சாத்தானின் ஆட்சி
++++++++++++++++
"சாத்தான் வேதம் ஓதுகிறது"
முன்னல் முதல்வரைப்பார்த்து
இன்னால் முதல்வர்
சாத்தான் என்பதற்கு பிசாசநாதன்,
தீய சக்கதிகளின் ஒர் உருவகம்
என்கிறார்கள்
பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
என்பது அப்பர் வாக்கு
சாத்தான் என்பவன் நிஜமான ஓர் ஆள் என்பதாகவே
பைபிள் சொல்கிறது; அவன் காணக்கூடாத ஆவி மண்டலத்தில்
இருப்பதாக அது குறிப்பிடுகிறது. (யோபு 1:6)
ஆதாமுக்கும் ஏவால் காலத்திலிருந்தே
அறியவைத்தவனையும்
ஆசானையும் சாத்தனாக்கிய சமூகம்
மனிதனுக்கு மரன பயத்தை
தந்தவன் சாத்தான்
சாவிலிருந்து தப்பித்துக்கொள்ள
மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் கடவுள்
சமயம் சடங்கு, ஜாதி சம்பிராதயங்கள்
தானே முளைத்தது
கடவுள்கலாலும்
மரனத்தை வெள்ளமுடியவில்லை
தேவ குமாரனும், தேவ தூதர்களும்
தோற்ற இடம்
சாத்தனின் மரன முத்தத்தில்தான்
இங்கு சாத்தானின் ஆட்சி நடைபெருகிறது
கடவுளெல்லாம் வெறும் காட்சிகள்தான்
மருத்துவ அறிவு மரனத்தை
தள்ளி போடுகிறது
கடவுள் ஓர் கையாலாகாதவன்
பூ வைத்தவனை உலகம்
கண்டுகொள்வதில்லை
குண்டுவைத்தவனை
வலை வீசி தேடுகிறார்கள்
பூ வைத்தவனை உலகம்
போற்றாதவரை -இங்கு
சாத்தானின் ஆட்சிதான் நடைபெரும்



