காமராஜர்
அரசியல் புத்தன்
அவதார புனிதன்
தொண்டில் அனுமன்
பொதுவாழ்வில் தூய்மை
தனிவாழ்வில் நேர்மை
மக்கள் நலம் சார்ந்து
சிந்தித்தவன்
அரசியல் ஞானி
போர்களத்தில் போராளியாயிருந்தும்
முனிவன் போல் வாழ்ந்தவன்
காமராஜர் ஓர் கருப்புத்தங்கம் -இது
விருதுநகர் பெற்றெடுத்த
விருட்சத்தின் வரலாறு
1903 ஜுன் 15ந்தேதி
குமாரசாமி சிவகாமி அம்மையாருக்கு
தேங்காய் வியாபாரியின்
மகனாய் பிறந்தார்
6 வயதில் தந்தையை இழந்தார்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டியவனுக்கு
6ஆம் வகுப்புக்குமேல்
பள்ளி செல்ல வசதியில்லை
தன் 16 வது வயதில்
காந்தியாரின் அழைப்பின் பேரில்
காங்கிரசில் சேர்ந்தார்
சுதந்திர தீயில்
தன்னையும் இணைத்தான்
தொண்டனாய் தொடங்கி
தொண்டாற்றி தொண்டாற்றியே
1940 ல் காங்கிரசின் தலைவனாகியவன்
1954ல் ஏப்ரல் 13ல்
முதலமைச்சராகி 9 ஆண்டுகள்
பணிசெய்து அந்த பதவிக்கே
இலக்கணமானவர்
தனக்கு எதிராக முதலமைச்சர்
பதவியில் நின்ற பக்தவட்சலம்,
சி.சுப்ரமணியம் இருவரையும்
தனது மந்திரிசபையில்
மந்திரியாக்கிய மகாமனிதர்
தனக்கு கிடைக்காத கல்வி
தரணிக்கு கிடைக்கச்செய்தவன்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டி
பசியோடுவரும் மானவர்களுக்கு
மதிய உணவளித்தார்
இனத்தை காட்டி கொடுத்தும்
உறவுகளை கூட்டிக்கொடுத்தும்
வைபாட்டிகளோடு வாழும் இந்த காலத்தில்
தன் தாயிக்கு கொடுத்துவந்த
மாதத்தொகை ரூபாய் 120 ஐ
முதலமைச்சர் ஆனபிறகும்
20 ரூபாய் கூட்டிக்கொடுக்காத
கொடுந்தூயவன்
அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய
நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு,
அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு
இவையெல்லாம் விவசாயம் வளர
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட
முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நேருவே எதித்த நெய்வேலி அனல்மின் திட்டம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும்,
நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும்
தமிழகத்திற்கு கொண்டு சேர்த்தார்
இளைஞர்களுக்கு வழிவிட
தலைவர்களை தொண்டர்களாக்கினார்
1963 ல் காந்தி பிறந்த தினத்தில்
தன் முதலமைச்சர் பதவியை துறந்தார்
1963 ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்
நேருவின் மறைவுக்குப்பிறகு
இந்தியாவின் இரண்டாம் பிரதமராக
சாஸ்திரியை 6 நாளில் தேர்ந்தெடுத்தார்
சாஸ்திரிக்குபிறகு காமராஜர்
பிரதமராவார் என பத்திரிக்கைகள்
எழுதியபோது உடனே மறுத்து
இந்திராவை பிரதமராக்கிய
ஒப்பனையற்ற மனிதன்
உண்மையும், எளிமையும் கொண்ட
உயர்ந்த உருவம்
1967 ல் தேர்தலில்
தான் பிறந்த மண்ணில்
துரோகத்தால் தோற்றுப்போனார்
இந்த கருப்பு நிலவுக்கு
தோல்வி நிழல் தொடங்கியது
15 ஆண்டுகள் தமிழ் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்
14 ஆண்டுகள் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்
9 ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர்
5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
இத்தனை பொறுப்புகளில் இருந்தும்
காமராஜர் இறந்தபோது அவரின்
சொத்து மதிப்பு 10 வேட்டி, 10 சட்டை
63 ரூபாய் மட்டுமே
வட்டச்செயலாளறுக்கு
வாய்க்கால் வரப்பெல்லாம் சொந்தம்
மாவட்டச்செயலாளர்கள்
மலைகளும் தீவுகளையும் சொந்தமாக்கும்
இந்த காலத்தில்
சுய நலமில்லா தூய உள்ளத்தோடு
தொண்டாற்றிய கருணைக்கடல்
1975 அக்டோபர் 2ல் தன் தலைவனின்
பிறந்த நாளில் கண்மூடி காலமானார்
மனித புனிதனுக்காக
வானம் அழுதது
காமராஜரோடு காந்தியம்
வெள்ளாடைபூண்டு
விதவையானது
அரசியல் புத்தன்
அவதார புனிதன்
தொண்டில் அனுமன்
பொதுவாழ்வில் தூய்மை
தனிவாழ்வில் நேர்மை
மக்கள் நலம் சார்ந்து
சிந்தித்தவன்
அரசியல் ஞானி
போர்களத்தில் போராளியாயிருந்தும்
முனிவன் போல் வாழ்ந்தவன்
காமராஜர் ஓர் கருப்புத்தங்கம் -இது
விருதுநகர் பெற்றெடுத்த
விருட்சத்தின் வரலாறு
1903 ஜுன் 15ந்தேதி
குமாரசாமி சிவகாமி அம்மையாருக்கு
தேங்காய் வியாபாரியின்
மகனாய் பிறந்தார்
6 வயதில் தந்தையை இழந்தார்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டியவனுக்கு
6ஆம் வகுப்புக்குமேல்
பள்ளி செல்ல வசதியில்லை
தன் 16 வது வயதில்
காந்தியாரின் அழைப்பின் பேரில்
காங்கிரசில் சேர்ந்தார்
சுதந்திர தீயில்
தன்னையும் இணைத்தான்
தொண்டனாய் தொடங்கி
தொண்டாற்றி தொண்டாற்றியே
1940 ல் காங்கிரசின் தலைவனாகியவன்
1954ல் ஏப்ரல் 13ல்
முதலமைச்சராகி 9 ஆண்டுகள்
பணிசெய்து அந்த பதவிக்கே
இலக்கணமானவர்
தனக்கு எதிராக முதலமைச்சர்
பதவியில் நின்ற பக்தவட்சலம்,
சி.சுப்ரமணியம் இருவரையும்
தனது மந்திரிசபையில்
மந்திரியாக்கிய மகாமனிதர்
தனக்கு கிடைக்காத கல்வி
தரணிக்கு கிடைக்கச்செய்தவன்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டி
பசியோடுவரும் மானவர்களுக்கு
மதிய உணவளித்தார்
இனத்தை காட்டி கொடுத்தும்
உறவுகளை கூட்டிக்கொடுத்தும்
வைபாட்டிகளோடு வாழும் இந்த காலத்தில்
தன் தாயிக்கு கொடுத்துவந்த
மாதத்தொகை ரூபாய் 120 ஐ
முதலமைச்சர் ஆனபிறகும்
20 ரூபாய் கூட்டிக்கொடுக்காத
கொடுந்தூயவன்
அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய
நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு,
அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு
இவையெல்லாம் விவசாயம் வளர
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட
முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நேருவே எதித்த நெய்வேலி அனல்மின் திட்டம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும்,
நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும்
தமிழகத்திற்கு கொண்டு சேர்த்தார்
இளைஞர்களுக்கு வழிவிட
தலைவர்களை தொண்டர்களாக்கினார்
1963 ல் காந்தி பிறந்த தினத்தில்
தன் முதலமைச்சர் பதவியை துறந்தார்
1963 ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்
நேருவின் மறைவுக்குப்பிறகு
இந்தியாவின் இரண்டாம் பிரதமராக
சாஸ்திரியை 6 நாளில் தேர்ந்தெடுத்தார்
சாஸ்திரிக்குபிறகு காமராஜர்
பிரதமராவார் என பத்திரிக்கைகள்
எழுதியபோது உடனே மறுத்து
இந்திராவை பிரதமராக்கிய
ஒப்பனையற்ற மனிதன்
உண்மையும், எளிமையும் கொண்ட
உயர்ந்த உருவம்
1967 ல் தேர்தலில்
தான் பிறந்த மண்ணில்
துரோகத்தால் தோற்றுப்போனார்
இந்த கருப்பு நிலவுக்கு
தோல்வி நிழல் தொடங்கியது
15 ஆண்டுகள் தமிழ் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்
14 ஆண்டுகள் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்
9 ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர்
5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
இத்தனை பொறுப்புகளில் இருந்தும்
காமராஜர் இறந்தபோது அவரின்
சொத்து மதிப்பு 10 வேட்டி, 10 சட்டை
63 ரூபாய் மட்டுமே
வட்டச்செயலாளறுக்கு
வாய்க்கால் வரப்பெல்லாம் சொந்தம்
மாவட்டச்செயலாளர்கள்
மலைகளும் தீவுகளையும் சொந்தமாக்கும்
இந்த காலத்தில்
சுய நலமில்லா தூய உள்ளத்தோடு
தொண்டாற்றிய கருணைக்கடல்
1975 அக்டோபர் 2ல் தன் தலைவனின்
பிறந்த நாளில் கண்மூடி காலமானார்
மனித புனிதனுக்காக
வானம் அழுதது
காமராஜரோடு காந்தியம்
வெள்ளாடைபூண்டு
விதவையானது









