அடிமை ஆடுகளுக்காய்
நரிகள் நாட்டாமை
செய்கின்றன
நாட்டு மருந்து கடை வைத்திருந்தவரின் வாரிசுகள்
இன்று நாட்டின் பணக்காரர்களின் வரிசையில்
பட்டியலிடுகிறார்கள்
உழைத்து வளர்ந்திருந்தால் ஊர் காரனென்று
பெருமை பட்டிருக்கலாம்
ஊரை வளைத்து உலையில் போட்டுள்ளனர்
தவறு செய்து தண்டனை பெற்று
சிறை சென்றதெல்லாம்
தலைவனாகுவதற்கு தகுதியாகிவிட்டன
பூசாரிகளெல்லாம் கடவுளாய்
அவதாரமெடுத்துவிட்டனர்
சாமியார்களெல்லாம் சல்லாப வகுப்பெடுக்கிறார்கள்
தெய்வமே திருடனாகியப்பின்னே
கோயிலுக்கும் கற்பகிரகத்திற்கும்
மதிப்பிங்கேது
தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள்
தலைமைப்பதவியில் இருந்தால்
தகரங்கள் தங்கமாகின்றன
குப்பைகளே கோபுரங்களாகியதால்
முடை நாற்றம் இங்கு
மூக்கைத்தொலைக்கிறது
தலைமையின் தனிமனித பலவீனம்
பல தலமுறைகளை தடுமாறவைத்துவிட்டது
எம்ஜிஆர் மிச்சம் வைத்ததை ஜெயலலிதா உச்சம் தொட்டார்
தலைவனும் கடவுளும் இல்லாமல் தமிழனின்
தனிமனித வாழ்வே முடிவதில்லை
எவன் காலையாவது கழுவி குடிக்கவேண்டும்
அது கல்லாகவும் இருக்கலாம் பிணமாகவும் இருக்கலாம்
தலைவனுக்காக தலைமுறை
தவம் கிடக்கிறது
நரிகள் நாட்டாமை
செய்கின்றன
நாட்டு மருந்து கடை வைத்திருந்தவரின் வாரிசுகள்
இன்று நாட்டின் பணக்காரர்களின் வரிசையில்
பட்டியலிடுகிறார்கள்
உழைத்து வளர்ந்திருந்தால் ஊர் காரனென்று
பெருமை பட்டிருக்கலாம்
ஊரை வளைத்து உலையில் போட்டுள்ளனர்
தவறு செய்து தண்டனை பெற்று
சிறை சென்றதெல்லாம்
தலைவனாகுவதற்கு தகுதியாகிவிட்டன
பூசாரிகளெல்லாம் கடவுளாய்
அவதாரமெடுத்துவிட்டனர்
சாமியார்களெல்லாம் சல்லாப வகுப்பெடுக்கிறார்கள்
தெய்வமே திருடனாகியப்பின்னே
கோயிலுக்கும் கற்பகிரகத்திற்கும்
மதிப்பிங்கேது
தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள்
தலைமைப்பதவியில் இருந்தால்
தகரங்கள் தங்கமாகின்றன
குப்பைகளே கோபுரங்களாகியதால்
முடை நாற்றம் இங்கு
மூக்கைத்தொலைக்கிறது
தலைமையின் தனிமனித பலவீனம்
பல தலமுறைகளை தடுமாறவைத்துவிட்டது
எம்ஜிஆர் மிச்சம் வைத்ததை ஜெயலலிதா உச்சம் தொட்டார்
தலைவனும் கடவுளும் இல்லாமல் தமிழனின்
தனிமனித வாழ்வே முடிவதில்லை
எவன் காலையாவது கழுவி குடிக்கவேண்டும்
அது கல்லாகவும் இருக்கலாம் பிணமாகவும் இருக்கலாம்
தலைவனுக்காக தலைமுறை
தவம் கிடக்கிறது






