ஆரிய இருட்டில் பூத்த
சூரிய சுயமரியாதை
மூட தமிழர்களை தத்தெடுத்ததால்
தந்தையான பெரியார்
வேத மூட்டைகளை காசியில் வெளுத்ததால்
பேத வேட்டைகளை அடித்து துவைத்தவர்
ஊரே வெள்ளையனுக்கு எதிராய் - நீ மட்டும்
உள்ளூர் கொள்ளையனுக்கு எதிராய்
சமூகம் ஒதிக்கிய சிறியார்க்கெல்லாம்
கருவரை காட்டிய பெரியார் நீ
மதம் தாண்டிய மகளீராய்
ஜாதி தாண்டிய மனிதனாய்
மதமழிக்க மதம் கொண்டாய்
எல்லொரும் மலருக்கு சாமரம் வீசும் போது
நீ மட்டும்தான் வேருக்கு வைத்தியரானாய்
விழுதுகளையும் பழுது பார்த்தாய்
இன்றோ
உன் இடம் நிரப்பப்படாமல்...
விழுதுகள் பழுதாய்...




















