
தீபாவளி
பூமியை சுருட்டி
கடலுக்குள் ஒளிந்த
அசுர மூடன்
(பூமிக்கு வெளியே கடலா)
கடலில் மூழ்கி
பூமியை மீட்க பன்றி அவதாரமெடுத்த
அதீத மூடன்
(கடலுக்குள் சண்டையிட பன்றியா? )
பூமியை காமம் கொண்டு பெற்ற
கடவுளின் பிள்ளைதான்
நரகாசுரன்
(கல்லைப்புணரும் கடவுள்
கடவுளுக்கு பிறந்தவன் அசுரனா)
அசுரனைப்பெற்ற அப்பனைத்தண்டிக்காமல்
கள்ளஉறவில் பிறந்த கனவனின் மகனைக்கொன்ற
கையாலாகாத பொண்டாட்டி பெண்கடவுள் !!
தலைமுறைகளை முட்டாளாய் நினைத்து
கதைச்சொன்ன முன்னோர்கள்
மகனுக்கு பதிலாய்
கனவனை கொன்றிருந்தாலாவது
அவதாரங்கள் காப்பற்றப்பட்டிருக்கும்
மதம் மீதான மானம்
மிச்சமாயிருக்கும்
தீபாவளி கதை கேட்ட காதுகளெல்லாம்
காரி துப்புகின்றன

