அவ்வளவு அழுக்கா ?
இல்ல ஆட்சியாளர்களின்
அலட்சியக் கொழுப்பு
அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,
நேபாளத்திலிருந்து கஸ்தூரி,
சைனாவிலிருந்து புனுகு,
பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள்
முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும்
51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும்.
பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும்,
காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
அப்ப அழுக்க உருட்டி வைத்து
பிள்ளையார் பிள்ளையை
உருவாக்கிய சிவன் மனைவி
பார்வதி சாமி மேல
அவ்வளவு அழுக்கா ?
இல்ல எதச்சொன்னாலும் நம்மாளு
நம்புவாங்கன்னு எழுதியவனின் கொழுப்பு
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.
அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர்,
பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.
ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு
வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.
பீதாம்பரம் இல்ல
எதுல ஒற்றினாலும் நிக்காது
வசூல் பண்ற பணமெல்லாம்
திருட்டு காசு
வியர்க்காம என்ன செய்யும்
ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து
பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால்
திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம்,
அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம்
போன்ற வாசனைப் பொருட்கள்
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
இந்தியாவிற்குள்ளேயே அவதாரம்
எடுத்த சாமிக்கு
இந்திய பிரச்சனைகளையே
தீர்க்க முடியல அவ்வளவு நாற்றம்
தெலுங்கானா நாறுது
வாசனைக்கு
அன்னிய பொருட்கள் தேவையா
ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி,
இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை.
சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால்
ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை
செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
எத்தனை ஏழைப் பெண்கள்
தாலிக்குக்கூட தங்கமில்லாமல்
முதிர் கன்னியாகவே
வாழ்வை முடிக்கிறார்கள்
நகையெல்லாம் சேர்த்து வைங்க
எவனாவது படையெடுத்து வருவான்
ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை.
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை.
சூரிய கடாரி 5 கிலோ எடை.
பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும்
ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது.
இதன் மதிப்பு ரூ.100கோடி.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது
மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
கண்ணை திறந்து எதைப்பார்க்கிறார்னு தெரியல
நாட்டைப் பார்த்திருந்தால்
நாம்தான் வல்லரசு
வசூல மட்டுமே பாத்துட்டு
கண்ணை மூடிக்கிறார் போல
திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை
கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது.
செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.
உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால்,
இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள்.
அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு
பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது.
குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள்
பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
அலமேல்மங்கையின் உள்பாவாடையை
பயபக்தியுடனும் ஒழுக்கத்துடனும்
நெய்கிறார்கள். மக்கள்
ஆனால் அவரைத்தான் அவுசாரி வீட்டுக்கு
தூக்கிச்செல்கிறார்கள்
ஒழுக்கம்கெட்ட கடவுளை
வணங்கும் மக்களிடம்
எப்படி ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்
கொலையும் கொள்ளையும்
கற்பழிப்பும்தான் நாளிதலின் தலைப்புச்செய்தி