Saturday, December 7, 2013

மனிதன் மாற்றிவிட்டான்


வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானத்தை மாற்றிவிட்டான் 
ஓசோன் கூரையில்
ஓட்டையை போட்டுவிட்டான்
காற்று முழுவதும்
கரும்புகை சேர்த்துவிட்டான்

வானில் கால்வைத்தான்
நிலவை விலைவைப்பான்

நடுக்கடல் அலையினிலே
நாட்டுக்கு எல்லைவைத்தான்

மீன் பிடிக்க வருவோர்க்கு
நடுக்கடலில் வலைவிரித்தான்

காற்றில் கலப்படம் செய்து
காதை தொலைத்துவிட்டான்

மலரும் மண்ணும் கொடியும் சோலையையும்
மாற்றித்தொலைத்துவிட்டான்

நிலைமாறாது குணம் மாறுவான்
பொய்யை நீதியென்று பேசுவான் தினம்
ஜாதியின் சங்கத்தில் கூடுவான்
பேதமே வேதமென்றோதுவான் அது
தேவனின் கவிதையாய் பாடுவான்

மனிதன் மாறவில்லை மதமும் மாறவில்லை

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
இரட்டை கோபுரத்தை எரித்தழித்தான்
பக்கத்து தேசத்தை பயப்படவைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
பாய்ந்து சென்று படையினை கொண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
பறவைகள் கொன்று கைபேசி கண்டான்
விஞ்ஞான சிலுவையில்
தானே நின்றான்
சுய நலம் கொண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறவில்லை மதமும் மாறவில்லை

இன்பமும் காதலும் செல்வத்தின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மதங்களின் மீதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் மாற்றிவிட்டானே

மனிதன் மாறவில்லை மதமும் மாறவில்லை

ஜன நாயகம் விற்பனைக்கு










சுண்டல் வாங்கியவனுக்கு சுருக்கு கயிறு
கடவுள் பெயர் சொல்லி காமம் விளையாடி
கொலை செய்தவனுக்கு விடுதலை
விசாரிக்கப்படாத சுவாமிகளெல்லாம்
வெளியே சுதந்திரமாய்

காரித்துப்புங்கள்
வெளுக்கட்டும் கருப்பாடைகள்

கடவுள், காவல், கல்வி, மருத்துவம்,
இரானுவம், பாரளுமன்றம்,
ஊடகம், உச்ச நீதிமன்றம்
எல்லாம் இந்தியாவில் தள்ளுபடி விலையில்
விற்பனையாகிறது

வசதியுள்ளவர்கள் வாங்கிவிட்டார்கள்
நாங்கள் ஓட்டுச் சாவடிகளில் கையேந்தி
கறைபடிய காத்திருக்கின்றோம்

வெளிச்ச விடியலில்


வாக்குறுதி விற்று
வசதியானவர்கள்
ஒவ்வோர் தேர்தலும்
இவர்களுக்கு ஜாக்பாட்
விளம்பர வெளிச்சத்தில்
வீதி கூட்டுவார்
வின்னோர்க்கு கேட்டிட
மேடை பேசுவார்
வாழ்க்கையை விற்று
வாங்கிய சுதந்திரம்
திருடர்கள் கையில்
சிறைபட்டுக்கிடக்குது
வெளிச்ச விடியலில்
இருட்டு விளக்கேற்றும்
ஆன்மீக அரசியல்
இருண்ட மனதில்
இருளை போக்க
விளையாட்டாய் விளக்கேற்றும்
இளசுகள்

வாழ்வு துளிர்க்கும்


கசந்தும் அது இனிக்கிறது
காய்ந்தும் அது துளிர்க்கிறது
சுமைகளாய் தொடர்கிறது
துன்பங்கண்டு சிரிக்கிறது
சூராவளியில் சுடர்கிறது
சுழலுக்குள் எழுகிறது
தோல்வியில் வெல்கிறது
இரவுகளில் விழிக்கிறது
இருளுக்குள்ளே மிளிர்கிறது
பிரிவினில் இணைகிறது
அருகிலிருந்தும் தொலைகிறது

பாலை செழித்திருக்கும்
பட்டப்பகல் குளிர்ந்திருக்கும்
பாராத முகமும்
பார்த்ததாய் நினைவிருக்கும்
பார்க்கும் முகத்திலெல்லாம்
காதல் முகம் படிந்திருக்கும்
தலையனை குடுத்தனத்தில்
தங்கமாய் கனவு வரும்
சின்னச்சின்ன நிகழ்வுகளில்
சில்லறையாய்
உயிர் துடித்திருக்கும்
வெளியே வெயிலடித்தால்
உள்ளே குடைபிடிக்கும்
கருப்பு வெள்ளைக்கூட
கலர் கலராய் கண்ணில் தோன்றும்

கசந்த பின்னே
ஐம்புலங்கள் செயலிழக்கும்
கருப்பு சூரியன்
காலையில் விடிந்திருக்கும்
முகமெல்லாம் முடிவளர்த்து
முகமூடியாய் முடிந்திராதே

தேவதைகள் தேடிவந்து
வரங்கொடுக்க ஏங்கும் மூடனல்ல
முட்டி மோதி
முளையெடுக்கும் அறிவு விதை
முயன்றவனுக்கு நாற்றங்கால்
முடங்கியவனுக்கு புதை குழி

சருகுகளுடன் சமரசம்
செய்பவனில்லை
பூக்களோடு புன்னகை செய்பவன்
நம்பிக்கையின் அதிபதி
இழந்தவனுக்கில்லை நிம்மதி!

சிகப்பாய் கிழக்கு வெளுக்கும்
இனிமை வாழ்வு துளிர்க்கும்

Sunday, November 10, 2013



சமூக விரோதிகள்
==============
உறக்கத்தில் ஏமாற்றுபவன்
திருடன்
விழித்தால் மாற்றிவிடலாம்

விழிப்பில் ஏமாற்றுபவன்
அரசியல்வாதி
5 ஆண்டுகளில் மாற்றிவிடலாம்

மயக்கத்தில் ஏமாற்றுபவன்
மதவாதி
தெரிந்தே திருடச்சொல்கிறோம்
சம்மதித்தே சரணடைகிறோம்
இல்லாத சாமிக்கும் பேய்க்கும்
எல்லாம் கொடுக்கிறோம்
பயம் காட்டியே
பணிய வைத்தவர்கள்
மாற மனமில்லாதவர்களாய்
மதங்களின் வாழ் நாள் அடிமைகளாய்

தீபாவளி
======
பூமியை சுருட்டி
கடலுக்குள் ஒளிந்த
அசுர மூடன்
(பூமிக்கு வெளியே கடலா)

கடலில் மூழ்கி
பூமியாய் மீட்க பன்றி அவதாரமெடுத்த
அதீத மூடன்
(கடலுக்குள் சண்டையிட பன்றியா? )

பூமியை காமம் கொண்டு பெற்ற
கடவுளின் பிள்ளைதான்
நரகாசுரன்
(கல்லைப்புணரும் கடவுள்
கடவுளுக்கு பிறந்தவன் அசுரனா)

அசுரனைப்பெற்ற அப்பனை தண்டிக்காமல்
கல்லைப்புணர்ந்த கடவுளை விட்டு விட்டு
கள்ளஉறவில் பிறந்த கணவனின் மகனைக்கொன்ற
கையாலாகாத பொண்டாட்டி பெண்கடவுள்

தலைமுறைகளை முட்டாளாய் நினைத்து
கதைச்சொன்ன முன்னோர்கள்
பாவம் காட்டுமிராண்டிகளாய்
இருந்த காலத்தில் சொன்னக்கதைகள்

மகனுக்கு பதிலாய் (கிருஷ்ணரை)
கனவனை கொன்றிருந்தாலாவது
அவதாரங்கள் மிச்சமாயிருக்கும்
தவறு செய்யும் கணவர்களுக்கு
பாடமாயிருந்திருக்கும்
மதத்தின் மீதான மானமாவது
காப்பாற்றப்பட்டிருக்கும்

காட்டுமிராண்டிகள் சொன்ன
கதையை கட்டியழும் நிகழ்கால இளசுகள்
காரணம் தெரியாமலேயே
திரிகளுக்கு தீ வைக்கும் தலைமுறைகள்

எதைப்பற்றியும் கவலைப்படாமல்
எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் முதலாளிகள்
விடுமுறையும் சலுகையும் கிடைத்தால்
எதைவேண்டுமென்றாலும் கொண்டாடும் இளசுகள்

தீபாவளி கதை கேட்ட காதுகளெல்லாம்
நம்மைக்காரித்துப்புகின்றன
நமக்குத்தான் வெட்கமே இல்லை
நம் கடவுள்கள் எவர்க்கும் ஒழுக்கமே இல்லை

காட்டுமிராண்டி காலத்தில் கதை சொன்ன
யூதர்களிடமிருந்து ஏசு கிருஸ்த்தவத்தை கண்டெடுத்தார்
பின் அவர்களே தவறுகளை உணர்ந்து
பழய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டை எழுதினார்கள்

நபிகள் இஸ்லாமை கண்டெடுத்தார்
தன் மதங்களை புதுப்பித்துக்கொண்டனர்
நாம்மட்டும்தான் மாற மறுக்கும் மனம் கொண்டவர்கள்
எருமை தோல்களைவிட தடித்த இதையம்

இந்துமதத்தில் இருந்து
சீக்கியமும் புத்தமும் பிறந்தது
வாளெடுத்தவனை பயத்தில் பஞ்சாப்பில் விட்டு விட்டு
அமைதியாய்ச்சொன்ன புத்தனை
நாடு கடத்திவிட்டோம்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை.
வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி,
ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது.
அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற
எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும்.
ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
இப்படி காரணம் சொல்லி
தீபாவளியை கொண்டாடுங்கள்
திருந்த முயலுங்கள்
இல்லை எனில் குழந்தைகளுக்காய்
குழந்தையாய் கொண்டாடிவிட்டு போங்கள்

எல்லா கொண்டாட்டங்களுக்குப்பின்னும்
நாம் எதையும் மாற்றிக்கொள்வதில்லை
கஸ்டப்பட்டு விரதம் இருந்து
சபரிமலைக்கு ஏறி
மலையவிட்டு இரங்கியதும்
மதுக்கடை வரிசையில் நிற்பவர்கள்


நவராத்திரி 

அறியாமை இருள் விலக
ஒன்பது நாட்கள்
அம்பிகை வழிபாடு செய்து
ஒளி பிறந்த பத்தாம் நாள்
விஜய தசமி

யாருக்கு ஒளி பிறந்ததென்று
எவனுக்கும் தெரியவில்லை
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அறியாமை இருளில் இருந்தோம்-அப்ப
ஒளி பிறக்கல

பல ஆண்டுகாலமாய்
ஆங்கிலயனுக்கு அடிமையாயிருந்தோம்-அப்ப
ஒளி பிறக்கல

சில ஆண்டுகள்
சுல்தான்களுக்கு அடிமையாயிருந்தோம்-அப்ப
ஒளி பிறக்கல

எல்லா கோயிலயும், சாமியையும்
கொல்லையடிச்சிட்டு போனாங்க-அப்ப
ஒளி பிறக்கல

பழமையும் அடிமையையும்
ஆதிக்க இருள் நீக்க
ஞான ஒளியாய்
புத்தன் வந்தான் அடித்து
வதைத்து, கொலை செய்து
அயல் நாட்டுக்கு அனுப்பிவிட்டோம்
அங்கபோயி அவன்
நம்மள கொல்றான்-அப்ப
ஒளி பிறக்கல
----------------------------------

நாளொன்றுக்கு
இருபத்தி நான்கு மணிகளின்
நடைமுறையில்

பகலின் அம்சம் சிவன்
இரவின் அம்சம் அம்பிகை

இரவெல்லாம் விழித்திருந்து
உலகுகாக்கும் தாய்க்கு
ஒன்பது நாள் திருவிழா....

உலகமென்றால்
எங்க சாமிக்கு இந்தியாமட்டும்தான்
அவதாரமெடுத்தாலும்
வடஇந்தியாவில் மட்டும்தான் எடுப்பார்கள்

நல்லா கொண்டாடலாம்
எல்லா கயவாளிகளும்
கைவரிசை காட்றது இரவினில்தான்
இரவெல்லாம் விழித்திருப்பவளுக்கு
இது ஏன் தெரிவதில்லை
------------------------------------------
பிரம்மனின் சாகாவரம் பெற்ற
அரக்கர்களை அழிக்க
அதற்க்கு சமமான
முப்பெரும் தேவியின்
சக்திகள்.....இச்சா சக்தி..கிரியா
சக்தி...ஞான சக்தி.....ஆக

துர்க்கைக்கு முதல் மூன்று நாள்
மகா லஷ்மிக்கு அடுத்த மூன்று நாள்
சரஸ்வதிக்கு கடைசி மூன்று நாள்..
கொண்டாட்ட வழிபாடுகள்.....

பிரம்ம சக்தி...பிரம்மாணி
விஷ்ணு சக்தி....வைஷ்ணவி
சிவன் சக்தி......மகேஸ்வரி
கர்த்திகேய சக்தி..கவுமாரி
இந்திர சக்தி..மாகேந்திரி
வராஹி சக்தி...வராஹி
பைரவ சக்தி..சாமுண்டா
நரசிம்ம சக்தி..நரசிம்மஹி

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன்
ஒன்பது தேவதைகளாகி..நவ ராத்திரிகளாயினர்...
சும்ப..நிசும்ப அரக்கர்களை ஒழித்து..தேவர்கள் காத்தனர்
மூவூலகம் காத்த
முப்பெரும் தேவிகளின்
இவ் அம்சங்களை

மூவூலகம் காத்தவர்களுக்கு
இந்த பூவுலகம்
காக்கத்தெரியலையே
-----------------------------------
முப்பெரும் தேவிகளும்
கல்வி..இசை..புகழ்..செல்வம்
தாணியம் தண்ணீர்..வெற்றி
தரும் சக்திகளை....

கல்வியில்ல, செல்வமில்லை
தாணியமில்லை கிரிக்கட்ட விட்ட
உலகலவில ஒன்றிலும் பதக்கமில்லை
தண்ணீர்க்காய் வரப்பு தொடங்கி
வாய்க்கால் நீண்டு
மாநிலம்தோறும் சண்டையோ சண்டை

கொலுவில் வைத்து
நவதாணிய சுண்டலிட்டு
போற்றிப்பாடும்
இரவுத் தாலாட்டு

பிரம்மன் ..விஷ்ணு..சிவன்..மூவரும்
முப்பெரும் தேவியருள் அடக்கம்

சக்தியை வழிபட்டாலே
சகலத்தையும் வழிபடுதலுக்கு
சமம்

மங்களகரமான திருநாளில்
மங்கலங்கள் தரும்

அலைமகள்..கலைமகள்..மலைமகள் எனும்
முப்பெரும் தேவியரை..விரதம் கொண்டு வணங்கி
வெறுப்பு,,பொறாமை,,,அறியாமை,,பேராசை..அனைத்தும் நீங்கி...
வளம் நலம்..பலம் ..பெறுவோம்

ஒன்னுமே புரியல தோழர்களே
இந்த மூனுமகளும் இருந்தும்
மேல சொன்ன எதுவும்
நம்ம நாட்டவிட்டு போகல
நமக்கும் ஆசத்தான்
வெறுப்பு,,பொறாமை,,,அறியாமை,,பேராசை..
அனைத்தும் நீங்க

சிந்தியுங்க தோழர்களே......


போக்கும்
பொழுதைவிட்டு குறை நீக்கு
======================
ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை
++++++++++++++++++++++++++
பிரம்மனின் மகள் சரஸ்வதி
மகளின் அழகில் மயங்கி
பிரம்மன் கற்பழிக்க முயன்றபோது
சரஸ்வதி பெண் மானாகி மாறி தப்பி ஓடுகிறாள்
பிரம்மன் ஆண் மானாகி துரத்துகிறார்
தவறு துரத்துகிறான்
இந்த கேடுகெட்டவனுக்கு
மரியாதை எதுக்கு
சிவன் வேடனாக மாறி
பிரம்மனை கொன்றுவிடுகின்றார்
தந்ததையை கொன்ற சிவனிடம்
தந்ததையின் உயிர் வேண்டி
தந்ததைக்கு மனைவியாகின்றாள்
இந்த மானங்கெட்டவள்

அவளுக்குத்தான் இன்று பூஜை
நன்றாக கொண்டாடுங்கள்
கலாச்சாரம் பேசும் நல்லவர்களே
எதர்க்காக கொண்டாடுகிறோம்
என்றே தெரியாமல்
விடுமுறைக்காகவும் முதலாளிகள்
வீசும் பொரிக்காகவும்
நன்றாக கொண்டாடுங்கள்


ஒழுக்கமில்லாத இந்த
சரஸ்வதியின் பொறுப்பில்தான்
கல்வி, கலை, விளையாட்டு
பன்பாடு மற்றும் வித்தை
இலாக்காக்கல் கொடுக்கப்பட்டுள்ளன
வித்தையின் பயன் தொழில்
தொழிலின் ஆதாரம் ஆயுதம்
அதனால்தான் இதை
ஆயுத பூஜை எங்கின்றோம்

ஒரு கடவுள் உள்ளவனெல்லாம்
உலகத்தை ஆள்கிறார்கள்
துறைக்கொரு கடவுளிருந்தும்
தெருவுக்கொரு தெய்வமிருந்தும்
துன்பத்தில்தான் இருக்கிறோம்

புத்தியை மறந்து கத்தியை துடைத்து
ஆயுத பூஜை கொண்டாடினோம்
சரஸ்வதியை யாரென்றே தெரியாத வெள்ளைக்காரன்
பீரங்கியால் சுட்டு நம்மை அடிமையாக்கினான்
இந்த தேசத்தில்தான் படிப்பறிவில்லாதவர்கள் அதிகம்
காசு உள்ளவனுக்கு மட்டுமே
சரஸ்வதி கல்வி கொடுக்கிறாள்

தொழில் செய்யும் வியாபாரி
விபூதி பூசி பொட்டுவைத்து
தராசு எடையை தப்பாய் அளக்கின்றான்
ஊரை ஏமாற்ற விபூதியும் பொட்டும்

இவ்வளவு கூத்தும் ஆர்ப்பாட்டமும்
அபிசேகமும் நடந்தும்
தனித்துறை பொறுப்புள்ள கடவுள்
இந்த இந்தியாவை
தொழில் கல்வி, கலை,
விளையாட்டு மற்றும் வித்தைகளில்
ஏன் பின் தங்கியே வைத்திருக்கின்றார்கள்

ஒன்று கடவுள் மேல் குற்றமிருக்கவேண்டும்
அல்லது கடவுளை வணங்குபவன்மேல்
குற்றமிருக்கவேண்டும் இப்படி
குறை சொல்லியே போக்கும்
பொழுதைவிட்டு குறை நீக்க
ஒன்று செயல்படாத கடவுளை மாற்று
இல்லையென்றால் கடவுளை கும்பிடுபவனை மாற்று


இந்தியா ஓர் ஏழை நாடு
இந்தியக்கடவுள்கள் வசதியானவர்கள்

ஏழுமலையானின் ஒரு மணி நேர
குளிக்கும் செலவு 
சுமார் ஒரு லட்ச ரூபாய்
அவ்வளவு அழுக்கா ?
இல்ல ஆட்சியாளர்களின் 
அலட்சியக் கொழுப்பு

அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, 
நேபாளத்திலிருந்து கஸ்தூரி, 
சைனாவிலிருந்து புனுகு, 
பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் 
முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, 
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 
51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். 
பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், 
காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

அப்ப அழுக்க உருட்டி வைத்து
பிள்ளையார் பிள்ளையை
உருவாக்கிய சிவன் மனைவி 
பார்வதி சாமி மேல
அவ்வளவு அழுக்கா ?
இல்ல எதச்சொன்னாலும் நம்மாளு
நம்புவாங்கன்னு எழுதியவனின் கொழுப்பு

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.
அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர்,
பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.
ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு
வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

பீதாம்பரம் இல்ல 
எதுல ஒற்றினாலும் நிக்காது
வசூல் பண்ற பணமெல்லாம்
திருட்டு காசு
வியர்க்காம என்ன செய்யும்

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து 
பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் 
திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், 
அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் 
போன்ற வாசனைப் பொருட்கள் 
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

இந்தியாவிற்குள்ளேயே அவதாரம்
எடுத்த சாமிக்கு
இந்திய பிரச்சனைகளையே
தீர்க்க முடியல அவ்வளவு நாற்றம்
தெலுங்கானா நாறுது
வாசனைக்கு
அன்னிய பொருட்கள் தேவையா

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, 
இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. 
சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் 
ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை 
செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

எத்தனை ஏழைப் பெண்கள்
தாலிக்குக்கூட தங்கமில்லாமல்
முதிர் கன்னியாகவே
வாழ்வை முடிக்கிறார்கள்
நகையெல்லாம் சேர்த்து வைங்க
எவனாவது படையெடுத்து வருவான்

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. 
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. 
சூரிய கடாரி 5 கிலோ எடை. 
பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் 
ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. 
இதன் மதிப்பு ரூ.100கோடி.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது 
மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

கண்ணை திறந்து எதைப்பார்க்கிறார்னு தெரியல
நாட்டைப் பார்த்திருந்தால்
நாம்தான் வல்லரசு
வசூல மட்டுமே பாத்துட்டு
கண்ணை மூடிக்கிறார் போல

திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை 
கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. 
செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். 
உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், 
இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். 
அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். 
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு 
பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. 
குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. 
வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் 
பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். 
ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

அலமேல்மங்கையின் உள்பாவாடையை
பயபக்தியுடனும் ஒழுக்கத்துடனும்
நெய்கிறார்கள். மக்கள்
ஆனால் அவரைத்தான் அவுசாரி வீட்டுக்கு
தூக்கிச்செல்கிறார்கள்
ஒழுக்கம்கெட்ட கடவுளை
வணங்கும் மக்களிடம்
எப்படி ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்
கொலையும் கொள்ளையும்
கற்பழிப்பும்தான் நாளிதலின் தலைப்புச்செய்தி

Thursday, September 26, 2013

காமராஜர்


அரசியல் புத்தன்
அவதார புனிதன்
தொண்டில் அனுமன்
பொதுவாழ்வில் தூய்மை
தனிவாழ்வில் நேர்மை
மக்கள் நலம் சார்ந்து
சிந்தித்தவன்
அரசியல் ஞானி
போர்களத்தில் போராளியாயிருந்தும்
முனிவன் போல் வாழ்ந்தவன்
காமராஜர் ஓர் கருப்புத்தங்கம் -இது
விருதுநகர் பெற்றெடுத்த
விருட்சத்தின் வரலாறு

1903 ஜுன் 15ந்தேதி
குமாரசாமி சிவகாமி அம்மையாருக்கு
தேங்காய் வியாபாரியின்
மகனாய் பிறந்தார்
6 வயதில் தந்தையை இழந்தார்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டியவனுக்கு
6ஆம் வகுப்புக்குமேல்
பள்ளி செல்ல வசதியில்லை
தன் 16 வது வயதில்
காந்தியாரின் அழைப்பின் பேரில்
காங்கிரசில் சேர்ந்தார்

சுதந்திர தீயில்
தன்னையும் இணைத்தான்
தொண்டனாய் தொடங்கி
தொண்டாற்றி தொண்டாற்றியே
1940 ல் காங்கிரசின் தலைவனாகியவன்
1954ல் ஏப்ரல் 13ல்
முதலமைச்சராகி 9 ஆண்டுகள்
பணிசெய்து அந்த பதவிக்கே
இலக்கணமானவர்

தனக்கு எதிராக முதலமைச்சர்
பதவியில் நின்ற பக்தவட்சலம்,
சி.சுப்ரமணியம் இருவரையும்
தனது மந்திரிசபையில்
மந்திரியாக்கிய மகாமனிதர்

தனக்கு கிடைக்காத கல்வி
தரணிக்கு கிடைக்கச்செய்தவன்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டி
பசியோடுவரும் மானவர்களுக்கு
மதிய உணவளித்தார்

இனத்தை காட்டி கொடுத்தும்
உறவுகளை கூட்டிக்கொடுத்தும்
வைபாட்டிகளோடு வாழும் இந்த காலத்தில்
தன் தாயிக்கு கொடுத்துவந்த
மாதத்தொகை ரூபாய் 120 ஐ
முதலமைச்சர் ஆனபிறகும்
20 ரூபாய் கூட்டிக்கொடுக்காத
கொடுந்தூயவன்

அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய
நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு,
அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு
இவையெல்லாம் விவசாயம் வளர

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட
முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நேருவே எதித்த நெய்வேலி அனல்மின் திட்டம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும்,
நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும்
தமிழகத்திற்கு கொண்டு சேர்த்தார்

இளைஞர்களுக்கு வழிவிட
தலைவர்களை தொண்டர்களாக்கினார்
1963 ல் காந்தி பிறந்த தினத்தில்
தன் முதலமைச்சர் பதவியை துறந்தார்

1963 ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்
நேருவின் மறைவுக்குப்பிறகு
இந்தியாவின் இரண்டாம் பிரதமராக
சாஸ்திரியை 6 நாளில் தேர்ந்தெடுத்தார்
சாஸ்திரிக்குபிறகு காமராஜர்
பிரதமராவார் என பத்திரிக்கைகள்
எழுதியபோது உடனே மறுத்து
இந்திராவை பிரதமராக்கிய
ஒப்பனையற்ற மனிதன்
உண்மையும், எளிமையும் கொண்ட
உயர்ந்த உருவம்

1967 ல் தேர்தலில்
தான் பிறந்த மண்ணில்
துரோகத்தால் தோற்றுப்போனார்
இந்த கருப்பு நிலவுக்கு
தோல்வி நிழல் தொடங்கியது

15 ஆண்டுகள் தமிழ் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்
14 ஆண்டுகள் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்
9 ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர்
5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்

இத்தனை பொறுப்புகளில் இருந்தும்
காமராஜர் இறந்தபோது  அவரின்
சொத்து மதிப்பு 10 வேட்டி, 10 சட்டை
63 ரூபாய் மட்டுமே
வட்டச்செயலாளறுக்கு
வாய்க்கால் வரப்பெல்லாம் சொந்தம்

மாவட்டச்செயலாளர்கள்
மலைகளும் தீவுகளையும் சொந்தமாக்கும்
இந்த காலத்தில்
சுய நலமில்லா தூய உள்ளத்தோடு
தொண்டாற்றிய கருணைக்கடல்

1975 அக்டோபர் 2ல் தன் தலைவனின்
பிறந்த நாளில் கண்மூடி காலமானார்
மனித புனிதனுக்காக
வானம் அழுதது
காமராஜரோடு காந்தியம்
வெள்ளாடைபூண்டு
விதவையானது


Saturday, September 14, 2013
















ஓணம் வாழ்த்துக்கள்
====================

மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில்
4 நபருக்கும் தூக்குத்தண்டனை
நாடே கொண்டாடிக்கொண்டுள்ளது

ஓர் திருமணத்திற்காய் அனந்தபுரம் செல்ல இரயில் ஏறினேன்
அந்த பெட்டியில் 80% கல்லூரி மாணவ மாணவிகள்
பெற்றவர்களுக்குத்தான் தன் மகள் மேல் எத்தனை பாசத்தின் பயம்
வழியனுப்ப வந்தவர்கள் கையசைத்து கிளம்பினார்கள்
இரயில் நகரத்தொடங்கியதும் ஆட்டமும், பாட்டமும், விசிலும் பறந்தது
இளசுகளின் கொண்டாட்டம் முதியவர்களை முகம்சுளிக்க வைத்தது
இவர்கள் மற்றவர்களின் நலன் விரும்பாதவர்களாக வளர்கிறார்கள்
தன் நலம் சுய விருப்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அம்மா கையசைத்து மறையும்வரை
அமைதியாக இருந்தவர்கள் நள்ளிரவு 2 மணி வரை ஆண் நன்பர்களை
அடிப்பதும், கிள்ளுவதும், ஆட அழைப்பதுமான அட்டகாசங்கள்
பாடல்களில் எல்லாம் ஆபாச அழைப்புகள் யாரோ,
யாரோ என்னோட புருசன், என் திமிருக்கு அரசன்...,
என்னை அனைப்பவன் யார், ஆழ்பவன் யார், மன்னவன் யார் போன்ற
கேள்விகள்  நிறைந்த பாடல்கள் மற்றும் குத்துப்பாடல்கள்
சரி எங்கே இந்த பெண்கள் தேடும் ஆண்மகன்கள் என்று தேடினேன்
அத்தனை ஆண் குரங்குகளும் கழிவறை பக்கத்தில் நின்று
தள்ளாடிக்கொண்டிருந்தார்கள் கழிவறையை
டாஸ்மார்க் கடை போல் மாற்றிவிட்டனர்
இளைய இந்தியா தனிமையின் சுதந்திரம் கிடைத்ததால் தடுமாறிக்கொண்டிருந்தது.

20 ஆண்டுகள் நான் பார்த்த அனந்தபுரம் வளரவேயில்லை
மக்களும், வாகனமும் பெருகிவிட்டபோதிலும்
சாலை மற்றும் இதர கட்டமைப்புகள் வளரவேயில்லை
இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும்
காட்சிகள் மாறவில்லை படித்த மக்களை முல்லைப்பெரியாறு
போன்ற பிரச்சனைகளை எழுப்பி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே
முட்டாளாக்கிவிட்டார்கள்.

இந்தி பாடல்களை மட்டுமே கேட்டு ரசித்த காதுகளில்
இளையராஜா வரவுக்குப்பின் தமிழிசை கேட்க தொடங்கினர்
எங்குபார்த்தாலும் தமிழ் பாடல்கள்
கல்யாணமண்டபத்தில் கொலவெரி பாடல் திரும்ப திரும்ப போட்டதால்
பாடலின் வரிகளை இன்றுதான் கூர்ந்து கேட்டேன்
அந்த மோசமான வரிகளுக்கு குழந்தைகள் அபி நயத்துடன் ஆடினார்கள்
தமிழ் பாடல்களுக்கு இந்த மாநிலமே ஆடியதில் மகிழ்ச்சி என்றாலும்
கலை சமூக பொறுப்பில்லாதவர்களிடம்
சிக்கியதால்தான் தலைமுறைகள் வீனாகிறார்கள்
நல்ல ஆட்சி செய்த மகாபலியை பாதாள உலகிற்கு அனுப்பிவிட்டோம்
இந்த படுபாவிகளிடம் மாட்டிக்கொண்டோம்
இது தான் தெய்வத்தின் தேசம் (திரு இழந்த அனந்தபுரம்)

ஓ மகாபலி மன்னனே பாதாள உலகிலிருந்து பூலோகதிற்கு ஓணம் பண்டிகையன்று தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக
கேரள மக்கள் நம்புகிறார்கள் வந்துபோகும்வரை அரசியல்வாதிகளின் கண்ணில் பட்டுவிடாதே
கேரள நன்பர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
கடவுள்
======

அச்சத்திற்கும்
பலவீனத்திற்கும்
படைக்கப்பட்டவன்
கடவுள்

தேவைகளுக்கு
தேடப்படுபவன்

பரிகாரங்களால்
பராமரிக்கப்படுபவன்

மறு ஜென்மத்தால்
மரனிக்காமல் இருப்பவன்

கடவுளின் சிலை
கானாமல் போனதால்
காவல் நிலையத்தின்
கதவு தட்டுபவர்கள்

போலியாக ஒர் கடவுள்
தேவையாயிருக்கிறார்

மருத்துவ மனைகளும்
காவல் நிலையங்களும்
நீதிமன்றங்களும்
கடவுள் மறுப்பாளர்களால்
நிரம்பி வழிகிறது

கடவுள்
எதிர்பார்ப்பின் உச்சம்
ஏமாற்றத்தின் எச்சம்
வாழ்வின் மிச்சம்

சிலருக்கு வியாபாரம்
பலருக்கு பங்குதாரர்


கண்டுபிடிக்கும்வரை ஆன்மீகம்
கண்டறிந்தால் அறிவியல்

அரசியல்வாதிக்கு ஆதாயம்
பலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு போதைவஸ்து

தன்னையறியாரின் தேடுதல்
தேடுதலில் தன்னையிழத்தல்
எங்கும் இருந்தும்
எங்கெங்கோ தேடும் பொருள்

பலவீனர்களின் பாதுகாவலன்
அன்னையின் வடிவில்
அன்பாய் இருப்பவன்
குழந்தை வடிவில்
குடியிருப்பவன்
இருந்தும் தேடுகிறோம்


Saturday, September 7, 2013












உடைந்த நம்பிக்கை
================
தேர்தல்
+++++++
விடிந்தாலும் விழித்திருக்கும்
வீதி விளக்குகள்
புதிதாய் எம் வீதியில்
பேரூந்து பிறப்பெடுப்பு
கப்பி பார்க்காத சாலைகளுக்கெல்லாம்
தார் போடும் அதிகாரிகள்
கூன் கிழவிகளையும்
கும்பிடுபோடும் இளசுகள்
ரேசன் கடைகளில்
எல்லாம் கிடைக்கிறது
தலைவர் சிலைகலெல்லாம்
மாலையோடு நிற்கிறது
காற்றுவந்து போன குழாய்களில்
நீர் வருகிறது
குழாயடியைச் சுற்றி
உடைந்த குடங்களுக்குப்பதிலாய்
உடையாத குடங்களும்
உடைந்த நம்பிக்கையும்தான்
நீயும் ஆண்டவன்தான்
+++++++++++++++++++

அகிலத்தை ஆண்டவர்கள்

ஆயிரம்பேர் உண்டு

நினைவில் நின்றவர்கள்
நிறைவாய் யாறுமில்லை

மண் வென்றவரெல்லாம்
மண்ணாய் போனார்கள்

பெண் கொண்டவரெல்லாம்
பெயர் தெரியாமல் போனார்கள்

மனம் வென்றோர் மட்டும்
மகத்தான புகழ் கொண்டார்கள்

ஆயிரம்போர் கண்ட
அலெக்சாண்டர் தன் 33 வயதில்
வைரசுக்கு மாண்டுபோனான்

ஐரோப்பாவை தன் ஆளுமைக்கு
கீழ் வைப்பதற்காய் 87 போர் வெற்றிகளை
சூடிய நெப்போலியன்

வாட்டர்லூவில் தோற்று
7 ஆண்டுகள் சிறைபட்டு
வயிற்று வலிக்கு செத்துப்போனான்

ஆரியர்கள் ஆளப்பிறந்தவர்கள் என
ஆர்ப்பரித்த ஹிட்லர்
யூதர்களை கொன்றுகுவித்து

போலந்து நாட்டின் மீது
குண்டு வீசி 2ஆம் உலகப்போருக்கு
வித்திட்டு 6 ஆண்டுகள் போர் நடந்தது

ஒருவனின் மண் ஆசையால்
97 லட்சம் பேர் இறந்தனர்
2.3 கோடி பேர் ஊனமுற்றனர்

1945 மே மாதம் 30ல் போர் முடிவில்
தற்கொலை செய்துகொண்டு
செத்தேபோனான்

செல்லாததையெல்லாம்
சேர்த்துவைத்த மனிதா
நீ சேர்ந்த இடத்தினிலா செலவு செய்தாய்

அன்பாயிருக்க மறந்து
அடுத்தவன் நலம் கெடுத்தாய்
தரங்கெட்டுத்தனிமையிலே செத்தொழிந்தாய்

பொல்லாததை பொழுதாக்கி
அல்லாதவைகளை அறமாக்கி
தனக்காய் வாழ்ந்து தாழ்ந்துபோனாய்

அடுத்தவர்க்காய் வாழ்ந்து அன்பையும்
அஹிம்சையும் போதித்த புத்தர், ஏசு, காந்தி,
நபிகள்தான் நம்மில் ஆண்டவர்கள்

நீயும் ஆண்டவன்தான்
அன்பாயிருந்தால்
அடுத்தவர் நலம் விரும்பி
னால்




தண்டவாளங்களே
சிலுவைகளானதால்
+++++++++++++++++

இரயில் தண்டவாளங்கள்
ஆங்கிலயரிடம் அடிமையாயிருந்ததின்
அற்புத பரிசு

கப்பிக்கு பிறந்த
இரும்பு விழுதுகள்

எத்தனை கட்டைகள்
இணைக்க முயன்றும்
இணைய மறுக்கும்
இரும்பு இதயங்கள்

நிலையங்கள்தோறும்
பிரிக்க நினைத்தாலும்
கைச்சேர்த்து நடக்கும்
இரட்டை பிறவிகள்

ஊருக்குள் வந்ததால்
கடிகாரத்தேவைகளை
சங்கூதி கெடுத்தவன்

ஆற்றுக்கு கரைகட்ட
மறந்த அரசியல்வாதிகளின்
வெள்ளத்தடுப்புகள்

கைகோர்த்து நடக்கவும்
கதை பேசி சிரிக்கவும்

பல ஊர்களுக்கு
காலை கடன் போக்கவும்

காதலை இரயில் ஏற்றவும்
காதலின் அடையாளமாகவும்

நம்பி வருவோரை
நகரம் அனுப்பவும்

நம்பிக்கையற்றோரை
நரகம் அனுப்பவும்

தண்ணீர் தற்கொலைகள்
குறைந்தே போயின

தண்டவாளங்களே
சிலுவைகளானதால்
மரனம் நிஜமென
மனதிலெழுது
============

உடல்

உடை மாற்றுவது போல்
உயிர்
உடல் மாற்றும் நிகழ்வு
கிழிந்த ஆடைக்காக
எந்த உடலாவது
கதரி அழுததுண்டா

நீ மட்டும் ஏன்
கண்ணீர் வடிக்கிறாய் மனிதா
மரனம் நிஜமென
மனதிலெழுது
உடல் மாற்றங்கள் நிறைந்தது

வளர்ச்சியுடையவையெல்லாம்
மரனிப்பது நிஜம்
உடை
உடுத்தாமல் வைத்திருந்தால்
மடித்துப் போகும்
உடுத்தினால்
கிழிந்து போகும்

உடலும் அப்படித்தான்
உடலுக்குத்தான் மரனம்
உயிருக்கோ
புதிய உடல்

தனி மனித ஒழுக்கத்தால்
மரனத்தை தள்ளிப்போடலாம்
கவனம் கொள்
ஆரோக்கியமற்ற உடல்களில்
உயிர் ஒட்டியிருப்பதில்லை

மனிதா
மரனத்தை தள்ளிப்போட
வேண்டுமா
உடலை பராமரி





















நேற்றைய நிழல்
=============

என் புன்னகையை பரித்து - உன்
கூந்தலில் சூடினாய்

நெஞ்சத்தை கிழித்து
பொட்டிடுக்கொண்டாய்

பட படத்த என் கண்ணீர் நதியில் - உன்
தாகம் தீர்த்துக்கொண்டாய்

ஐயோ பாவம்
அவனும் புன்னகைக்கிறான்

பரித்துவிடாதே
அவனிடமாவது உண்மையாயிரு

நம்பிக்கையோடு உன்
நேற்றைய நிழல்














கைம்பெண்
=========
பூவிருந்த காம்பு
சுடரிருந்த விளக்கு
விதையிருந்த பழம்
நிலவிருந்த வானம்
சுரமிருந்த கானம்
நதி நடந்த பாலை
விடுமுறையின் சாலை
கொடி படர்ந்த கொம்பு
அதர்க்கும் மறு ம(ன)ணமிருக்கு நம்பு