசுகொடுத்து மருத்துவராகும்
கொடுமையை போக்க கோர்ட்டுக்கு போனா
காசு கொடுத்து நீதியை வளைத்து
உயிர கொடுத்து படித்தவளின்
உயிர எடுத்த கோர்ட்டும் குற்றவாளிதான்
தான் சுகமாக வாழ ஆசைபடுவதால்
கட்டுபாடுகளை ஏற்றுக்கொள்கிறோம்
அடிமைத்தனம் பலன் தருவதால்
அநியாயங்களை சகித்துக்கொள்கிறோம்
வழிமுறைகளை தவிர்த்து
சுய நலமாக சுகம் காண்கிறோம்
கொள்கைக்கும், கட்டுபாடுகளுக்கும்
அறிதிறனையும் மகிழ்ச்சியையும்
கொடுக்கமுடியாது
கட்டுபடுத்துவது அச்சத்தையும்
எதிர்ப்பையும்தான் வளர்க்கிறது
நீட் என்ற மிருகபந்தயத்தில்
எலியையும் புலியையும்
களத்தில் இறக்கி தீர்ப்பு கொடுப்பது
கயமைத்தனம்
நீட்டுதான் முடிவென்றால்
நாங்கள் தயார் அவகாசம் மட்டுமே எங்களுக்கு வேண்டும்
அரசியல்வாதிகளே
உங்களுக்கும் தேர்தலுக்குமுன் ஓர்
அகில இந்திய தேர்வு வைப்போம்
தேசமே தூக்குல தொங்கனும்

நீட் என்ன பெரிய நீட் உடனே ஆட்சிய மாத்து


நீட் என்ன பெரிய நீட்
உடனே ஆட்சிய மாத்து
செத்தபின்னே செக்கெதற்கு
உச்ச நீதிமன்றம்வரை போராடிய பெண்ணுக்கு
பணம் செலவு செய்தாவது படிக்க வைத்திருக்கலாம்

ஜன நாயகம் பேசுவோம்
பண நாயகம் பதவியில் 10ம் செய்யும்
நீதிதான் பேசுவோம்
அநீதிதான் இங்கு ஆட்சிபுரியும்

மக்களால் நான் மக்களுக்காக நான்
எனும் அரசுக்கு
மக்களைப்பற்றிய அக்கரையில்லை
பதவியில் நான் பதவிக்காக நான் எனும்
நாற்காலி சண்டையிலிருகிறார்கள்

ஏ.. கல்வி தந்தைகளே
இன்று கண்ணீர்வடிக்கும்
அற முதலைகளே சாகும்போது எதை கொண்டு போவீர்கள்
வரலாறு கண்ட அரசனெல்லாம் வெறும் கையோடுதான் செத்துள்ளான்
தமிழக உதாரணம் ஜெயலலிதா பேயாய் சேர்த்த சொத்தை
நாய் நரியெல்லாம் நக்கித்திரிகிறது

பழமை பாடையில் படுத்துக்கிடக்கும்
பள்ளி கல்வித்துறை
ஊழில் திளைத்து உறங்கிக்கிடக்குது
உயர் கல்வித்துறை

மாமிசம் சாப்பிட்டாத்தான் மருத்துவராகலாம்னு
சட்டத்த மாத்தினா எவ்வளவு தப்போ அதுபோல்தான்
சமஸ்கிரதம் தெரிஞ்சாதான் மருத்துவராகலாம் அப்போ
அத பெரியாரும் பெரியோர்களும் போராடி கொடுத்த இந்த வாய்ப்ப
தட்டி பரிக்க சதி நடக்குது இப்போ

ஒரு சைவகாரன் அசைவத்துக்கு மாற (குறைந்தது முட்டை சாப்பிட) 
எவ்வளவு காலமெடுக்குமோ
அவ்வளவு அவகாசமவது தேவை அரசு பள்ளி மாணவர்கள்
நீட் எழுதி மருத்துவராக

நம் கல்வி தனிமனித சிந்தனை முதிர்விற்கும்
சுதந்திரமாக வாழ்வதற்கும்
அன்பும் பண்பும் தன்னம்பிக்கை மலர்வதற்கும் உதவாமல்
அச்சில் வார்த்த மனப்பாட பொம்மைகளை
வார்த்தெடுக்கிறார்கள்

பள்ளிகளில் அற நெறி, கலை மற்றும் உடர்கல்வி
வகுப்புகளை ஒழித்துவிட்டோம்
வரட்டு கல்வி திறமைசாலிகளை தயாரிக்குமே தவிர
படைப்பாளிகளையும் தன்னம்பிக்கையையும் தரவே தராது

ஏ அரசியல்வாதிகளே இப்போதாவது 
மனப்பாட ஆட்டுமந்தைகளை உறுவாக்குவதை நிறுத்திவிடுங்கள்
இல்லை என்றால் ஒரு அனிதா இல்லை
பல அனிதாக்கள் பாடைக்கு தயார்

கத்துங் கைபேசி - சற்றே வந்து காதிற் படவேண்டாம்

நண்பர்களே
கைபேசியிலும் வாட்சப்பிலும்
தொடர்பற்று போனதிற்கு வருந்துகிறேன்
நானும் நண்பர் பாலாவும்
இருசக்கர வானத்திலிருந்து
மூன்று சக்கர ஓட்டுனரால் இடித்து விழுந்துவிட்டோம்
நாங்களிருவரும் சிராய்ப்புகளோடு
தப்பிவிட்டோம்

என் கைபேசிமட்டும் காலமாகிவிட்டது
உலகிலேயே எனக்கு பிடிக்காத
பொருள் கைபேசிதான்
என் தனிமையை வன்முறைசெய்வதால்
10 நாட்கள் இனிமையாக இருந்தது
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது கைபேசி இல்லமை இனிது
இருந்தும் அந்த தொல்லைபேசி இல்லாது
இந்த பொருளுலகில் வாழ்வது கடினமென கற்றேன்

மகாகவி மாதிரி எனக்குப் பேராசை இல்லை
காணி நிலம் வேண்டாம்-பராசக்தி
தூணில் அழகியதாய் ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டாம்
கத்துங் கைபேசி - சற்றே வந்து
காதிற் படவேண்டாம்

20 ஆண்டுகளூக்குமுன்
நான் வரைந்து பழகிய பாரதிபடம்

பொருள் தேடா அருள் வேண்டும் - பராசக்தி
நூலும் தூரிகையும்
துணைக்குவர வேண்டும் - பராசக்தி
தன்னையறிந்து பெரும் ஏகாந்த நிலைவேண்டும்

கர்மா

கர்மா
+++++
சக்கரை நோய்க்காக மருந்தில்லா மருத்துவ சிகிச்சைப்பெற
எனக்காக காத்திருந்த அந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்
அந்த அம்மாவிற்கு என் மீது மிக்க கரிசனம் உள்ளவர்
ஒரு மணி நேர தாமதத்திற்கு காரணம் கேட்டார்
மகளின் வகுப்பு மாணவனின் தந்தை பள்ளியில் பாதரியாரிடம் பேசிவிட்டு
சென்று பணம் கட்ட முடியாத நிலையில்
துயரத்தில் தூக்குமாட்டி இறந்துவிட்டதால்
அந்த பையன் படிக்க பணம்கட்டாததால்
தினமும் வகுப்புக்கு வெளியே நிற்கிறான்
புத்தகமில்லாத நிலையில் வீட்டுப்பாடங்கள் செய்யாததால்
தண்டனை பெறுகிறான் அவனுக்கு உதவுங்கள் என்றாள்
அந்த பிள்ளைக்கும் பணம் கட்டிவிட்டு
திரும்ப கொஞ்சம் நேரமாகிவிட்டது என்றேன்

நிறைய நல்லவைகளை சொல்லும் அந்த அம்மா சொன்னதில்
ஒன்றுமட்டும் எனக்கு பேரதிர்ச்சி அவரிடமிருந்து அதை
நான் எதிபார்க்கவில்லை ஒரு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்
ஆன்மீத்தில் அதீத ஈடுபாடுடையவர்
அவர் சொன்னார் அடுத்தவர் துன்பத்திற்கு உதவினால்
அவரின் துன்பம் நமக்கு வந்துவிடும் என்று
அவரவரின் கர்மாவை அவரவர்தான் அனுபவிக்கவேண்டும் என்றார்

மதம் அல்லது ஒரு நிறுவனம் அவருக்கு அப்படி கற்பிதம் செய்துள்ளது
நன்கு படித்த ஒரு ஆசிரியரே ஒருவருக்கு உதவுவது பாவம்
துன்பம் அவரவர் கர்மாவின் பலன் என்று எண்ணுமளவிற்கு மாற்றியுள்ளது
அடிபட்டு ரோட்டில் கிடப்போரை காப்பாற்றக்கூடாதா
சமகாலத்தில் பசியோடு பாலுக்கு இறப்பவர்களும்
பணத்தோடு கல்லுக்கும் நடிகனின் கட்டவுட்டுக்கும் பால் வார்ப்பவர்களையும்
ஏற்றத்தாழ்வுகளோடு படைத்தது யார்

கடவுள் நீதிமானாக இருந்திருந்தால்
எல்லோரையும் சமமாகத்தானே படைத்திருப்பான்
ஒருவன் ஒரு ரூபாய்க்கு தெருவில் ஒரு கோடி ரூபாய் காரில் செல்பவனிடம்
கையேந்தி நிற்கின்றான்
காரில் செல்பவனோ அல்லது அவனது முந்தைய தலைமுறையோ
அடுத்தவனின் பங்கை அபகரித்ததன் விளைவு
ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிட்டது
உழைத்து எப்படி ஓரு கோடிக்கு கார் வாங்கமுடியும்
தினமும் மூட்டை தூக்குபவன் உழைக்காமலா இருக்கிறான்

இதை சமன்படுத்த தவரிய சுய நல அரசன் அல்லது
அரசுகளின் கையாலாகாதத்தனம்
சுரண்டல் சுய நலமே ஏற்றத்தாழ்வுகளுக்கு
இடம்கொடுத்துவிட்டது
சேமிக்கசொல்லி திருடவைத்து விட்டது

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே "- பட்டினத்தார்

முப்பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்கிறது ‘மனு தர்மம்’
கர்மா ஒரு "நீண்ட கால வைப்பு" நிதியா ?

"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்
என்றால் விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் வேரோருவனும் எப்படி இருக்கமுடியும்
நியுட்டன் விதி சொல்வது ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. என்று

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.-சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு
எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
என்று வள்ளுவர் சொல்கிறார்

ஒளவையாரின் ஆத்திச்சூடியின் முதல் அடியே
அறம் செய விரும்பு
பின் ஈவது விலக்கேல்

கர்மாவின் படி தான் எல்லாமே நடக்கும் என்றால்,
திருவள்ளுவர், ஏன் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.

அணைக்கப்படவேண்டிய அநீதி


அணைக்கப்படவேண்டிய அநீதி
+++++++++++++++++++++++++++++
காதல் என்ற பிடிக்குள் வந்துவிட்ட பிறகு
ஆண் மீது பெண் அல்லது பெண் மீது ஆண் காட்டும்
அதீத ஈடுபாடு (possessiveness)
சங்கடமாக மாறி இன்பமாக இருந்தவைகள்
துன்பமாக மாறிவிடும்

காதல்வந்த ஒரு பெண் குரங்கு
பொது இடங்களில் அத்தனை கண்கள்
பார்ப்பது தெரிந்தும் அனாகரீகமாக தொடுவதும்
தீண்டுவதும் தடவுவதுமாக 
பித்துபிடித்து திரிகிறது
காதல்வந்த குரங்குக்கு பிறரைப்பற்றிய
அக்கரை இருக்காது சுய நலமே ஓங்கி இருக்கும்
தன்னின்ப தாவல்கள்
ஆண் குரங்குகளால் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டு
எச்சில் இலைகளாய் குப்பையில் எறிந்துவிடுவார்கள்

சிறுமை கண்டு பொங்குவாய் என்றான் பாரதி
ஓவியாவை கண்டு பொங்குகிறான் இளைஞன்
காசுக்காய் மாரப்படிப்பவர்களின் கண்ணீரில்
கரைக்கிறான் தன் இளமையை

தாய்மை காமத்தி;ல்
கழிவிடமாய்
மறுக்கப்பட்ட அன்புக்கு
மனப்பிறல்வு நோயாகி
சாதிக்கப்பிறந்தவர்கள்
ஜாதிக்காய் சாவுகிறார்கள்

கட்டுப்படுத்தாத உணர்வுகள்
காட்டாறு போன்றது
கரை மீறும் போது
சேதங்கள் அதிகம்
நதிக்கு மட்டுமல்ல நாட்டுக்கும்தான்
தனிமனித ஒழுக்கம் பேனாத தேசம்
தானாய் போகுமே நாசம்

இவளொரு கரை மீறிய நதி
கோடையில் பற்றிய காட்டுத்தீ\
அணைக்கப்படவேண்டிய அநீதி

முன் தீர்மானங்கள்

முன் தீர்மானங்கள்
++++++++++++++++++
பள்ளியில் பணம்செலுத்தும் வரிசையில்
நின்றிருந்தபோது தாயும் மகளும் கண்ணீரோடு
தலைமையாசிரியரிடம் பணம் கட்டமுடியாத நிலையை
சொல்லி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டுவேலைக்கு
அனுப்பப்போவதாக அழுதுகொண்டிருந்ததால்
தலைமையாசிரியரிடம் நான் பேசினேன்
எனக்கு பணம் கட்டவேண்டிய காலத்தை நீட்டிக்கத்தான்
அதிகாரமுண்டு நீங்கள் பாதரியாரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்றார்
பரிசுத்த ஆவியால் ஆசீர்வதிக்கப்பட்ட தந்தையோ
மனங்களை உடைத்துவிட்டு
மண்ணையும் செங்கல்லையும் சேகரித்துக்கட்டடங்களை
கட்டும் கணக்குப்பார்த்துக்கொண்டிருந்தார்
ஒருத்தருக்கு உதவினால் வரிசையாக வந்து நிற்பார்கள் என்றார்
வரிசையாக வந்தாலும் உதவுவதுதானே உங்களுக்கு கடமை
ஓராயிரம் உலக அமைப்புகள் உள்ளனவே ஒருங்கினைக்க முடியாதா
இவர்களை குறை சொல்வதைவிட தனியார்களை வளர்த்துவிட்டு
வேடிக்கைப்பார்க்கும் நல்ல தலைவனில்லாத
அரசியல்வாதிகளைத்தான் சொல்லவேண்டும்
முடிவில் ஏசு தோற்றுவிட்டார் அங்கிக்குள்ளிருந்த
கணக்கபிள்ளையிடம் அந்த மகளின் கண்ணீரை துடைக்க
நான் கரம்தருவதாக வாய்தாவாங்கிவந்தேன்
அட பாவிகளா நீங்க எதுக்கு சேவைசெய்ய வருகிறீர்கள்
அவரின் தலைக்கு மேலே ஏசு இன்னும் சிலுவையிலேதான்
தொங்கிக்கொண்டிருந்தார்
கண்டிப்பாக அவர் பூமிக்குவரமாட்டார்
ஏசுவை காட்டி காசு சம்பாதிக்கும் கயமைத்தனம்
தேவதூதர்களாய் ஆன்மீகம் பேசி
அன்பை விதைக்கவந்தவர்கள்
இதயங்களை இரும்பாக்கி
சேவைசெய்யவந்த வெள்ளை அங்கிகள்
வியாரிகள் தலைவர் வெள்ளையனை போல்
மாரிவிட்டார்கள்
நண்பர்களிடம் பகிர்ந்தேன்
எங்கள் வட்டத்தில் குமார ராஜாவை
கெஞ்சன் கெட்டி என்பதைபோல் குலம் சேர்த்து
பின்னால் பேசுவார்கள்
சில முன் தீர்மான முந்திரிக்கொட்டைகள்
ஆனால் முதல் ஆளாய்
உதவ முன்வந்தது குமார்தான்
கடவுள் இருக்கானா குமாரு...
நண்பர்கள் பாலாவும், நசீரும் கூட
அந்த பிள்ளையின் கண்ணீரைத்துடைக்க கரம் நீட்டினார்கள்
யாரையும் முன் தீர்மானம் செய்துவிடாதீர்கள்
ஜாதியும், மதமும், குலமும், கோத்திரமும்
குணங்களை தீர்மானிக்கும் என்பது பொய்
சூழ் நிலைகள்தான் மனிதனை தீர்மானம் செய்கிறது

ஜெ வின் டெட்பாடிக்குப்பிறகு

ஜெ வின் டெட்பாடிக்குப்பிறகு
தொடங்கிய அரசியல் சதுரங்கத்தில்
குதிரைகள், நாய்கள் நரிகள்
கடைசியில் குட்டிகளும்
பேரம் பேசப்படுகின்றன
பணம் எதுவரை பாயும் என்பதற்கு
தமிழக அரசியல்வாதிகள்
உலகிற்கே ஓர் எடுத்துக்காட்டு
திருந்தச்சென்ற சிறைச்சாலை
மான்புகளை சீர்கெட செய்துவிட்டனர்
நாற்காலி சண்டையில்
அரசியல் நாகமாய் நெளிகிறது
பரமபதங்களில்
ஊருக்கே உணவு தந்த விவசாயி
உயிரிழந்து பாடையில் போகின்றான்
அவனது நிலங்கள் அழித்தொழிக்கப்படுகிறது
விவசாயிகளின் மரணங்கள்
மூடி மறைக்கப்படுகிறது இது தேசிய அவமானம்
400 பேரின் மரணத்தை 82 ஆக குறைத்து
நீதிமன்றத்திலேயே நிவாரணம் தேடுகிறார்கள்
கடந்த 5 ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை
2011ம் ஆண்டில் 623 பேர், 2012ம் ஆண்டில் 499 பேர்,
2013ம் ஆண்டில் 105 பேர், 2014ம் ஆண்டில் 895 பேர்,
2015 ம் ஆண்டில் சுமார் 300 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற
ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலை போல வறட்சியான காலங்களில்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை காப்பாற்றத்தவரிய அரசால்
வேளாண் துறை வளர்ச்சி மைனஸ் 12.1 சதவீதமாக (-12.1) ஆக குறைந்துவிட்டது
தமிழகத்தில் 3.67 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உப்பு படிந்து விவசாயம் முற்றிலும்
அழிக்கப்பட்டுவிட்டது போதாதுயென மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என
எரிவாய்வை எடுப்பதென விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களை எரிக்கின்றனர்
பெருமளவு விளைநிலங்கள்
விலை நிலங்களாக வீட்டடி மனைகளாக மாறி விட்டன.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளில் 2 லட்சத்து 96,438 விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றான் வள்ளுவன்.
மக்களால் நான் மக்களுக்காக நான்
என வாய் ஜாலம் பேசி ஊழலில்
பணம் எண்ணி விவசாய பினம் திண்ணியாய்
தமிழக அரசியல்
மக்கள் வெறுப்பின் விளிம்பில்
இருக்கிறார்கள் சீக்கிரம் திருந்திவிடுங்கள் அரயல்வாதிகளே
இல்லை மக்கள் திருத்திவிடுவார்கள்
ஒரு நல்ல தலைவனுக்காய்
தமிழகம் தவம்கிடக்கிறது
மீண்டும் ஓர் சாபமாய் திரைத்துறையில்
தேடிக்கொண்டுள்ளார்கள்

கடவுளை காப்பாற்றுங்கள்

கடவுளை காப்பாற்றுங்கள்
++++++++++++++++++++++++
பள்ளி குழந்தைகளை பொதி சுமக்க வைத்துவிட்டு
படங்களில் மட்டுமே சுமை குறைத்து
அரசு ஏமாற்றுகிறது
பள்ளிகளுக்கு அருகாமையில்
வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில் நம் கல்வி
சுமையற்ற கல்வியென்று
சொல்வதுபோல் படம் வரைந்துள்ளார்கள்
பொதி சுமக்கும் பிள்ளைகளை இந்த கலைஞன் பார்த்ததில்லையா
இல்லை இவனுக்கு பிள்ளைகுட்டிகள்தான் கிடையாதா
நீட் National Eligibility Cum Entrance Test (NEET)
ஜெ இஇ Joint Entrance Examination (JEE)
பொதுத்தேர்வை மூன்று ஆண்டுகள்
அரசு தொடர்ந்து நடத்துகிறது
இது போதாதென்று கல்லூரிகளுக்கிடையே தனித்தேர்வுகள் இப்படி
படிப்பை வைத்து மாணவர்களை பரமபதம் விளையாடுகிறது அரசு
மதத்தையும் கலையும் வளர்த்தவர்கள்
கலைஞர்கள்தான்
அதை கெடுத்தவர்களும் அவர்களே
தன் சொந்த கற்பனையை இயலாமையை
கலைப்படைப்புகளில் ஏற்றி
அங்கிகாரம் பெறத்துடிக்கும் ஆசை, வக்கிரம்
முற்றும் துறந்தவனுக்கு
முக்காடிட்டு பார்க்கும் முயற்சி
அகிலத்தை படைத்தவனுக்கு
அணிகலன் போட்டுப்பார்க்கும் வறுமை
நம் கடவுளின் சிலைகள்
அன்பை மையப்படுத்தி படைக்கப்படாதது ஏன்?
எல்லாமே பேராசையின் வெளிப்பாடாகவே
படைக்கப்பட்டுள்ளது
அன்பை விதைப்பதற்கு பதிலாக
கடவுளை பயத்தின் குறியீடாகவே படைக்கப்பட்டதன் தவறு
ஆன்மீக அடியார்கள் அன்பை வளர்ப்பதற்கு
நேரமின்றி பயத்தின் குறியீடுகளுக்கும்
பழைய தவறுகளுக்கும்
விளக்கம் கொடுத்தே பாதை விளகிவிட்டனர்
தவரை தவராக பார்க்காது அதை
சரி படுத்தும் அல்லது சரியென நியாயப்படுத்தும் முயற்சி
அதனால்தான் ஆன்மீகத்தில் நாம்
தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்
உருவத்திலிருந்து அரூபத்தை நோக்கிய பயணத்தில்
தொடக்கபுள்ளிகளிகளே உருவத்தின் தேடலில் நம்மையே தொலைத்துவிடுகிறோம்
பயமே பக்தி என்ற கற்பிதம்
பயம்தெளிந்த நிலையில்
சமூக ஒழுக்கங்கள் சரிந்துவிடுகிறது
தன் எல்லாதவறுகளுக்கும்
பெருமாள் கோயில் உண்டியலில்
தானே தீர்ப்பு எழுதி தண்டத்தை (காணிக்கை) தந்துவிட்டு
திருந்தாது திரும்பி வந்து
தவறு செய்துகொண்டுள்ளது மானிடம்
பல திருடர்கள் பெருமாளை பங்குதாரராக்கிவைத்துள்ளார்கள்
ஒவ்வொரு திருட்டு முடிவிலும்
நேர்மையாக பங்கிட்டு திருப்பதி உண்டியலை
நிரப்பிக்கொண்டுள்ளார்கள்
திருப்பம் வருமென்று அப்பாவி பக்தர்கள்
ஊழலில் செய்த லட்டுக்காய் வரிசையில் நிற்கிறார்கள்
தவறுகளுக்கு பரிகாரங்களே தீர்வு
எனும் சுய நலம்
பக்தி பரிகாரங்களை நோக்கிய பயணமாகிவிட்டன
பூஜை புனஸ்கார புகையில் கடவுள்
மூச்சித்தினரிக்கொண்டுள்ளார்
மனிதா முடிந்தால் கலைஞர்களிடமிருந்தும்
சுய நல போலி ஆன்மீகவாதிகளிடமிருந்தும்
கடவுளை காப்பாற்றுங்கள்

இயேசுவின் வருகைக்காக

இயேசுவின் வருகைக்காக
+++++++++++++++++++++++++
வடபழனி வழித்தடத்தில்
இயேசு சீக்கிரம் வருகிறார்
எனும் அறிவிப்பு விளம்பரத்தை
பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
டிசம்பர் 21, 2012ல் இயேசு பூமிக்கு வருகிறார் என்றும்
உலகம் முடிவுக்கு வரும் என்று ‘மேயன்களின்’ காலண்டரை
பார்த்து ஏமார்ந்ததால்
வந்த சிரிப்பு
சீக்கிரம் எதுக்கு வருகிறார்
இந்த அறிவிப்பு விளம்பரத்தை வைத்தவனின்
நோக்கம்தான் என்ன
அவ்வளவு அவசரம் எதற்கு
பக்கத்திலிருந்தவர் எதற்கு சிரிக்கிறீர்கள் என்றார்
அவருக்கு இயேசு சீக்கிரம் வருவதில்
ஆர்வமிருக்கும் போலிருக்கு பாவம்
அவ்வளவு பிரச்சனைகள் மக்களுக்கு
அறிவும் ஆயுதமும் வளராத
காலத்திலேயே இயேசுவை சிலுவையிலேற்றியவர்கள்
வன்முறையே வாழ்க்கையாகி
போன உலகில் எந்த துணிவில்
இயேசு பூமிக்கு வருவார்
கண்டதையெல்லாம் கடவுலெனும்
நம்மிடையே ஓரிறைக் கொள்கையைப்
போதித்தவரையே கல்லாலடித்து
சிலுவையிலேற்றி கடவுளாக்கிய உலகில்
எந்த துணிவில் இயேசு பூமிக்கு வருவார்
பெண் பிறப்பே இழிபிறவிகளாக
எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்து
கன்னிப்பெண் மரியாளை கற்பமாக்கி
நீ புனிதாகும்வரை கல்லடியும் சொல்லடியும்
பெற்றாளே இப்போது எந்த வழியில் இயேசு பூமிக்கு வருவார்
ஒருவேலை வந்துவிட்டால்
இயேசுவுக்கு என்ன தண்டனையோ
நீரில் நடந்தால் வானில் பறந்தால்
கார்பரேட் கம்பெனிகள்
இயேசுவை வைத்து மேஜிக் நிகழ்ச்சி நடத்துவார்கள்
வி்ண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குத் வரும்
இரகசிய வருகையில்
எம் விஞ்ஞானிகள் உன்னை
இஷ்ரோவில் விஞ்ஞானியாக பணியமர்த்திவிடுவார்கள்
நடக்க முடியாதவனை நடக்கவைத்தால்
பேச முடியாதவனை பேசவைத்தால்
தீர்க்க முடியாத வியாதிகளை தீர்த்து வைத்தால்
அரசியல்வாதிகளின் அடிமையாய்
மருத்துவமனைகளில் மாத சம்பளத்திற்கு
இயேசு வைத்தியராயிருப்பார்
நீரை மதுவாக்கினால்
மது ஆலை முதலாளிகளின் முயற்சியால்
இந்திய நதிகளெல்லாம்
ஒரே நாளில் இணைக்கப்பட்டிருக்கும்
நானும் ஆவலாயிருக்கிறேன்
இயேசுவின் வருகைக்காக

ஒரு தூக்கப்பார்வை



ஒரு தூக்கப்பார்வை
++++++++++++++++++++++
மனமும் உடலும் ஆழ்கடலென
அமைதிகாணும்போது இமைகளின் கறைகளில்
உறக்க அலை ஓடி வருகிறது
கவலைகள் ஓய்வெடுக்கிறது
நெருங்கிய உறவுகளின் பிரிவினில்
தொலைந்திடும் உறக்கம்
உறக்கம் புதைத்தவனின் 
வாழ்க்கையே நரகம்
தலையணை சொல்லிடும்
தவரிடும் தூக்கம்
நாளையை நினைத்தால்
தூக்கம் தூரமாகும்
நிமிடத்தில் வாழ்ந்தால்
வாழ்க்கை வரமாகும்
படைப்புள்ளம் உள்ளவர்களே தூங்குகிறார்கள்
தூங்குகிறவர்களே கனவு காண்கிறார்கள்
மூளையின் சுதந்திரம் கனவு காண்பது
கனவு நம் கட்டுப்பாட்டை கடந்து சென்றதால்தான்
பல கண்டுபிடிப்புகளும் கலைப்படைப்புகளும்
கனவு தந்த காலப்பரிசுகள்
கனவுகளில்மட்டும்
தன் நிலை மறக்கிறோம்
சிறகின்றி பறக்கிறோம்
நீரின்றி நனைகிறோம் 
நதியினில் நடக்கிறோம்
லட்சியம் என்பது ஆசை
பேராசை உள்ளவனே தூக்கத்தை தொலைக்கிறான்
தூங்கவேண்டுமா தோழர்களே
படுக்கைக்கு போகும்முன் போதைகளை தவிர்க்கவும் 
சூடாக ஒரு கப் பால் குடிப்பது நல்லது 
திராட்சை அன்னாசி ஆப்பிள் மாதுளை சிறு துண்டுகளாக 
தேனில் ஊற வைத்து எடுத்துக்கொண்டால்
உடலுக்கு தேவையான இரும்பு விட்டமின் சி சத்துக்கள் கிடைக்கின்றன.
இது உறக்கத்திற்கு நல்லது
வேப்பிலையை வறுத்து தலைக்குவைத்து தூங்கினாலும்
மருதாணிபூக்களை தலைக்குவைத்து தூங்கினாலும் உறக்கம்வரும் 
அதிகாலையில் கொஞ்சம் வல்லாரைக்கீரையை மென்று தின்று அரை மணி
நேரத்திற்குபின் உணவு எடுத்துக்கொள்ளலாம்.
மனம் சார்ந்த நோய்களும் உறக்கப்பிரச்சனையும் சரியாகும் 
மாம்பழச்சாறுடன் பால்கலந்து சக்கரையிடாமல் எடுத்துக்கொண்டால் உறக்கம்வரும்
தூக்கம் வராமைக்கு (Insomnia) மருந்து மது போதை எடுப்பவர்கள்
போதை இருக்கும்வரைதான், இது ஓர் நிரந்தர நிவாரணம் அல்ல
தக்காளி. காரமான உணவு செரிப்பதற்கு நேரமாவதால்
(Acid reflux) வாந்தி நெஞ்செரிச்சல் வரும்,
துரித உணவுகளில் (Monosodium glutamate) உள்ளதால்
மூளையை தூண்டிவிட்டு தூக்கத்தை கெடுக்கும் தொடர்ந்து 
எடுத்துக்கொண்டால் தலைவலி ஒற்றைத்தலைவலி, வயிறுவலி ஏற்படும்
சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொண்டால் மூளையை தூண்டிவிட்டு 
அதிகமாக வேலை செய்யும் (Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி 
தூக்கத்தை கெடுக்கும் அதிக ஹார்போஹைட்ரேட் உணவுகளும்
எளிதில் சக்கரையாக மாறிவிடுவதால் சர்க்கரைக்கு ஏற்படும் பாதிப்பே இதற்கும்.
காபி, சாக்கலேட்டில் உள்ள (Caffeine) தூக்கத்தை கெடுக்கும் 
காய்கறி பழங்கள் புரத உணவுகள் முழுதானியங்கள் ஆவியில் 
வேகவைத்த உணவுகள் பால் மற்றும் வாழைப்பழம் தூக்கத்தை கொடுக்கும்
மெல்லிய ஓடையின் ஓசை
இதமான இசை 
புத்தக வாசிப்பு 
சிலருக்கு மாத்திரை மதுவின் துணை
இவர்கள் இயல்பாய் உறங்க உடல் பயிற்சியும்,
நடைபயிற்சியும் உதவும்.
தியானம் உறக்கத்தின் திறவுகோள்
முடிந்தவரை உதவுங்கள் உழைத்து வாழுங்கள்
கால்சியம், மக்னீசியமும் தான் தூக்கத்திற்கு பெரிதும் உதவும்
கால்சியம்:- நரம்பு, எலும்பு மண்டலங்களை பலப்படுத்துகிறது
அது பால், சோயா, வெங்காயம், பாதாம்பருப்பு, ஆரஞ்சு, எழும்பிச்சையில் கிடைக்கிறது
மக்னீசியம்:- மூளையை சாந்தப்படுத்துகிறது - கரும்பச்சை நிற கீரவகைகள், மீன், முட்டை,
கொட்டைவகைகள், இரும்பு, விட்டமின் ஏ, பி, டி தூக்கத்திற்கு பெரிதும் உதவும்
தூக்கம் வரக் காரணம் மெலடோனின் என்கின்ற ஹார்மோன்தான். 
செர்ரிப் பழங்களிள் இது நிறைந்து கிடக்கிறது.
லாவெண்டர் மலர்களை நுகர்ந்தால் கண்கள் சொருகித்
தூக்கம் தானே வரும்.
யாருக்குத் தூக்கம் வராது என கருட புராணம் சொல்லுகிறது
வறுமையில் உழல்வோன்
உளவு வேலை செய்பவன்
மாற்றான் மனைவிக்கு ஏங்குவோர்
திருடன் (ஊழல் வாதிகள், திருட்டுத் தனமாக பணம், பொருள் வைத்திருப்போர்)
இதோ ஓர் தூக்கப்பார்வை
கும்பகர்ணனுக்கு 6 மாத தூக்கம்
அலெக்சாண்டருக்கு போருக்கிடையே குதிரையே தூங்குமிடம்
கண்டுபிடிப்பின் கடவுள் எடிசனுக்கு இரு கண்டுபிடுப்பிற்கு இடைப்பட்ட நேரமே தூக்கம்
காந்திக்கு இந்திய விடுதலைக்கு பின்தான் தூக்கம்
விடுதலைக்கு பின்னும் அம்பேத்கார் இனவிடுதலைக்காய் தூக்கத்தை தொலைத்தார்
பெரியார் இரு கூட்டங்களுக்கிடையே பயணங்களில் உறங்கினார்
நெருப்பாய் எரிந்த பாரதிக்கு தூக்கமே இல்லை குட்டி குட்டியாய் தூங்கியிருக்கிறான்
கர்மவீரர் காமராஜுக்கோ பள்ளிகள் இல்லாத தமிழ் நாட்டை காணும்வரை உறக்கமில்லை
அண்ணாவுக்கு இனமொழிக்கு உழைத்து படிக்கும் இரு புத்தக இடைவெளியில் உறங்கினார்
பெரியாரின் கனவுகளை நினைவாக்க கலைஞர் கருணாநீதியோ பகலில் ஒரு மணி நேரமும் இரவில் 2 மணி நேரமே தூங்கினார்
எம் ஜி ஆர் ஏழைகளின் இரைப்பை நிரம்புகையில் உறக்கத்தில் வென்றார்
செர்ஜியோ மர்ச்சியோனி-பியட்டின் முதன்மை செயல் அதிகாரி 4 மணி நேரமே தூக்கம்
மார்சா மேயர்-யாஹூவின் முதன்மை செயல் அதிகாரி 4-6 மணி நேரமே தூக்கம்
இந்திரா நோயல் - பெப்சியின் முதன்மை செயல் அதிகாரி 4 மணி நேரமே தூக்கம்
பராக் ஓபாமா - அமெரிக்கவின் முன்னால் அதிபர் 6 மணி நேரமே தூக்கம்
பில் கிலிண்டன் - அமெரிக்கவின் முன்னால் அதிபர் 6 மணி நேரமே தூக்கம்
டொனால்ட் ட்ரம்ப்-அமெரிக்கவின் இன்னால் அதிபர் 3-4 மணி நேரமே தூக்கம்
பில் கேட்ஸ் - மைக்ரோ சாஃப்ட் அதிபர் - 7 மணி நேரமே தூக்கம்
நரேந்திர மோடி - 4-5 மணி நேரமே தூக்கம்
கோலா கரடி 22 மணி நேரம் தூக்கம்
பழுப்பு நிற வவ்வால் 19 மணி நேரம் தூக்கம்.
புலி 16 மணி நேரம் தூக்கம்.
பசுக்களின் உறக்கம் 4 மணி நேரம் தூக்கம்.
ஒட்டக சிவிங்கி 2 மணி நேரம் தூக்கம்.
தேசிய தூக்க ஆணையம் 0-3 மாதம் வரை 14-17 மணி நேரம் உறங்க வேண்டும். 1-2 வயதுடையோர் 11-14 மணி நேரமும், 5 வயதுவரை 13 மணி நேரமும், 6-13 வயதுவரை 9-11 மணி நேரமும், 14-17 வயதுவரை 8-10 மணி நேரமும், 18-64 வயதுடையோர் 7-9 மணி நேரம் உறங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

கோபுரத்தை மட்டும் கல்லால் கட்டவில்லை

கோபுரத்தை மட்டும் கல்லால் கட்டவில்லை
+++++++++++
தஞ்சையில் பிறந்த நான்
பள்ளி நாட்களில் வரிசையில் நடந்து
வாய்பிளந்து பார்த்ததோடு சரி
வளர்ந்த பிறகு அந்த வழியாக பல முறை சென்றாலும்
உள்ளே சென்று பார்த்ததே இல்லை
நண்பர் குமார் என்னை தஞ்சையில்
காத்திருக்க வைத்த 3 மணி நேரத்தில்
எங்கு போவதென்று தெரியாது நின்றபோது
பழைய பேரூந்து நிலையத்தில் அன்பு பால்கடையில்
ஒரு லஸ்சி வாங்கி குடித்த பின்பு
அருள்மொழி வர்மன் என்னை அழைத்தார்
கோயிலை பார்க்கச்சென்றேன்
பல விழிகள் பார்த்து வியந்த அதியம்
என் பார்வையில் விரிந்தது
கோயிலா அது கலைக்குவியல்
கட்டடக்கலையின் காவியம்
நிர்வாகத்தின் நேர்த்தி
அரசனின் ஆளுமையை அகிலமே பயிலவேண்டும்
மொத்த கோயிலையும் கிரானைட் கொண்டே
கட்டிமுடித்துள்ளார்கள்
எங்கேயும் மரத்தையோ சுடு கற்களையோ
பயன்படுத்தவில்லை
1000 வரைபடங்களை தயாரித்துள்ளனர்
ஒரு இலட்சம் கைதிகளை வைத்து
7 ஆண்டுகள் இதை கட்டி முடித்துள்ளார்கள்
எனது ஆச்சரியமே அரசின் நிர்வாக நேர்த்திதான்
உயரமோ கலையோ அதற்கு பின்தான் நிற்கிறது
கோயிலை கட்டத் தொடங்குவதற்குமுன் போரையும் முடித்து
செல்வத்தையும் சேர்த்து வேலை செய்வதற்கு ஒரு இலட்சம் கைதிகளையும் தயார் செய்துள்ளார்கள்
அண்ணன் தம்பிகளே ஐந்து நாட்கள்
கூடியிருக்க முடியாத நிலையில்
எதிரிகளை 7 வருடம் ஒன்று கூட்டி எழுப்பிய கோயில்
பணி நடந்த 7 ஆண்டுகளில் அன்னிய தேசத்து
ஆபத்தில்லாமல் இருந்த ஆளுமை
அமைதி இல்லாத தனி மனிதனிலும்
தேசத்திலும் கலைவளராது
அந்த அற்புதமான ஆட்சிமுறை
சுற்றி சுற்றி வந்ததில் என் மனதில்
அரசனின் ஆளுமையே
கோபுரத்தைவிட உயர்ந்து நின்றது
கலையை ரசித்ததில் கடவுலை காணமறந்து
வெளியே வந்துவிட்டேன்
அகலியில் நீரில்லை
அகலியில் மட்டுமா
தஞ்சையே நீரின்றி காய்ந்து கிடக்கிறது
கதிராமங்கலம் கதரி அழுகிறது
சென்ற ஆண்டுமட்டும் 300
விவசாயிகளின் தற்கொலைகள்
காவிரிப்படுகையில் மீத்தேன் திட்டத்தால்
விவசாய நிலங்கள் பாழாகி போய்விட்டது
விவசாயிகளின் இறப்பு
பஞ்சம் பசியென தஞ்சை மக்கள்
தவித்துக்கிடக்கிறார்கள்
ஏ செயல்படாத அரசே
இவ்வளவு பெரிய கோயிலை
வேடிக்கை பார்க்கக்கட்டவில்லை
ஆள்பவர்களுக்கு ஆளுமையை
அழகியலில் சொல்லிவைத்துள்ளான்
ராஜ ராஜ சோழன் அருள்மொழி வர்மன்
கோபுரத்தை மட்டும் கல்லால் கட்டவில்லை
உள்ளே கடவுளும்
கல்லாய் செயல்படாத அரசுபோல்

நான் உறங்கிக்கிடந்த போது

நான் உறங்கிக்கிடந்த போது
++++++++++++++++++++++++++
தூக்கமிழந்தவர்களின் சோகத்தை விழிகளே சொல்லிவிடும்
நமது கட்டுப்பாட்டில் உள்ள கை, கால், தொடை, தோள்பட்டை, மார்பு போன்ற
கடினமான தசைகள் தூக்கத்தின்போது தற்காலிகமாக செயலிழந்துவிடுகிறது
தூக்கத்தின்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத இதயம்,
உணவுமண்டலம், காற்றுமண்டலம், இரைப்பை, செயல் உறுப்புகள் மற்றும்
மெல்லிய தசைகள் தூக்கத்தின்போதும் இயங்கிக்கொண்டுள்ளது
கட்டுப்பாட்டுத்தசைகளும் கட்டுப்பாட்டை இழக்கும் போதுதான் உறக்கம் தொலைகிறது
உடலின் இயக்கத்திற்கு உணவு தேவை,
ஓய்வுக்கு உறக்கம் தேவை
உழைப்பு உறக்கம்தரும் உறக்கம் உயர்வு தரும்
சூரியன் தூக்கத்தின் துரோகி
பகல் தூக்கம் உடலுக்கு பகையாகும்
இருளே இதமானது
நான் உறங்கிக்கிடந்த போது
சோம்பேறி என உறக்கம் கலைத்தவர்களே
என் உறக்கம் வாங்கித்தாருங்கள்
என் கால்சட்டையின் ஓட்டையில் தபாலிட்டவர்களே
பணத்தின் தேவைகளை சொல்லித்தந்தீர்களே தவிர
ஒழுக்கத்தை சொல்லித்தந்தீர்களா?
பணமும் பதவியும் என்
தேவைகளை மிஞ்சிவிட
தூக்கத்தை தொலைத்துவிட்டேன்
கேட்கும் தொகைதருவேன்
கேட்காமல் பொருள்தருவேன்
மூடாத என் விழிகளுக்கு மூடி தருவீரோ
இரவை பகலாக்கி உறவை பகையாக்கி
பணம்சேர்த்து கணக்கிலிட்டேன் இப்போது
உறவுமின்றி உறக்கமுமின்றி தனிமையில் தவிக்கின்றேன்
என் வெற்றிகளெல்லாம் தோற்றுச்சிரிக்கிறது
நாயாய் நின்றவர்கள் பேயாய் தெரிகின்றனர்
மரண ஒத்திகையில் மனமோ அழுகிறது
ஏளனமாய் எண்ணியவன்
வெறும்தரையில் உறங்குகின்றான்
ஏசியிலும் என்னறையில் எமன்வந்து சிரிக்கின்றான்
இடைத்தரகில் சேர்த்த சொத்தை
மொத்தமாக தருகின்றேன்
என் தூக்கத்தை வாங்கித்தரும் தரகனை அனுப்புங்கள்
என் இமைகளில் ஆணி அறைந்து
பணச்சிலுவையில் மாட்டிவைத்து உறக்கம் கலைத்தவர்களே
தூக்கம்தரும் இறை தூதரை அனுப்பிவையுங்கள்
உடல் புத்தனை போல் புரண்டு படுத்தது
மனம் மட்டும் கட்டுக்கடாங்காமல்
யானை போல் மதம் பிடித்து திரிகிறது
முதலாளிகள் எம் தூக்கத்தை விலை பேசிவிட்டார்கள்
விற்பனைக்கு தயாராய் எம் வறுமைகள்
பன்னாட்டு நிறுவனங்களின் இரவு கூர்க்காக்களாகிவிட்டன
மரணத்தின் ஒத்திகையே உறக்கம்
ஞாபகம் மறந்தால் மரணம்
கனவுகள் தீட்டும் காலப்புத்தகம்
சுவாச பைகளின் சுருக்கு விளையாட்டில்
காற்று மட்டுமே காலனை விரட்டும்
கண்கள் தூக்கத்தில் மரணித்துக்கிடக்கும்
இருதயக் கடிகாரம் இருமத்தொடங்கும்
தலையணை தலைக்கு பாரமாகும்
கதிரவன் வந்து கண்ணைக்கசக்கும்
தூக்க சுவரொட்டிகளை
துக்கம் மேய்ந்து கொண்டிருக்க்கும்போதே
வெற்றிடங்களை வெறித்தப்படி வானம் விடிந்துவிடுகிறது
நான் உறங்கிக்கிடந்த போது
சோம்பேறி என உறக்கம் கலைத்தவர்களே
என் உறக்கம் வாங்கித்தாருங்கள்

பயமே ஜெயம்

பயமே ஜெயம்
+++++++++++++
நம்பிக்கை, அன்பு, நன்மை, தீமை
இவை முழுமை பெறாதவைகள்
ஒப்பீடுகளே நிர்ணயம் செய்கின்றது
மனிதன் சார்ந்திருக்கும்போது
அச்சத்திலிருக்கிறான்
அச்சமே அவனை குடும்பமாகவும்,
கூட்டமாகவும், இனமாகவும், மதமாகவும் வாழப்பழக்குகிறது
அச்சமே நம்பிக்கை, அன்பு, நன்மை, தீமைகளை
வளர்த்தெடுக்கிறது
இவைகள் கூடுவது குறைவதையும் வைத்தே
உறவுகளை நிர்ணயிக்கின்றது
அச்சமற்ற நிலையில்
மேற்கண்ட அத்தனையும்
அர்த்தமில்லாமல் போய்விடுகிறது
அதனால்தான் மதவாதிகள் அச்சத்தைக்காட்டியே
மதங்களை வளர்த்தார்கள்
பயமே பலம் என நம்பினார்கள்
கடவுளின் கைகளில் பொருள்களை ஆயுதங்களாய் வைத்தார்கள்
பொருள்களின் அச்சம் நீங்கியபோது
அன்பை, நம்பிக்கையை, நன்மை, தீமையை ஆயுதங்களாய் வைத்தார்கள்
பயம் அற்ற நிலையில் மதங்கள்
மறைந்து போய்விடும்
மக்களும் ஒரு கடவுள் மீது நம்மிக்கையற்ற போது
புது புது கடவுளை தேடுகிறார்கள்
அதனால்தான் மதவாதிகள்
தொடர்ந்து அச்சத்தை விதைத்து
கடவுளை அறுவடை செய்கிறார்கள்
அதீத தன்னம்பிகையும் சுய நலமும்கூட
நம்பிக்கையை நாசப்படுத்திவிடும்
உறவுகளை ஒதிக்கிவிடும் (உலகின் சர்வாதிகாரர்களின் சரித்திரம் சொல்லும்)
நிதானமான தன்னம்பிகையும் நியாயமான சுய நலமும்
உலத்திற்கு வழிகாட்டும்
புத்தன்,இயேசு, நபிகள் எல்லாம் இந்தவகையைச்சேர்ந்தவர்கள்

நிறைகளை நாடி நிம்மதி நாடு

யாரோ சொன்னதை நம்பி
குப்பைகளை சேகரித்துக்கொண்டுள்ளாய்
மின்சாரம் தயாரிக்கலாம் என்று
அடுத்த வீட்டு ஜன்னல்களையே
பார்த்துக்கொண்டுள்ளாய்
உன் வீட்டிலும் ஜன்னல் இருப்பைதை மறந்துவிட்டு
அடுத்தவன் முதுகின்
அழுக்கை சேமிப்பதில்
உன் முதுகை மறந்துவிட்டாய்
உன் வானம் திறந்திருக்கும்போது
நீ ஏன் அடுத்தவன் குடையின்
ஒழுகளை நகைக்கின்றாய்
உன் பஞ்சு மரங்கள்
பூத்துச்சிரிக்கையில் நீ ஏன்
கழுதையாய் பொதி சுமக்கிறாய்
கரை நிறைத்து
நதி நடக்கையில் நீ ஏன்
நுரையை மட்டும் நக்கி சுவைக்கிறாய்
பிறை வளர்ந்து நிலவு வருவதற்குள்
குறையளந்து நீ ஏன்
குறிப்பெடுக்கிறாய்
குறை காணத்துடிக்க நீ என்ன
உளவுத்துறையா இல்லை
சூரியத்துளியா
நீ நம்பும் கடவுளே குறைகள்
நிறைந்தவன் குறைகளை படைப்பவன்
நிறைகளை நாடி நிம்மதி நாடு

சீஸரின் மனைவிமட்டுமல்ல

சீஸரின் மனைவிமட்டுமல்ல
இராமனின் சீதையும் சந்தேக நதிகளில்
நனைந்துவந்தவர்கள் தான்
மர்மமே உன் மறுபெயர் ஜெயலலிதாவா ?
தந்தை ஒப்பார் மக்கள் என தொல்காப்பியமும்
தாயைபோல் பிள்ளை என் முதுமொழியும் கூறுகிறதே
அம்மா என்றழைத்தவர்க்கு நீ
எதை விட்டுச்சென்றாய் சந்தேக தீயையா?
அவர்கள் திசைகள் தெரியாது தெருவில் நிற்கிறார்கள்
தண்டிக்கப்பட்ட தலைவர்க்கு
செத்தபின்னே சிலை எதற்கு
ஊழலின் உச்சமென கைகாட்டவா ?
பட்டிமன்றம் நடந்து கொண்டுள்ளது
பொதுவாழ்வில் தூய்மை இல்லை என்றால்
இறப்பிற்கு பின்னும் ஏளனம்தான்
பாவத்திற்கு பல்லக்கு அலங்காரம்
பதறுக்கு பருவத்தில் அறுவடை
வாடிய மாலைகளிலெல்லாம் வண்டுகள்
ஊற்றுக்கே ஊழல் தாகம்
கங்கை தன் கறை கழுவ
கடலைத்தேடுகிறது
எதிர் நீச்சல் தெரியாத இளையசமூகம்
குழாய் நீரில் மிதக்கக்கற்றுக்கொண்ட
நவீன பாரதம்
நாணலாய் வளைந்து
நக்கிப்பிழைக்கும் அரசியல் வியாதிகள்
துதிபாடும் தூதுவர்கள்
சிலுவைகளோடு அனுப்பிவைக்கும் பரம பிதாக்கள்
படைக்கவேண்டிய உலகை
உடைத்துக்கொண்டுள்ளனர்
பூக்கவேண்டிய செடிகளை
புதைத்துக்கொண்டுள்ளனர்
எழவேண்டிய இமயங்கள்
அழுதுகொண்டுள்ளன
பெரியாரின் பேரன்கள் பெருமாள் கோயிலில்
வரிசையில் நிற்கிறார்கள் லட்டுக்காக
பெரியாழ்வார் பிள்ளைகள் கோழிவறுவலுக்காய்
குடுமியை அவிழ்த்துவிட்டார்கள்
நாற்காலி சண்டையில் அரசியல்வாதிகள்
கடத்தல்காரனாகிவிட்டார்கள்
தமிழ் நாட்டு அரசியலிலும் திரைத்துரையிலும்
ஆவிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டன
நேற்றுவரை ஒன்றாய் இருந்த ஓபிஎஸ்
அம்மாவின் ஆவிபுகுந்து ஆவேசமாகிவிட்டார்
சேர்ந்து செய்த ஊழழைமட்டும் பேச மறந்துவிட்டார்
கலைஞானி கமல் அவரை ஆதரிப்பதன் அவசியம்
சக நடினாய் அவரின் திறனை கண்டதனால் இருக்கலாம்
அரசியல் வாதிகள் மேல் கொண்ட அவ நம்பிக்கையால்
மக்களின் சந்தேக தீ நெடுவாசல்வரை நீண்டுவிட்டது
தேர்தல் மழை வரும்வரை எரிந்துகொண்டே இருக்கும்.
கட்டுப்பாடு
--------------------
உடல் மற்றும் மனம் சார்ந்தே
செயல்கள் நிர்னயிக்கப்படுகிறது
மௌனம் மனதை நெறிபடுத்தும்
எல்லாமே ஒர் எல்லைக்குள் கட்டுப்பட்டால்தான் நிம்மதிகிட்டும்
எல்லைகடந்தால் தொல்லைதான் எட்டும்
கட்டுப்பாடு என்பது
ஓர் கண்கட்டுவித்தை
மனிதர்கள் சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறார்கள்
சந்தர்ப்பம்
கிடைக்கும்போடது தவறிவிடுவார்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்
பிரிவினையின் போது
முதல் நாள்வரை மசூதிகளிலும்
கோயில்களிலும் பிரார்த்தனை
செய்துகொண்டிருந்தார்கள்
பிரிவினை என்றதும்
அகப்பட்டதையெல்லாம் அபகரித்த கள்வர்கள்
கண்ணில் கண்ட பெண்களையெல்லாம் கற்பழித்தனர்
தேசத்தின் தெருக்களில்
கீதையும் குரானும்
காமம் செய்துகொண்டிருந்தது
சந்தர்ப்பம் கிடைத்தவுடன்
மனிதன் மிருகமாகிவிடுகிறான்
மதம் காவலாகிவிடுகிறது
படித்தவனே தனிமையில்
அதிகம் தவறுகிறான்
படிக்காதவன் கூட்டத்தில் நிறைய
தவறு செய்கிறான்
கூட்டம் தன்னை அடையாளம் காணாது
என்ற தைரியம்
தனக்குள் இருக்கும் மிருகத்தை
கட்டவிழ்த்துவிடுகிறான்
வன்முறை வளர்கிறது
காட்டாறுகளால் பயிர்களுக்கு என்றும் பயனில்லை
கடலை அடைந்துவிடும்
அடைக்கிவைக்கப்பட்ட அணை நீரே
பசி தீர்க்கும்

ஜல்லிக்கட்டோடு நின்றுவிடாதே

பொரிக்கி பொரம்போக்கு
தண்டச்சோறு தடிமாடு
ஊர் சுற்றி உருப்பிடாதவன்
என மாமிகளும் சாமிகளாலும்
சபிக்கப்பட்ட இளைஞர்களே
ஜல்லிக்கட்டு உங்களுக்கு
சாப விமோட்சனம் தந்துவிட்டது
போராட்டத்தின் புதிய
போதிமரம் மெரினா
அரசியல்வாதிகளின் அடிப்படையை
ஆட்டிவைத்த பொக்ரான்
கரையில் நின்று கரவொளி எழுப்பும்
இணமான சுனாமி
எல்லைதாண்டா
இளைய பாரதம்
கட்டுப்பாடு மீறி
கடலை தீண்டா கண்ணிய நதி
சிலையாய் நிற்கும் தலைவர்களெல்லாம்
தலையை உயர்த்தும் தருனமிது
சுனாமியையும் சூராவளியையும் பார்த்த மெரினா
முதல்முதலாக புரட்சியை பார்க்கிறது
1000 பேர் வந்தும் 1000 பேர் சென்றும்
கூட்டம் குறையாத உள்ளே வெளியே உயிர் போராட்டம்
ஜல்லிக்கட்டோடு நின்றுவிடாதே
தாய் மொழி போற்று
தரமான கல்வி கொடு
காவிரியை வரச்சொல்
கனிம வளம் காவல் செய்
விவசாயி தற்கொலை தடு
ஜாதி மதத்தை தள்ளிவிடு
அரசியலை மாற்றியமை
மனிதம் மரம் வளரச்செய்
வாடிவாசல் திறப்பது உறுதி
வாடிய உன்முகம் சிரிப்பதும் உறுதி
வரும் காலம் சிறப்பதும் உறுதி

கரும்பு கசந்திருக்கும்

உலகிலேயே தனக்கு உதவியவர்களுக்கு
நன்றி சொல்ல விழா எடுத்தவன் தமிழன்
உழவுக்கு உதவிய சூரியனுக்கும்
கால் நடைகளுக்கும் வீட்டின் துணையான
பெண்களுக்கும் விழா எடுத்து மகிழ்ந்தவன்
இன்று தூக்கு கயிற்றையும் விஷத்தையும் கையில் எடுத்துவிட்டான்
காளைகளை பிடிப்பதில்தான் தவரிவிட்டோம்
ஏ அரசியல்வாதிகளே உங்கள் பதவி சண்டையை நிறுத்திவிட்டு
உழவர்களின் உயிர்களையாவது
பிடித்து நிறுத்துங்கள்
நம் வயறு நிறைய வியர்வை சிந்தியவன்
தம் பயறு வாட உயிர் துறக்கின்றான்
காவிரி வரவில்லை
வான் மழை தரவில்லை
நிலத்தடி நீரில்லை
விதை நெல்லில் மரபில்லை
ஆள்பவர்களுக்கு மனமில்லை
கையிருப்பு காசையெல்லாம்
சேற்றிலே விதைத்துவிட்டு
தங்கத்தை அடகுவைத்து தவிடு வாங்கி
கால் நடைக்குபோட்டுவிட்டு
அறுவடைக்காய் காத்திருந்து காய்ந்ததனால்
சைனைடை தின்று தன் தாளியையே அறுத்துவிட்டான்
தண்ணீர் தன் மட்டத்தை தானே தீர்மானிக்கும்
நீர் உயர்ந்தால் மனிதனின் நிலை உயரும்
ஏ அறிவுலமே
1 கார்பனையும் 1 ஆக்சிஜனையும் சேர்த்து
விவசாயி சாக விஷம் செய்தீர்களே
2 ஹைட்ரஜனையும் 1 ஆக்சிஜனையும் சேர்த்து
ஏன் தண்ணீர் தயாரிக்கவில்லை
ஏ நகரத்து மாந்தர்களே
மேகம் குளிர்ந்தால் மழை வருமாம்
மரம் நடுங்கள்
ஏ ஏமாளி மக்களே
இன்னுமா நம்புகிறீர்கள் நல்ல தீர்ப்பு வருமென்று
சிந்தனையே செயலின் தொடக்கம்
அடுத்த தலைமுறைக்காய் சிந்திப்பவனை
தலைவனாக்குங்கள்
வாயில் வடை சுடுபவர்க்கு வாக்களிக்காதீர்கள்
தீர்ப்பை நீங்கள் எழுதி
அவனை செயல்படுத்த சொல்லுங்கள்
அதுவரை
கரும்பு கசந்திருக்கும்
பொங்கலின் அடுப்பில் பிணங்கள் வேகும்
காளைகளின் கால்தடங்கலை
ட்ராக்டரின் டையர் அழிக்கும்
பசுக்களின் பால் காம்புகளில்
பாக்கெட் பால் ரசாயணம் சுரக்கும்
பசிக்கும் வயற்றையெல்லாம்
ப்ளாஸ்டிக் அரிசி நிறப்பும்
பொங்கலோ! பொங்கல் !!