Wednesday, December 28, 2011

குழப்பத்தின் குரு நாதர் - ஓஷோ






















மறுத்ததாய் வெறுத்ததாய்
நடித்தத் துறவிகளின்
துகிளுரித்த காமம்

ஆசையடக்கிய ஆன்மிகத்திற்கு நடுவே
ஆசைப்படவைத்த
முதல் குரு

காமத்தின் முடிவிலிருந்து
கடவுளை தேடியோர் மத்தியில்
காமத்திலிருந்து கடவுளை தேடியவன்

கடவுளற்ற ஆன்மீகம்
கட்டற்ற சுதந்திரம் - மாற்றாருக்கு நீ
குழப்பத்தின் குரு

கடலாய் சுதந்திரம் கொண்ட
காமத்தை சுமந்த உன் கொள்கையால்
உலகம் உருண்டு உன் காலடியில் கிடந்தது

காமத்தை கொண்டாட
கடவுளை எளிதாக்க
கூடிய கூட்டம் கண்டு

பழைய மதவாதிகள் கொண்ட பயம்
உன் கால்தடம் பதிய
21 நாடுகளில் தடா

உலகம் சுற்றிய பின் தான்
நம் நாட்டு சகிப்புத்தன்மை புரிந்தது உனக்கு

திரும்பும் திசையெங்கும்
சித்திரை திருவிழாக்கள்
தெய்வீகம் ஆர்பரிக்கும்

மைக்செட் கட்டிய
மார்கழி கொண்டாட்டம்
மாற்று மதத்தவர் காதுகள் கிழித்தெடுக்கும்

ஹோலி பண்டிகை வந்தால்
அடுத்தவர் மீது சாயம் பூசி
அத்துமீறும் அநியாயம்

ஆனாலும் எமக்கு
எம்மதமும் சம்மதம்
உம்மதமும் சம்மதம்

எங்களின் மத சகிப்புத்தன்மைக்கு
ஒர் சாட்சி

சிவனைத்தவிர வேறோர்
தெய்வம் உண்டென்று சொல்லும்
அறிவ்ற்றவர்களை கண்டு நான் அஞ்சுவேன்

"புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்!
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றைவார் சடை எம் அண்ணல் கண்ணுதல்
பாத நண்ணி
மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற்
கற்றில்லாத அவரைக் கண்டால் அம்ம!
நாம் அஞ்சும் ஆறே"


என்ற மாணிக்கவாசகரின்
சிவனைப்புகழ்ந்த திருவாசகத்தை
இளையராஜாவின் "ஆரோட்டா"வை

வெளியிட்டது ஓர்
கத்தோலிக்க கிருத்துவ பாதிரியார்

நீயோர் ஆன்மீக அணுகுண்டு
ஆன்மீக அனாதைகளையும்
கடவுளை வெறுத்தவர்களையும் கூட
காமத்தால் இணைத்தவன்.

Tuesday, December 27, 2011

கர்த்தரே நீ வருவாயென...

















தொழுவத்தில் நீ பிறந்தாய் - உலகே

உனை தொழுவதற்காய்

மன்னிப்பையே மார்க்கமாக்கியவனே

நாங்கள் தவறு செய்வதையே

தவமாக்கிக்கொண்டோம்

அறைந்தவனையும்

அன்பு காட்டச்சொன்னவனே

கன்னம் சிவக்க
கதறி அழுகின்றோம்

கர்த்தரே நீ வருவாயென...

Saturday, November 26, 2011

உம் உயிர்த்துளிகள் சுனாமிகளை சுமந்து வரும் (பிரபாகரன்)

















நீ பிறந்த நாள்
குள்ள நரிகளின்
கொட்டமடங்கிய நன்னாள்

நம்மினம் காக்க
வரிப்புலி எழுந்து
வென்றதும் இன்னாள்

உன்னை புதைத்ததாய்
சொல்கிறார்கள்
நீ விதைக்கப்பட்டிருக்கின்றாய்
புத்தம் பூத்த பூமியில் இன்று
யுத்தம் பூத்தத் தாமரையா?

தேயிலை கிள்ளி
செழிப்பாக்கிய நாட்டில்
சிங்கள நாய்கள் கிள்ளுக்கொழுந்தாய்
கிள்ளியெறிந்தனரே !

வல்லரசுகளின் துணையோடு
வரிப்புலிகள் வீழ்ந்ததுவோ ?

நந்தவனத்தை நாசப்படுத்தி
வாய்க்கால் வரப்பெல்லாம்
மாமிச அறுவடை!

பனிகளை சுமந்த
பூக்களும் புற்களும்
இரத்தத்துளிகள் சுமந்தன !

வண்டு பறந்த
சோலைகலெல்லாம்
குண்டு பறந்து திரிந்தன !

தென்றல் தழுவிய
தேசம் எங்கும்
மரண வாடை வீசின

மீன்கள் ஒதுங்கும் கரைகளில் எங்கும்
தமிழனின் பிணங்கள்

எங்களின் கார்காலம்
இரத்தத்தூரலோடு தொடங்கியதே?

பட்டுப்போன மரங்களுக்கிடையே
நட்டுவைத்த எம்பிணங்கள்

சுள்ளிப்பொறுக்கிய காடுகளிளெல்லாம்
பிணங்களை பொறுக்குகிறோம்

கூறு கட்டி பிணங்களை
குழிக்குள் விதைக்கிறோம்

இனமும் மொழியும்
விடியலையெட்டும்

சுதந்திரம் பேசும்
குரலினிக்கட்டும்


சொந்தங்கள் பார்த்து
நெஞ்சம் பனிக்கட்டும்


கடலின் பெருவெளியில்
கரைந்த எம் உயிர்த்துளிகள்
சுனாமிகளை சுமந்து வரும்

Tuesday, November 22, 2011

எங்குதான் தொலைந்தீர்கள்??

என் பள்ளி தோழர்களே...
எங்குதான் போனீர்கள்!!
இந்த விஞ்ஞான விருட்ச்சத்தின்
வெளிச்ச்த்தில் கூட காணவில்லையே....
யார் யாரோ முகம் தெரியாதவர்கள்கூட
என் நண்பர்களாகிறார்கள்
அகம் தெரிந்த நீங்கள் எங்குதான் தொலைந்தீர்கள்??
எங்கோ அமைதியாய்...
வாழ்க்கையை இயல்பாய்...
அனுபவித்துக்கொண்டிருப்பீர்கள்...
இந்த விளம்பர வெளிச்சத்தில்
தன்னத்தனியாய் நானும்
என் அகம் தெரியா நண்பர்களும்

பேய்களும் நல்லதே

பேஸ் புக்கெனும்
பேய் பிடித்தாட்டும் நண்பர்களே
வரப்பு தாண்டும் கண்ணிகளும்
வடிகால் தேடும் வாய்க்கால்களும்
பொங்கிவரும் புது புனலும்
சுனாமி பேரலைகளுமாய்
பேஸ் புக் நிரப்பும்
படைப்பாளிகளே
உங்கள் வேலை, கடமை, படிப்பை
புறந்தள்ளாதீர்
எல்லைக்குள் இருந்தால்
பேய்களும் நல்லதே

Monday, November 21, 2011

கை நழுவிய பின் தான் கையிருப்பின் மகத்துவம் புரிகிறது


மாடத்தில் விளக்கேற்றி
மணல் பரப்பிய கூடைக்குள்
அப்பாவின் காலடி தேடும்
அப்பாவி அம்மா

காசுக்காகவும் காரியம் நடத்தவும்
கால்பிடித்தவர்கள் இன்று காணாமல் போனார்கள்

கால்களைவிட கால் தடங்களை
போற்றும் உலகமிது
கை நழுவிய பின் தான்
கையிருப்பின் மகத்துவம் புரிகிறது

அழுத விழிகளில் அறுபது ஆண்டு
நினைவுகள் வழிந்துகொண்டிருந்தன
நீண்ட நினைவு மெளனத்தில்
வெடித்த விம்மல்கள் முந்தானையை
ஈரமாக்கிகொண்டிருந்தது...

குவாட்டரும் சிகரெட்டும்


அள்ளிக்கொடுத்ததில் நீ தாராளம்
சொல்லிக்கொடுத்ததும் ஏராளம்
படித்த புத்தகங்கள் எத்தனை
நீ சுற்றித்திரிந்த நாடுகள்தான் எத்தனை
நீ சாதித்தவைதான் எத்தனை, எத்தனை
ஊரே எதிர்த்த
போதும் சித்திரையில்
தோழர்களை அழைத்து
தப்படிக்க வைத்தாய் அப்போது
கலைந்தது ஊராரின் நித்திரை

பள்ளி பருவத்திலே
பசங்க பயம் போக்க
ஐய்யனார் கண் பிடுங்கி
அரசமரத்தடியில்
கோலியாடியவன் நீ

அச்சம் தவிர் எனும் அவ்வையின்
மொழி கேட்டு
ஐய்யனார் வாளை

பேரீச்சை பழத்திற்கு
பண்டமாற்றியவன்

ஆனால்
உனக்கு பிடித்ததாய் சுடுகாட்டில்
குவாட்டரும் சிகரெட்டும்

Thursday, November 17, 2011

அப்பா உனக்கு நான் கொள்ளி வைக்கவில்லை




















அப்பா உனக்கு நான்
கொள்ளி வைக்கவில்லை
சகவாசத்தில் தொடங்கிய பழக்கம் ஏனோ
சாகும்வரை தொடர்ந்தது
சோகத்திற்கும், சுகத்திற்கும்
தும்மளுக்கும், இறுமளுக்குமாய்
தொட்டதற்கெல்லாம் துணை கொண்டாய்

காசும், பதவியும்
வரட்டு கவுரவமும்
கை விரலில் புகையாய் கரைய
பாசம் காட்டத்தெரியாத வேசத்தோடு
நீ வாழ்ந்த வாழ்க்கை

ஊரில் பலபேருக்கு நீ வழிகாட்டி
உன் இற்ப்பு செய்திகேட்டு சோகத்தை
புகைத்துக்கொண்டுள்ளனர்

நோய் வந்தபின் நீ புகைக்கவில்லை
தீர்ப்பு வந்தபின் திருந்தி பயனென்ன
உன் தலைமுறை திருந்தட்டும்
இன்று படமாய் இருப்போர்க்கு பாடமானாய்

அப்பா உனக்கு நான்
கொள்ளி வைக்கவில்லை
உன் உயிருக்கு நீயே
வைத்துக்கொண்டாய் கொள்ளி.

Monday, November 14, 2011

சாமியே ... சரணம் பொய்யப்பா ...

சாமியே ...
சரணம் பொய்யப்பா ...

ரம்பையின் வாரிசு மகிஷியை
வதம் செய்ய பெண்ணுரு கொண்ட விஷ்னு
சிவனை மயக்கி பெற்ற மகன்
ஹரிஹர சுதன்

அழகிய பெண்னென்றாள்
ஆண்டவனுக்கும் அறிவிழக்குமோ ?

இரு குறைகளுக்கு
பிறந்த முழு நிலா


ஆணும், ஆணும் கூடி
சூதும் சூழ்ச்சியும் கைகோர்த்த
பெண் பித்தனுனுக்கு பிறந்தவன்
பெண் வெறுத்தான்



மஞ்சள் மாதாவை
கன்னியாக்கி காடேறி விட்டவனை
காண வருகிறோம்
சரணம் ஐயப்பா

பாவமூட்டைச்சுமந்து வந்தோம்
ஐய்யப்பா ...!
மறுபடியும் பாவம் செய்வோம்
சரணம் பொய்யப்பா ...

ஆண்டுக்காண்டு கூட்டம் பெருகுது
ஐயப்பா.,.!!
நாட்டில் குற்றம் குறைகளும் நிறைஞ்சு போச்சு
சரணம் பொய்யப்பா ...

விரதம் இருந்து மலையேறுகிறோம்
ஐயப்பா ...!!!
இறங்கியதும் டாஸ் மார்க் நிறையுது
சரணம் பொய்யப்பா ...

அன்னதானம் செய்து வந்தோம்
ஐயப்பா ...!!!
நாட்டில் பசி பட்டினி தீரவில்லை
சரணம் பொய்யப்பா ...

தண்ணீர் பந்தல் திறந்து வைத்தோம்
ஐயப்பா ...!
நதி நீர் பிரச்சனை தீரவே இல்லை
சரணம் பொய்யப்பா ...

ஜாதி மறந்து சரணம் சொன்னோம்
ஐயப்பா ...!!
ஜாதி சண்டை உயிர்கள் தின்னுது
சரணம் பொய்யப்பா ...

தேவைகளை வேண்டி வந்தோம்
ஐயப்பா ...!!!
தேவை தீர்ந்ததும் உனை மறந்தோம்
சரணம் பொய்யப்பா ...

ஆளும் வர்க்கம் எங்களை கண்டு கும்பிடு போடுது
ஐயப்பா ...!!!
இறங்கி வந்ததும் அடிமையானோம்
சரணம் பொய்யப்பா ...

தன்னையும் ஏமாற்றி, உன்னையும் ஏமாற்றி,
உலகையும் ஏமாற்ற
ஒரு கூட்டம் வருகுது சரணம் பொய்யப்பா ...

தன்னையுமறிந்து உன்னையுமறிய
உலகம் நலம்பெற சில சாமிகள் வருகுது
சரணம் மெய்யப்பா ...

Tuesday, November 1, 2011

பாலைவனங்கள் பசியோடிருக்கின்றன (இளையராஜா)


















நீ மீட்டிய வீணை
விரகெரித்ததோ
எத்தனை இதயங்களுக்கு
சுகராகம் பாடினாய்
சோகம் உன் வாசலில்
நீள் துயில் கொண்டதே

பல்லவி பிரிந்த சரணமாய்
தாளம் தப்பிய ராகமாய்
உனக்குள் ஓடிய ஜீவ நதி
வரண்டு விட்டதே

இப்படியெல்லாம் புலம்பியழ
சராசரி இல்லை
நீ ஞானி

விரகெரித்த வீணை
சுரம் மீட்டும்
பல்லவியே சரணமாய்
தாளமே ராகமாய்
ஜீவா என்ற ஜீவ நதி
உனக்குள் ஓடிக்கொண்டே

முன்பைவிட புதிய வேகமாய்
புதிய எல்லைகளையும்
தாண்டி

உன்னால் தாகம் தீர்த்த
பாலைவனங்கள்
பசியோடிருக்கின்றன
உன் சோகம் தீர்த்து
புறப்ப்படு...

Tuesday, October 25, 2011

கதை கேட்ட காதுகளெல்லாம் காரி துப்புகின்றன (தீபாவளி)


தீபாவளி
பூமியை சுருட்டி
கடலுக்குள் ஒளிந்த
அசுர மூடன்
(பூமிக்கு வெளியே கடலா)

கடலில் மூழ்கி
பூமியை மீட்க பன்றி அவதாரமெடுத்த
அதீத மூடன்
(கடலுக்குள் சண்டையிட பன்றியா? )

பூமியை காமம் கொண்டு பெற்ற
கடவுளின் பிள்ளைதான்
நரகாசுரன்
(கல்லைப்புணரும் கடவுள்
கடவுளுக்கு பிறந்தவன் அசுரனா)

அசுரனைப்பெற்ற அப்பனைத்தண்டிக்காமல்
கள்ளஉறவில் பிறந்த கனவனின் மகனைக்கொன்ற
கையாலாகாத பொண்டாட்டி பெண்கடவுள் !!

தலைமுறைகளை முட்டாளாய் நினைத்து
கதைச்சொன்ன முன்னோர்கள்

மகனுக்கு பதிலாய்
கனவனை கொன்றிருந்தாலாவது
அவதாரங்கள் காப்பற்றப்பட்டிருக்கும்
மதம் மீதான மானம்
மிச்சமாயிருக்கும்

தீபாவளி கதை கேட்ட காதுகளெல்லாம்
காரி துப்புகின்றன

Saturday, October 22, 2011

மன இருளை நீக்கும் மகா தீபம் ஏற்றட்டும் (தீபாவளி)


















தீய ஒலி
எதை கொண்டாடுகிறோம் என்றே
தெரியாத ஓர் தலைமுறை

காற்றை கரியாக்கி, காதை செவிடாக்கி
அடுத்தவர்மீது அத்துமீறும் ஆர்ப்பாட்டம்
அணிலும் பூனையும் அங்கும் இங்கும் ஓடி
எங்கோ ஒளிந்து கொண்டன
பறவைகள் பயத்தில்
பக்கத்து தேசத்திற்கு பறந்ததோடிவிட்டன
வீட்டுப் பெரியவர்கள் தான் செய்ததை
தலைமுறை செய்வதால் தாங்கிக்கொண்டனர்
எவன் செத்தான்னு தெரியாமலே
திரியில் தீ வைக்கும் சிறுசுகள்

சம்பளத்திற்கும் போனசுக்கும் சண்டை நடக்குது
முதலாளி வீட்டில் லட்சத்திற்கு பட்டாசு வெடிக்குது

நம் நாட்டில் மாற்று மதத்தவற்குதான்
எவ்வளவு சகிப்புத்தன்மை
தீபஒளி என்று விளக்கம் சொல்லும்
புத்திசாலிகள் வீட்டிலும் தீபம் எரியவில்லை

இருப்பவன் வீட்டு ராக்கெட்
ஏழையின் கூரையை எரித்துக்கொண்டுள்ளது

இனியாவது தீபம் ஏற்றுவோம்
ஒலியற்ற மத்தாப்பூக்கள்
எல்லோர் வீட்டிலும் பூக்கட்டும்
மன இருளை நீக்கும்
மகா தீபம் ஏற்றட்டும்

உங்களுக்காய் உழைப்பவரை மறந்துவிட்டு
பெருமைக்காக காசை கரியாக்காதீர்

Wednesday, October 19, 2011

முருங்கை விதையில் முளைத்த மூங்கில் காடே - பாரதியார்


முருங்கை விதையில் முளைத்த
மூங்கில் காடே

அக்ரகாரத்துக்கு நீ அபிஷ்ட்டு
மழித்த முகங்களுக்கிடையே
விரைத்த மீசை வைத்த வேங்கை நீ

கரும்புக்காட்டுக்கு காவல் நின்ற
இரும்புக்கோட்டை நீ
வெள்ளையனை வெளியேயும்
வறுமையை வீட்டுக்குள்யேயும்
வார்த்தை வாளேடுத்து போராடிய ராஜகவி நீ

பக்தி பழமாயிருந்த
தமிழ் கவிதைகளின் பாதை மாற்றி
கடவுளை மிரட்டிய காவியப் பாடகன் நீ

சுய நலமில்லாதவன், சூது மறந்தவன்
தமிழுக்கு வந்த தவப்புதையல்
உறவுகள் ஒதுக்கிய போதும்
காக்கை குருவிகளை சொந்தமாக்கியவன்

உயிர் பிதுக்கி ஒளி செதுக்கிய
ஓவியக்கவிஞன்
எட்டயப்புரத்து எரிமலை
மின்னல் வார்த்தைகளில்
மின்சார கவி படைத்த கவிமலை
உன் வெடிகுண்டு கவிதைகளால்
வெள்ளையனின் பீரங்கிகளையும் வேர்க்கவைத்தவன்

புதுக்கவிதையின் பிதாமகன்
சமகால கவிஞர்களின் முகவரியழித்தவன்
வள்ளுவனின் வாரிசாய்
கம்பனுக்கு பிறகு வந்த தனிகாட்டுராஜா

பாடுபொருள், பாடும்முறை மாற்றிய
சரித்திரக்கவிஞன்
உன் இறுதி யாத்திரைக்கு மனிதர்களே இல்லையாம்
வராத நாய்களை விட உனக்கு
விசிறி வீசிய ஈய்களே மேல்

நீயே கம்பீரக்கவி, ஜீவ நதி
இறந்தும் கேட்கும் உன் புகழ்ராக சுதி

Wednesday, September 21, 2011

Sunday, September 18, 2011

கருவரை காட்டிய பெரியார்


ஆரிய இருட்டில் பூத்த
சூரிய சுயமரியாதை

மூட தமிழர்களை தத்தெடுத்ததால்
தந்தையான பெரியார்

வேத மூட்டைகளை காசியில் வெளுத்ததால்
பேத வேட்டைகளை அடித்து துவைத்தவர்

ஊரே வெள்ளையனுக்கு எதிராய் - நீ மட்டும்
உள்ளூர் கொள்ளையனுக்கு எதிராய்



சமூகம் ஒதுக்கிய சிறியார்கெல்லாம்
கருவறை காட்டிய பெரியார் நீ

மதம் தாண்டும் மகளிர்க்காய்
ஜாதி தாண்டும் மனிதர்க்காய்
மதமழிக்க மதம் கொண்டாய்

எல்லோரும் மலருக்கு சாமரம் வீசும் போது
நீ மட்டும்தான் வேருக்கு வைத்தியரானாய்
விழுதுகளையும் பழுது பார்த்தாய்

இன்றோ
உன் இடம் நிரப்பப்படாமல்...
விழுதுகள் பழுதாய்...